இயற்கை  விவசாயம்  என்றானபோது  இரசாயன  உரங்கள்  இல்லை . அப்படியானால்  எதைக்கொண்டு  பயிரை  வளர்ப்பது ? நமக்கெல்லாம்  நன்கு  தெரிந்த  மாட்டுச்  சாண  எருவு , இலைத்தழைகள்  போன்றவற்றை  நம்முடைய  முன்னோர்கள்  பயன்படுத்தினார்கள் . ஆனால்  இப்போதுதான்  மாடே  யாரிடமும்  இல்லையே , அப்புறம்  எப்படி  மாட்டுச்சாணம்  கிடைக்கும் ? இலைத்தழை  வேண்டுமானால் , வயலைச்சுற்றி  பல்வேறு  மரங்கள்  இருக்க  வேண்டும் , அதற்கும்  தற்போதைய  சூழலில்  சாத்தியமில்லை .   மேலும் , பல  வருடங்களாக  மண்ணில்  இரசாயனங்கள்  கொட்டப்பட்டதால்  மண்  செத்துப்போய்  விட்டது . மண்ணில்  வாழும்  புழுக்கள் , நுண்ணுயிரிகள்  எல்லாம்  மறைந்துவிட்டன . இவற்றை  மீட்டெடுப்பது  முதல்  வேலையானது . அதற்கு  நம்மாழ்வார்  அவர்கள்  ஒரு  சிறந்த  வழியை  சொல்லியிருக்கிறார் . அதற்குப்  பெயர்  பல  தானிய  விதைப்பு .   சிறு  தானிய  வகை களில்  நாட்டுச்  சோளம் , நாட்டு  கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு  வகைகளில்  உளுந்து , பாசி  பயறு , தட்டைப்  பயறு , கொண்டைக்  கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய்  வித்துக்களில்  எள் , நிலக்கடலை , சூரியகாந...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!