முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

 


இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை. அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது?

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு, இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே, அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும்? இலைத்தழை வேண்டுமானால், வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும், அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.


மேலும், பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது. மண்ணில் வாழும் புழுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன. இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது. அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார். அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு.


சிறு தானிய வகைகளில் நாட்டுச் சோளம், நாட்டு கம்பு, தினை, சாமை, குதிரைவாலி, பயிறு வகைகளில் உளுந்து, பாசி பயறு, தட்டைப் பயறு, கொண்டைக் கடலை, துவரை, கொத்தவரை, நரிப்பயறு, எண்ணெய் வித்துக்களில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயா பீன்ஸ், ஆமணக்கு, மசால் வகைளில் கொத்தமல்லி, கடுகு, சோம்பு, வெந்தயம், தழைச்சத்துக்கு சணப்பு, தக்கப்பூடு போன்றவற்றை அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு, அதனை விதைத்து ஒரு ஐம்பது நாட்கள் வளர்த்து, அப்படியே மண்ணோடு ஓட்டி விட்டு விடவேண்டும். இதன் மூலம் மண்ணிலிருந்து காணாமல் போன, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டங்கள் மீண்டும் மண்ணிற்கு கிடைத்துவிடும் என்கிறார்.

நெற்பயிர் வளர்வதற்கு அடிப்படையாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, நுண்ணூட்டங்கள்(நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு, துத்தநாகம்) மற்றும் மண்புழு, பாக்டிரியா என்று பல்வேறு நுண்ணுயிரிகளின் துணை தேவைப்படுகிறது. அதனை மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும் என்பதனால், நாங்கள் முதலில் செய்தது. அதைத்தான்


ஐம்பது நாட்களுக்குப் பிறகு, அதனை மண்ணோடு ஓட்டி விட்டு, நிலத்தை வளப்படுத்தினோம். பிறகு இரசாயண உரங்களுக்கு பதிலாக பல்வேறு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தினோம்













ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், மீன் அமிலம், .எம் கரைசல், பத்திலைக்கரைசல், டிரைக்கோடர்மா வெரிடி, யூமிக் அமிலம், பாஸ்வோ பேக்டிரியா, அசோஸ்பைரில்லம்,சுடோமோனஸ் போன்ற பல்வேறு இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினோம். அவற்றை பற்றி தொடர்ந்து பேசுவோம்.


(தொடரும்)


பின்குறிப்பு: நாங்கள் செய்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வீடியோ பதிவாக ஒரு யூடியூப் சேனலில், இன்ஸ்டாவில், முகநூலில் பதிவு செய்து வருகிறோம்.அதற்கான லிங்க் 


YouTube: https://www.youtube.com/@AruvadaiFarm


Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr


Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d



#organicfarming #organics #இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங் #vijayarmstrong 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...