முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை - சென்னை (10th June 2017)

வணக்கம் நண்பர்களே … ! ( முந்தைய பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களுக்கு ) நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.   ஆம் நண்பர்களே..  சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் .  இம்முறை ‘Cinematography Lighting’ பற்றி ( மட்டும் ) பயிற்றுவிக்கப்போகிறோம் .  முந்தைய பயிற்சிப்பட்டறையின் தொடர்ச்சியாக இது இருக்கும் .  கடந்த பயிற்சிப்பட்டறையில் ஒட்டுமொத்த ஒளிப்பதிவுத் துறைப்பற்றி பார்த்தோம் .. இம்முறை அதில் ஒரு பாடமான ‘ திரைப்பட ஒளிப்பதிவில் ஒளியமைப்பு செய்வது எப்படி ..!?’ என்பதைப்பற்றி விரிவாகக் பார்க்கப்போகிறோம் . ஒரு நாள் பயிற்சிப்பட்டறை .  முழுக்க முழுக்க செய்முறை பயிற்சியாக இருக்கும் படி வடிவமைத்திருக்கிறோம் .  இம்முறை பிரபல ‘ PANASONIC ’  கேமரா நிறுவனம் நம்மோடு கைகோர்த்திருக்கறார்கள் .  அவர்களுடைய புதிய 4K கேமராக்களை இப்பயிற்சிப்பட்டறையில் பயன்படுத்தபோகிறோம் . மேலும் அவர்களுடைய புதிய தயாரிப்புகள் பற்றிய தகவல்களையும்

Lighting workshop - Chennai

நண்பர்களே.. கடந்த மாதம் உங்களிடம் கேட்டிருந்தோம் அல்லவா..! எவ்விதமான பயிற்சிப்பட்டறை வேண்டுமென்று..!? அதில் அதிக வாக்கு பெற்று முந்தி இருப்பது 'Lighting workshop'. அதன்படி, சென்னையில் அடுத்த மாதம் (ஜூன்) 'Lighting workshop' நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். பாடதிட்டம், நாள், இடம், கட்டணம் போன்ற தகவல்களை இரண்டொரு நாளில் தெரிவிக்கிறோம். நீங்கள் புகைப்படக்காரரா..!? ஒளிப்பதிவாளனாக மாற முயன்று கொண்டிருப்பவரா..!? உதவி ஒளிப்பதிவாளரா..!? உதவி இயக்குநரா..!? அல்லது சினிமா ஆர்வலரா..!?  இது உங்களுக்கான பயிற்சிப்பட்டறை. இப்பயிற்சிப்பட்டறையின் மூலம் 'Cinematography Lighting' பற்றிய அடிப்படை நுணுக்கங்களை தெரிந்துக்கொள்ளலாம். தயாராகிக்கொள்ளுங்கள்..!

சிதம்பர நினைவுகள்:

நண்பன் ஞானத்தின், படப்பிடிப்பு சம்பந்தமாக ‘எர்ணாகுளம் / கொச்சின்’ வரவேண்டியதிருந்தது.  முதல் நாள் படப்பிடிப்பு, இங்கே புகழ்பெற்ற கல்லூரியான ‘மகாராஜாஸ் கல்லூரியில்’ நடந்தது.  பழைமையும், பாரம்பரியமும் கொண்ட கட்டிடம். நீண்ட வராண்டாவும், அகண்ட வகுப்பறைகளும், விஸ்தாரமான திறந்த வெளியும், அடர்ந்த மரங்களும் கொண்ட கல்லூரி அது. பரவசமான இடம். அதற்கு எதிரே நீர்பரப்பும், படகு குழாமும், பெரிய பூங்காவும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருப்பது அப்பகுதியில்தான். காலையிலும், மாலையிலும் அப்பூங்காவிற்கு நடை பயிற்சிக்குப் போவதும், படகில் அருகிலிருக்கும் தீவுகளுக்கு போவதுமாய் கடந்த இரண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு கூட காலையில் பூங்காவிற்கு சென்று விட்டு, அப்படியே காலை உணவாக ‘தொட்டுக்கொள்ள கிழங்கும், அப்பளமும் கொண்ட கஞ்சியை’ குடித்து விட்டு அறைக்குத் திரும்பினேன்.  நேரம் கடத்த ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்தால்... அட.. என்ன ஆச்சரியம்..! வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது..! கடந்த வாரம், சொந்த ஊர் செஞ்சிக்கு சென்றிருந்த போது, அப்படிய