முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘எளியோர் செய்த போர்’

வாழ்ந்து வந்த பாதையைப் பதிவு செய்து வைப்பது வருங்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையே வரலாறுகள் எழுதப்பட்டதற்கான காரணமாக இருந்திருக்க முடியும். ஒரு தேசம், ஒரு இனம் இன்று நிற்கும் இடம் என்பது எவ்வளவு தூரத்தை, பாதையை கடந்து வந்தது என்பதை வரலாறுகள் நினைவுறுத்த வேண்டும். வரலாறு என்பது என்ன? ஆண்ட அரசனையும், மாண்ட மன்னனையும் துதி பாடுவதா? பேரரசையும் பேரிழப்பையும் நினைவில் கொண்டு பெருமூச்செறிவதா? இல்லை.. அது வாழ்ந்த, செழித்த, வீழ்ந்த எளிய மக்களின் பதிவாக இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். தனித்து வாழ்ந்த மனிதன் குழுவாக இணைந்து வாழத்துவங்கியபோது மொழி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என வளர்ச்சியடைந்தான். வளர்ச்சி எப்போதும் இன்னொரு சாராருக்கு ஏக்கம் கொள்ள வைக்கும். ஏக்கம் பகைமையாக மாறும். பகைமை ஆபத்தை விளைவிக்கும். ஆக்கிரமிப்பு, அடிமைமுறை என பல வடிவங்களில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தத் தூண்டும். அவ்வழியிலேயே பல இனங்கள் அடிமைப்பட்டுப்போயின. அடிமை கொண்டவன், அடிமைப்பட்டவனின் வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையும் ஆக்கிரமித்தான். கட்டுக்கதையும், அயோக்கியத்தனமும் உருவெடுத்தன. பொய்

‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி

Canon நிறுவனத்தின் ‘EOS C300’ அறிவிக்கப்பட்ட அதே நாள், அதன் தற்போதைய போட்டியாளராக கருதப்படும் RED ONE நிறுவனத்தின் அடுத்த கேமரா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்புதிய கேமராவிற்கு ‘Scarlet-X’ என பெயரிடப்பட்டிருக்கிறது. “The future is dependent on those who push… not those who react,” - Jim Jannard, founder of RED Digital Cinema. RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. அக்கேமரா ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம் (4K) பிரமிப்பைக் கொடுத்தது. ஃபிலிமை யே(Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தைக் கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை ‘ரெட் ஒன்’ அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கு

Canon EOS C300 - Cinema Camera: புதிய வரவு

அது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும் என அனைவராலும் நம்பப்பட்டது, எதிர்ப்பார்க்கப்பட்டது. அது இப்போது நடந்து விட்டது. ஆமாம் கேனான் (Canon) எல்லாருடைய எதிர்ப்பார்பையும் மெய்ப்பித்திருக்கிறது. திரைத்துறையில் ‘ஃபிலிமுக்கு’ (Film) மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்.. அது தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில் கேனான் நிறுவனத்தின் Canon EOS 5D Mark II அறிமுகமாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. 5D என்பது புகைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அதில் தரமான விடியோவும் எடுக்க முடிந்தது யாரும் எதிர்ப்பார்க்காத கூடுதல் வசதி. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கும் அக்கேமராவை பயன்படுத்தத் துவங்கியது கேனான் நிறுவனமே எதிர்ப்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி. இக்கேமரா திரைத்துறையை மிக வேகமாக டிஜிட்டலை நோக்கி நடைப்போட வைத்திருக்கிறது. Canon EOS 5D Mark II  5D போன்ற சிறு கேமராக்களின் வரவும் வெற்றியும் அது தொடர்ந்து நீடித்து நிலைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையும், இத்துறையில் பல புதிய தொழில்நுட்ப எதிர்ப்பார்ப்புகளை தோற