முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலா: என் பார்வை




முதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின் வாயிலாகவே வந்தது.

காலா.. அக்மார்க் பா.இரஞ்சித் படம்.  இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு திரைப்படமென்பது ஒரு அரசியல் செயல்பாடு. கலை, அழகுணர்ச்சி, வணிக வெற்றி என எல்லாவற்றையும் தாண்டி, அவர் பேசும் அரசியலை முன்னிறுத்தும் ஒரு கருவி அல்லது ஊடகம்.  எளிய மனிதர்களின் வாழ்வியலை, அரசியலை, போராட்டத்தை, சவால்களை பேசுவதே அவரின் நோக்கம். காலாவும் அப்படியே.

கதை, திரைக்கதை, வசனம், பாத்திரப்படைப்பு, நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என ஒரு திரைப்படத்தைப்பற்றி பேசுவதைப்போல, ரஞ்சித்தின் திரைப்படத்தை பேச வேண்டியதிருக்காது எப்போதும். காரணம், அவருடைய படங்களில் நாம் பொருட்படுத்த வேண்டியது, அது பேசும் அரசியலைத்தான். அது பதிவுசெய்யும் வாழ்வியலைத்தான். அதைத்தான் இரஞ்சித்தும் விரும்புவார். அவ்வகையில், காலாவில், தான் பேச விரும்பிய அரசியலை, கச்சிதமாக அல்லது விஸ்தாரமாக இரஞ்சித் பேச முயன்றிருக்கிறார். அது என்னவென்பதை படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் உணர்ந்துக்கொள்ள முடியும். ஆகவே நான் அதைப்பற்றி எதுவும் பேசப்போவதில்லை.

எனக்கு இருக்கும் கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்..!

ரஜினி ஏன் இப்படத்தை செய்ய ஒத்துக்கொண்டார்..!?

எனக்கு தெரிந்து, ரஜினி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவானவர் இல்லை. இந்துத்துவா அரசியலுக்கு எதிரானவரும் இல்லை. இந்திய ஆளும் வர்கத்தினர்க்கு எதிரானவரும் இல்லை. எனில்.. காலாவை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்..!?

ஒரு குப்பம், அங்கே வாழும் மக்களை துரத்துவிட்டு, அவ்விடத்தை அபகரிக்க ஒரு அரசியல்வாதி முயற்சிக்கிறான். அதை தட்டிக்கேட்கும் ‘தாதா’ நாயகன். இதானே கதை..!? இது என்ன புதுக்கதையா? ரஜினி இம்மாதிரியான திரைப்படத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லையா..!? இந்திய திரைப்படங்கள் எடுக்கப்பட்டதில்லையா..!? இது ரஜினிக்கு தெரியாதா என்ன..? இருந்து அவர் ஏன் காலாவின் நடிக்க ஒத்துக்கொண்டார்..!?

1. இளையதலைமுறை இயக்குநர்களோடு திரைப்படம் செய்வதன் மூலம், ரஜினி அவர்களின் திரைவாழ்வில், இது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் தவரொன்றுமில்லை.

2. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி(!?) எனில், இது குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை தனக்கு சாதகமாக மாற்ற உதவும் என்று நினைத்திருக்கலாம். அது தலித்துகளின் ஓட்டு எனில், தலித்துகளின் ஓட்டு, ரஜினிக்கு விழுவது அத்துனை உகந்ததல்ல. ஏற்கனவே களத்திலிருக்கும் தலைவர்களுக்குதான் அது பாதகமாக முடியும்.

ரஜினிக்கு தலித்துகளின் ஓட்டுகள் விழுவது, அவருக்கு வேண்டுமானாலும் நன்மையாக இருக்கலாமே ஒழிய, தலித்துகளுக்கு எவ்விதத்திலும் பயன் இருக்கபோவதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இது பா.இரஞ்சித் அவர்களுக்கும் தெரியும் என்று நம்பலாம்.

3. அட.. அப்படி எல்லாம் இல்லப்பா. இதில் எந்த எந்த அரசியலுமில்லை. இது ஒரு தொழில். இவரால் அவருக்கு லாபம். அவரால் இவருக்கு லாபம். அவ்வளவுதான். இதில் இத்தனை தூரம் பேச வேண்டியதில்லை என்போரும் உண்டெனில்.. அவர்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை.

பின்குறிப்பு: மெட்ராஸ் போன்ற ஒரு திரைப்படத்தைத்தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் இரஞ்சித் தோழர். இல்லையெனில் குறைந்த பட்சம் அட்டக்கத்தியாவது தாருங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...