முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (1)


திரைத்துறைக்குள் நுழைந்து, ஓர் உதவி ஒளிப்பதிவாளனாக வாய்ப்புத் தேடி, பிரபல ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்தப்போதெல்லாம், தவறாமல் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது..

நீங்கள் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்? எதனால் இத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? ”


ஆரம்பத்தில், இப்படியான ஒரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற வேட்கை என் பள்ளிப் பருவத்தில் வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், +2 தேர்வு எழுதி விட்டு, நண்பர்களோடு ஒரு திரைப்படத்திற்குச் சென்றோம். கொஞ்சம் தாமதமாக சென்றுவிட்டோம்.  நாங்கள் திரையரங்கினில் நுழைந்த போது, திரைப்படம் துவங்கி, ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  அப்பாடல் மிகப் பிரபலமானதொன்று. படம் வெளியாவதற்கு முன்பே, பெரும் வரவேற்பைப்பெற்ற காதல் பாடல் அது


அப்பாடலின் இசையும், வரிகளும் இளைஞர்களை வசியம் செய்திருந்தன. நாங்கள் திரையரங்கில் நுழைந்த போது, அப்பாடல்தான் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அந்தக் கணம், திரையரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த அதன் இசை எங்களை ஆக்கிரமித்தது. அப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் சிறப்பாக இருந்தது. திரையில் விரிந்த அதன் காட்சிகள் எனக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியன. அப்பாடலின் இசை, அதன் வரிகள் சிறப்பானவை என்றபோதிலும், அதனையும் மீறி அப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதமும் அதன் அழகும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.


அது, ‘பம்பாய்திரைப்படம்அப்படத்தில் இடபெற்றஉயிரே உயிரேபாடல்தான் அது


நீங்களே அறிவீர்கள், அப்பாடல் எத்தகைய புகழ் பெற்றது என்பதை.  அதன் இசை, அதன் வரிகள் மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்டவிதம் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பதை நாம் அறிவோம். என்னளவில், அதன் ஒளிப்பதிவு மிகவும் மறக்க இயலாத ஒன்று


திரையரங்கில் அப்பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வெண்ணம் மெதுவாக உயிர்த்தெழுந்ததுநான் ஒரு ஒளிப்பதிவாளனாகவேண்டும். கல்லூரியில் என்ன படிக்கலாம் என்ற எதிர்காலத்திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த அந்நேரத்தில் தோன்றிய அவ்வோசனை வெறும் யோசனையோடு நிற்கவில்லை


காட்சிகள் மூலம், ஒளிப்பதிவின் மூலம் ஒரு பார்வையாளனை இத்தனை தூரம் பரவசப்படுத்த முடியும் எனில், இது எத்தனை உயர்வானது! இதை ஏன் நான் கற்றுக்கொள்ள கூடாது.!?  நான் ஏன் ஓர் ஒளிப்பதிவாளனாக மாறக்கூடாது..!? என்று மனதெங்கும் கேள்விகள் உருவாயின. அத்திரைப்படத்தின் தரமும், அது ஏற்படுத்திய பரவசமும்தான், நான் ஒளிப்பதிவாளனாக மாற வேண்டும் என்ற கனவை முதன் முதலாக என்னுள் விதைத்தவை.


உங்களுக்கு


(தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,