முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Dark Knight Rises: நம்பிக்கைக்குரிய நாயகன்.!

கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே.  ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும்,  லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவையற்று,

‘மோனோ ரூடோ’ - தைவானின் சின்னம்

1930, அக்டோபர் 27. தைவானின் வாஷா (Wushe) பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பானிய காலனி கிராமத்தின் ஒரு பள்ளிக்கூடம். பள்ளி விளையாட்டு போட்டிகளுக்கான முன் தயாரிப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஜப்பானிய அதிகாரிகளும் குழுமி இருக்கிறார்கள். ஆங்காங்கே காவலாளிகள் நிற்கிறார்கள். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக ஜப்பானியக் கொடி ஏற்றப்படுகிறது. தேசியகீதம் ஒலிக்கத் துவங்குகிறது. கூடி இருந்தோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் துவங்குகின்றனர். அப்போது, திடீரென்று ஒருவன் கத்தியோடு பாய்ந்து வந்து காவல் காத்த ஒரு காவலாளியின் தலையைக் கொய்கிறான். அதைத் தொடர்ந்து நாலாபுறமிருந்தும் பெரும்கூட்டம் ஒன்று ஆரவாரமான சத்தங்களோடு கூட்டத்தின் மீது பாய்கிறது. கூட்டத்தினுள் புகுந்த அக்கும்பல், ஜப்பானியர்களை தேடித்தேடி வெட்டிச் சாய்க்கிறது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், ஆசிரியர்கள், காவலாளிகள் என பலரும் வெட்டி கொல்லப்படுகின்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்தப் பெரும் படுகொலை நிகழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. 136 ஜப்பானிய ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். 215 ஜப்பானியர்கள் காயப்படுத்தப்பட்டார்கள

நான் ஈ - தனித்து நிற்கும் ஈ..!

ராஜ்மௌலி என்கிற சிறந்த இயக்குனரைப்பற்றி அறிந்திருந்தும், இப்படத்தின் தமிழ்த் தலைப்பு என்னைக் கவரவில்லை என்பதோடு, அதன் வடிவமைப்பும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கவில்லை. ஒரு நல்ல இயக்குனரின் தோல்விப் படமாக இது இருந்துவிடக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதனாலேயே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமற்று இருந்தேன். வெள்ளிக்கிழமை படம் வெளியானதிலிருந்து இப்படத்தைப்பற்றி வந்த எல்லா கருத்துகளும் ஒன்றை மட்டுமே வழி மொழிந்தன. படம் நன்றாக இருக்கிறது என்பதுதான் அது. இருப்பினும் அடுத்த வாரம் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன் நேற்று இரவு வரை. நேற்று இரவு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது, இப்படம் தவறவிடக்கூடாத படம் என்பது. பெரும்பாலானோர் இதே கருத்தைச் சொல்லி இருந்ததனால், இன்றே படம் பார்த்துவிட்டேன்.  ஒரு இளம் காதல் இணை. வில்லன் காதலனைக் கொன்றுவிட்டு காதலியை அடைய நினைக்கிறான். இறந்து போன காதலன் பழி வாங்குகிறான். அச்சச்சோ.. கதையைச் சொல்லிவிட்டேனோ?! போப்பா..! இதுதான் கதையா? இதுதான் எங்களுக்குத் தெரியுமே. எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம் என்று நீங்கள் நினை