முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்ஃபாதர் - கொண்டாட்டம் மற்றும் மரணம்

அண்மையில் உலகசினிமா ரசிகனின்  'காட்பாதர்- 1972[ஆங்கிலம்] வன்முறையைக் கொண்டாடுவோம்'  என்றப் பதிவால் தூண்டப்பட்டு, மூன்று 'காட்ஃபாதர்' படங்களையும் மீண்டும் ஒருசேரப் பார்த்தேன். அது ஏற்படுத்திய தாக்கமும், அனுபவமும் அதிலிருக்கும் ஒழுக்கமும், செய்நேர்த்தியும் என்னை ஒரு தொழில்நுட்பாளனாக பிரமிக்க வைத்தன. இதன் இயக்குனர் 'ஃபிரான்சிஸ் ஃபோர்டு கொப்பலா'. அந்த மாபெரும் கலைஞனின் ஆற்றல் பல ஆண்டுகள் கடந்தும் புதுமையாக இருக்கிறது. கொப்பலா, அண்மையில் கொடுத்த நேர்காணலின் தமிழாக்கத்தைக் காண, 'வார்த்தைகள்' வலைப்பூவில் 'கொப்பலாவின் பதில்கள்' பதிவுகளைப் படியுங்கள். அந்தப்படத்தைப் பற்றிய சில தகவல்களை, உங்களோடு பகிர்ந்துக்கொள்ள இந்தப் பதிவு. கொண்டாட்டம் மற்றும் மரணம்: காட்ஃபாதர் - மூன்று பாகப் படங்களும், தமக்குள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. மூன்று படங்களும் ஏதேனும் ஒரு குடும்ப விழாவில் (கொண்டாட்டத்தில்) துவங்கி, குடும்ப உறுப்பினர் மரணத்தில் முடிகின்றது. முதல் பாகம் 'விட்டோ கோர்லியானின்' (மார்லன் பிராண்டோ - காட்ஃபாதர்) மகள் 'C

தெய்வத்திருமகள் - நெகிழ்ச்சிப் பொட்டலம்

விக்ரம் என்னும் அற்புதமானக் கலைஞனின் நடிப்பு, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் 'புகைப்படங்களைப்' பார்த்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஒருவேளை நடிப்பு என்று சொல்லி, நம்மைப் படுத்தி எடுத்துவிடுவாரோ என்று. ஆனால் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் நம்மைக் கவர்ந்துவிட்டார். முதல் காட்சியிலிருந்தே, குறிப்பாக நீதிமன்றக் காட்சியிலிருந்து விக்ரம் தன் இயல்பான நடிப்பால் நம்மை, படத்திற்குள் இழுத்துவிடுகிறார். அவர் இளைத்திருக்கும் விதமும், தலைகலைந்து, கண்கள் சோர்ந்து அதனூடே அவர் வெளிப்படுத்தும் சோகமும் இயலாமையும் நம்மை அவரோடு இணைத்துவிடுகிறது. அவருடைய மகளாக ஒரு குட்டித் தேவதையை(சாரா) நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அழகும் வெகுளித்தனமும் நம்மை பரவசப்படுத்துகிறது. அவள் நடிக்கவே இல்லை, தன் இயல்பில் அப்படியே வந்து போய் இருக்கிறாள். அந்தக் குழந்தை ஒரு அற்புதம். இந்தக் கதையை விக்ரம் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. தன் நடிப்புக்குத் தீனி போடும் என்பதாலோ அல்லது ஒரு அற்புதமான கதையில், கதாப்பாத்திரத

இனி ரஜினி, தான் யார் என்பதைத் தெரிவிப்பாரா?

ரஜினியைத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? இதுநாள் வரை தன் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த இடம் என்ன, அவர்களை அவர் எப்படிப் பயன்படுத்தினார், அவருக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு என்ன என்பது தமிழ்ச் சமுகம் அறிந்ததுதான். அதைப்பற்றிப் பேசினால் விவாதமாகும் என்பதும் நாம் அறிந்ததுதான். அதனால் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை. நான் கேட்க விரும்புவது, இனி வரும் காலங்களில் ரஜினி தமிழர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதுதான். சிங்கப்பூர் மருத்துவத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர் வெளியிட்ட பேச்சில் "நான் அப்படி என்ன செய்துவிட்டேன், பணம் வாங்குறேன்.. நடிக்கிறேன்.. நீங்கள் எல்லாம் பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் நடந்து கொள்கிறேன் ராசாக்களா" என்று தன் ரசிகர்களுக்குச் சொன்னார். அன்று அவர் சொன்னதன் பொருள் என்ன? பெருமைப்படும்படியும், தலைநிமிர்ந்து நடக்கும்படியும் அப்படி அவர் என்ன செய்யப்போகிறார்? தமிழர்கள் அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இனியாவது அவர் உணர்வாரா? லட்சக்கணக்கான சகோத

பாலை - “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை"-  இப்படத்தி ன்   இயக்குநர் ம.செந்தமிழன். இப்படத்தில் முதலில் பணி புரிந்தேன். சில காரணங்களால் தொடர முடியவில்லை.   இங்கே காணக்கிடைக்கும் காட்சிகள் அப்படத்திற்காக எடுக்கப்பட்டவை. சில வண்ணங்களை நிர்ணயித்துப் பார்த்தேன்.   அது உங்கள் பார்வைக்கு.