முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான்கு செய்தியாளர்களும் ஒரு போர்களமும்

உலகம் இன்று செய்திகளால் நிரம்பி வழிகிறது. நடப்புகள் அனைத்தும் செய்தியாக்கப்படுகின்றன. ஏதோவொரு ஊடகத்தில் அவை பதிவு செய்யப்படுகின்றன. போட்டிகள் நிறைந்த இத்துறையில், பரபரப்பான செய்திகள் தேவைப்படுகின்றன. சுடச்சுட பரிமாறப்பட வேண்டியது அவசியமாகிறது. தவறும் ஒவ்வொரு கணமும், அது செய்தியைச் சாகடித்து விடக்கூடும். ஒவ்வொரு செய்தியாளனும், பத்திரிக்கையாளனும் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். துறைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறமென்றால், அறம் சார்ந்த நெருக்கடிகள் மறுபுறம். மற்ற எந்த வேலையை விடவும் பத்திரிக்கையாளனாக தன் பணியை தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதனின் அறம் சார்ந்த கடமை மிக முக்கியமானது. உயிர் காக்கும் மருத்தவருக்கு இருக்கும் அதே கடமையும் பொறுப்பும் ஒரு பத்திரிக்கையாளனுக்கு உண்டு. சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே. ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையோர் பத்திரிக்கையாளனாகத் தங்கள் பணியைத் தேர்ந்தெடுப்பது ஒருவித பொறுப்புணர்வினால்தான். சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பும் அக்கறையுமே ஒரு மனிதனைப் பத்திரிக்கையாளனாக (நல்ல) மாற்றக்கூடும். ஒரு நடப்பைச் செய்தியாக்குவது எதற்காக? செய்திகளை உலகம் அறிய செய்வ

'Flash mob' -உம் ‘Why this Kolaveri Di’- யும்

நகரம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நகரத்தின் பரபரப்பான இடம் அது. கடைவீதி, தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம், வணிகவளாகம் போன்ற ஒரு பொது இடம். மக்கள் கூடுமிடம். அங்கே இருந்த ஒலிபெருக்கி ஏதோ ஒரு இசையை ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிரபல பாடல் ஒலிக்கத்துவங்குகிறது. அங்கே வந்த ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தின் மையத்திற்கு வந்து அப்பாடலுக்கு ஆடத் துவங்குகிறார். கூட்டத்தில் சிலர் அதை கவனிக்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்களில் ஒருவர் அருகில் வந்து அவரும் ஆடிக்கொண்டிருப்போரோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார். பாடலும், அதிலிருக்கும் துள்ளலும் வசீகரமாக இருக்கிறது. அதைப்பார்த்த மேலும் சிலரும் அவர்களோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார்கள். கூட்டம் இதை ஆச்சரியத்தோடு பார்க்கத்துவங்குகிறது. ஆட்டத்தின் உற்சாகம் மெல்லப் பரவுகிறது. மேலும் பலர் ஆட்டத்தில் இணைந்துக்கொள்கிறார்கள். கூட்டம் இவ்வாட்டத்திற்கு ஒத்திசைந்து கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறது. வேடிக்கை பார்த்தவர்கள், அவ்வழியே கடந்துச் சென்றவர்கள் எல்லோரும் தங்கள் உடமைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு, அவ்வாட்டத்தில் பங்கெடு