முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (1)


திரைத்துறைக்குள் நுழைந்து, ஓர் உதவி ஒளிப்பதிவாளனாக வாய்ப்புத் தேடி, பிரபல ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்தப்போதெல்லாம், தவறாமல் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது..

நீங்கள் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்? எதனால் இத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? ”


ஆரம்பத்தில், இப்படியான ஒரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற வேட்கை என் பள்ளிப் பருவத்தில் வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், +2 தேர்வு எழுதி விட்டு, நண்பர்களோடு ஒரு திரைப்படத்திற்குச் சென்றோம். கொஞ்சம் தாமதமாக சென்றுவிட்டோம்.  நாங்கள் திரையரங்கினில் நுழைந்த போது, திரைப்படம் துவங்கி, ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  அப்பாடல் மிகப் பிரபலமானதொன்று. படம் வெளியாவதற்கு முன்பே, பெரும் வரவேற்பைப்பெற்ற காதல் பாடல் அது


அப்பாடலின் இசையும், வரிகளும் இளைஞர்களை வசியம் செய்திருந்தன. நாங்கள் திரையரங்கில் நுழைந்த போது, அப்பாடல்தான் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அந்தக் கணம், திரையரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த அதன் இசை எங்களை ஆக்கிரமித்தது. அப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் சிறப்பாக இருந்தது. திரையில் விரிந்த அதன் காட்சிகள் எனக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியன. அப்பாடலின் இசை, அதன் வரிகள் சிறப்பானவை என்றபோதிலும், அதனையும் மீறி அப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதமும் அதன் அழகும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.


அது, ‘பம்பாய்திரைப்படம்அப்படத்தில் இடபெற்றஉயிரே உயிரேபாடல்தான் அது


நீங்களே அறிவீர்கள், அப்பாடல் எத்தகைய புகழ் பெற்றது என்பதை.  அதன் இசை, அதன் வரிகள் மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்டவிதம் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பதை நாம் அறிவோம். என்னளவில், அதன் ஒளிப்பதிவு மிகவும் மறக்க இயலாத ஒன்று


திரையரங்கில் அப்பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வெண்ணம் மெதுவாக உயிர்த்தெழுந்ததுநான் ஒரு ஒளிப்பதிவாளனாகவேண்டும். கல்லூரியில் என்ன படிக்கலாம் என்ற எதிர்காலத்திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த அந்நேரத்தில் தோன்றிய அவ்வோசனை வெறும் யோசனையோடு நிற்கவில்லை


காட்சிகள் மூலம், ஒளிப்பதிவின் மூலம் ஒரு பார்வையாளனை இத்தனை தூரம் பரவசப்படுத்த முடியும் எனில், இது எத்தனை உயர்வானது! இதை ஏன் நான் கற்றுக்கொள்ள கூடாது.!?  நான் ஏன் ஓர் ஒளிப்பதிவாளனாக மாறக்கூடாது..!? என்று மனதெங்கும் கேள்விகள் உருவாயின. அத்திரைப்படத்தின் தரமும், அது ஏற்படுத்திய பரவசமும்தான், நான் ஒளிப்பதிவாளனாக மாற வேண்டும் என்ற கனவை முதன் முதலாக என்னுள் விதைத்தவை.


உங்களுக்கு


(தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...