முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (1)


திரைத்துறைக்குள் நுழைந்து, ஓர் உதவி ஒளிப்பதிவாளனாக வாய்ப்புத் தேடி, பிரபல ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்தப்போதெல்லாம், தவறாமல் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது..

நீங்கள் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்? எதனால் இத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? ”


ஆரம்பத்தில், இப்படியான ஒரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற வேட்கை என் பள்ளிப் பருவத்தில் வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், +2 தேர்வு எழுதி விட்டு, நண்பர்களோடு ஒரு திரைப்படத்திற்குச் சென்றோம். கொஞ்சம் தாமதமாக சென்றுவிட்டோம்.  நாங்கள் திரையரங்கினில் நுழைந்த போது, திரைப்படம் துவங்கி, ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  அப்பாடல் மிகப் பிரபலமானதொன்று. படம் வெளியாவதற்கு முன்பே, பெரும் வரவேற்பைப்பெற்ற காதல் பாடல் அது


அப்பாடலின் இசையும், வரிகளும் இளைஞர்களை வசியம் செய்திருந்தன. நாங்கள் திரையரங்கில் நுழைந்த போது, அப்பாடல்தான் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அந்தக் கணம், திரையரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த அதன் இசை எங்களை ஆக்கிரமித்தது. அப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் சிறப்பாக இருந்தது. திரையில் விரிந்த அதன் காட்சிகள் எனக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியன. அப்பாடலின் இசை, அதன் வரிகள் சிறப்பானவை என்றபோதிலும், அதனையும் மீறி அப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதமும் அதன் அழகும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.


அது, ‘பம்பாய்திரைப்படம்அப்படத்தில் இடபெற்றஉயிரே உயிரேபாடல்தான் அது


நீங்களே அறிவீர்கள், அப்பாடல் எத்தகைய புகழ் பெற்றது என்பதை.  அதன் இசை, அதன் வரிகள் மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்டவிதம் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பதை நாம் அறிவோம். என்னளவில், அதன் ஒளிப்பதிவு மிகவும் மறக்க இயலாத ஒன்று


திரையரங்கில் அப்பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வெண்ணம் மெதுவாக உயிர்த்தெழுந்ததுநான் ஒரு ஒளிப்பதிவாளனாகவேண்டும். கல்லூரியில் என்ன படிக்கலாம் என்ற எதிர்காலத்திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த அந்நேரத்தில் தோன்றிய அவ்வோசனை வெறும் யோசனையோடு நிற்கவில்லை


காட்சிகள் மூலம், ஒளிப்பதிவின் மூலம் ஒரு பார்வையாளனை இத்தனை தூரம் பரவசப்படுத்த முடியும் எனில், இது எத்தனை உயர்வானது! இதை ஏன் நான் கற்றுக்கொள்ள கூடாது.!?  நான் ஏன் ஓர் ஒளிப்பதிவாளனாக மாறக்கூடாது..!? என்று மனதெங்கும் கேள்விகள் உருவாயின. அத்திரைப்படத்தின் தரமும், அது ஏற்படுத்திய பரவசமும்தான், நான் ஒளிப்பதிவாளனாக மாற வேண்டும் என்ற கனவை முதன் முதலாக என்னுள் விதைத்தவை.


உங்களுக்கு


(தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு