முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலா: என் பார்வை




முதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின் வாயிலாகவே வந்தது.

காலா.. அக்மார்க் பா.இரஞ்சித் படம்.  இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு திரைப்படமென்பது ஒரு அரசியல் செயல்பாடு. கலை, அழகுணர்ச்சி, வணிக வெற்றி என எல்லாவற்றையும் தாண்டி, அவர் பேசும் அரசியலை முன்னிறுத்தும் ஒரு கருவி அல்லது ஊடகம்.  எளிய மனிதர்களின் வாழ்வியலை, அரசியலை, போராட்டத்தை, சவால்களை பேசுவதே அவரின் நோக்கம். காலாவும் அப்படியே.

கதை, திரைக்கதை, வசனம், பாத்திரப்படைப்பு, நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என ஒரு திரைப்படத்தைப்பற்றி பேசுவதைப்போல, ரஞ்சித்தின் திரைப்படத்தை பேச வேண்டியதிருக்காது எப்போதும். காரணம், அவருடைய படங்களில் நாம் பொருட்படுத்த வேண்டியது, அது பேசும் அரசியலைத்தான். அது பதிவுசெய்யும் வாழ்வியலைத்தான். அதைத்தான் இரஞ்சித்தும் விரும்புவார். அவ்வகையில், காலாவில், தான் பேச விரும்பிய அரசியலை, கச்சிதமாக அல்லது விஸ்தாரமாக இரஞ்சித் பேச முயன்றிருக்கிறார். அது என்னவென்பதை படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் உணர்ந்துக்கொள்ள முடியும். ஆகவே நான் அதைப்பற்றி எதுவும் பேசப்போவதில்லை.

எனக்கு இருக்கும் கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்..!

ரஜினி ஏன் இப்படத்தை செய்ய ஒத்துக்கொண்டார்..!?

எனக்கு தெரிந்து, ரஜினி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவானவர் இல்லை. இந்துத்துவா அரசியலுக்கு எதிரானவரும் இல்லை. இந்திய ஆளும் வர்கத்தினர்க்கு எதிரானவரும் இல்லை. எனில்.. காலாவை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்..!?

ஒரு குப்பம், அங்கே வாழும் மக்களை துரத்துவிட்டு, அவ்விடத்தை அபகரிக்க ஒரு அரசியல்வாதி முயற்சிக்கிறான். அதை தட்டிக்கேட்கும் ‘தாதா’ நாயகன். இதானே கதை..!? இது என்ன புதுக்கதையா? ரஜினி இம்மாதிரியான திரைப்படத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லையா..!? இந்திய திரைப்படங்கள் எடுக்கப்பட்டதில்லையா..!? இது ரஜினிக்கு தெரியாதா என்ன..? இருந்து அவர் ஏன் காலாவின் நடிக்க ஒத்துக்கொண்டார்..!?

1. இளையதலைமுறை இயக்குநர்களோடு திரைப்படம் செய்வதன் மூலம், ரஜினி அவர்களின் திரைவாழ்வில், இது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் தவரொன்றுமில்லை.

2. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி(!?) எனில், இது குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை தனக்கு சாதகமாக மாற்ற உதவும் என்று நினைத்திருக்கலாம். அது தலித்துகளின் ஓட்டு எனில், தலித்துகளின் ஓட்டு, ரஜினிக்கு விழுவது அத்துனை உகந்ததல்ல. ஏற்கனவே களத்திலிருக்கும் தலைவர்களுக்குதான் அது பாதகமாக முடியும்.

ரஜினிக்கு தலித்துகளின் ஓட்டுகள் விழுவது, அவருக்கு வேண்டுமானாலும் நன்மையாக இருக்கலாமே ஒழிய, தலித்துகளுக்கு எவ்விதத்திலும் பயன் இருக்கபோவதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இது பா.இரஞ்சித் அவர்களுக்கும் தெரியும் என்று நம்பலாம்.

3. அட.. அப்படி எல்லாம் இல்லப்பா. இதில் எந்த எந்த அரசியலுமில்லை. இது ஒரு தொழில். இவரால் அவருக்கு லாபம். அவரால் இவருக்கு லாபம். அவ்வளவுதான். இதில் இத்தனை தூரம் பேச வேண்டியதில்லை என்போரும் உண்டெனில்.. அவர்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை.

பின்குறிப்பு: மெட்ராஸ் போன்ற ஒரு திரைப்படத்தைத்தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் இரஞ்சித் தோழர். இல்லையெனில் குறைந்த பட்சம் அட்டக்கத்தியாவது தாருங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால