முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01



ரொம்ப நாளா (ரொம்ப வருடமா) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறதுநாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும்’.


விவசாயம் கடினம், அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது… “நான் பட்ட கஷ்டத்த, எம் புள்ள படவேண்டாம்யாஅவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும்” 


அப்படிஉண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா? அது கடினமுன்னா... நாம் சாப்பிடறது எப்படி? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா, இந்த உலகம் இயங்குமா? அப்படித்தானே, பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க. பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா


எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம், கருத்து உண்டாக வேண்டுமானால், அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி… ‘விவசாயம் செய்து பார்த்துவிடுவதுஎன்று தோன்றியது


கிராமத்தில் என் நண்பன்பெருமாளையும்உடன் சேர்த்துக்கொண்டு கடந்த ஒரு வருடமாக விவசாயம் செய்துக்கொண்டிருக்கிறேன். முதலில் காய்கறிகள் பயிரிட்டோம். விவசாயம் என்று வந்துவிட்டதனால், அது இயற்கை விவசாயமாக (Organic Farming) இருக்கட்டும் என்று கருதினோம். இரசாயண உரங்கள் இல்லாத காய்கறிகள் அத்தனை சுவையாக இருந்தது என்று நான் சொன்னால் உங்களால் உணரவே முடியாது, நீங்களே அதனை சாப்பிட்டுப்பார்த்தால் தான் புரியும். கத்திரிக்காய், வெண்டக்காய், கொத்தவங்காய, வெள்ளரிப்பிச்சு, சிறுகீரை, அரக்கீரை, கேழ்வரகு என்று சிலவற்றை கடந்த கோடைக்காலத்தில் பயிரிட்டோம். பெருமாளின் பிள்ளைகளும் எங்களோடு சேர்ந்துக்கொண்டார்கள். ஆட்டமும் பாட்டமுமாக கடந்த நாட்கள் அவை. நாக்கும், மனமும் சுவையறிந்தது


பிறகு... ஆடி மாதத்தில்பொன்னி நெல்லும்துயமல்லி நெல்லும்பயிரிட்டோம். ஏற்கனவே முடிவு செய்ததுதான். விவசாயம் செய்தால் அது Organic வழி விவசாயம் தான். கூடவே இன்னொரு முயற்சியும் எடுத்தோம்
























பொதுவாக நாற்று உற்பத்தி செய்து(நாற்றங்கால்), அதனை இருபது, இருபத்தைந்து நாட்களுக்குப்பிறகு வேரொரு இடத்தில்(நெல் வயல்) பிடிங்கி நட்டுதான் நெல் பயிர் செய்வார்கள். மற்றொரு வழி, நேரடியாக நெல்லை விதைப்பது. இதில் நாற்றங்கால் தனியாக, நெல்வயல் தனியாக என்று இருக்காது. நாற்று நடும் வேலை இல்லை. நேரடி விதைப்பில் இரண்டு வகை இருக்கிறது. கைகளால் நெல் விதைகளை தூவி விடுவதுமற்றொன்று ‘Drum Seeder’ என்றொரு கருவி மூலம் நேர்க்கோட்டில் நெல் விதைகளை விதைப்பதுஅதைத்தான் செய்திருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம்


இன்று நெல் அறுத்து, அரிசியாக்கி வைத்திருக்கிறோம். எங்கள் தேவைக்குபோக மீதமுள்ளதை நண்பர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் விற்பனை செய்து விடலாம் என்று நினைக்கிறோம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.


நாங்கள் விவசாயம் செய்ததைப்பற்றி தொடர்ந்து எழுத விருப்பம்.. ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து வாருங்கள்.


(தொடரும்)


பின்குறிப்பு: நாங்கள் செய்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வீடியோ பதிவாக யூடியூப் சேனலில், இன்ஸ்டாவில், முகநூலில் பதிவு செய்து வருகிறோம்.அதற்கான லிங்க்...


YouTube: https://www.youtube.com/@AruvadaiFarm


Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr


Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d


#organicfarming #organics #இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங் #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...