முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Cinema: Film Vs Digital

ஒரு திரைப்படத்தை ஃபிலிமில் (Film) எடுக்கலாமா, 'டிஜிட்டலில்'(Digital) எடுக்கலாமா என்றெல்லாம் இன்று ஆலோசிக்கப்படுகிறது. டிஜிட்டல் என்பது புதிய தொழில்நுட்பம்தான், அது வளர்ச்சியைக் குறிக்கிறது என்பதும், துறையை மேம்படுத்தும் என்பதும் உண்மைத்தான்.  டிஜிட்டல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவதும், வருங்காலம் முழுதும் டிஜிட்டலாக மாறிவிடும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ன? அதன் வளர்ச்சிப்பாதை என்ன? இன்று நமக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் எத்தகையது? என்பததைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்குமான ஆதார வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

super 16mm

super 16mm : Super 16mm என்பதிற்கும் 16mm க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றா? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முதலில் இரண்டு விசயங்களைப் பார்க்க வேண்டும்.

D.I என்றால் என்ன?

D.I என்றால் என்ன ? Digital Intermediate - ' டிஜிட்டல் இண்டர்மிடியேட் ' என்பதன் சுருக்கம்தான்   D.I. வழக்கமாக, திரைப்படத் தயாரிப்பில் படத்தொகுப்பிற்கும் (editing), பிரதியெடுத்தலுக்கும் (Printing) இடையில் நடக்கும் செயலை ' இண்டர்மீடியேட் ' என்கிறார்கள் . அதாவது இதற்கும்  (editing) அதற்கும் (printing) இடையில் அல்லது நடுவில் என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல் ' இண்டர்மீடியேட் '. சரி, இங்கு அவ்விரண்டுக்கும் நடுவில் என்ன நடக்கிறது..! ? ஒரு படத்தின் படத்தொகுப்பு வேலை முடிந்தவுடன் தேவையான ‘ Visual Effects / Optical Works ’ - இருப்பின், அதாவது ஒரு படத்தின் மீது இன்னொரு படத்தை பொருத்துவது (super impose), படத்தை இருட்டிற்குக் கொண்டுச் செல்வது (Fade out), இருட்டிலிருந்து துவங்குவது (Fade In) போன்ற வேலைகள் இருந்தால், முன்பெல்லாம் ஆப்டிக்கல் (optical) முறையில் செய்வார்கள் . இந்த வேலைகளைச் செய்வதற்கான சிறப்பு கருவிகள் உண்டு. அதை கையாள்வதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற வல்லுனர்களும் உண்டு. இந்த ஆப்டிக்கல்ஸ் வேலை எப்படி நடைபெற

S16mm Vs 35mm

இப்போது திரைப்படத் தயாரிப்பில் செலவைக் குறைக்க முயற்சிக்கும் பல வழிகளில் ஒன்று சினிமாவை டிஜிடலில் (Digita) எடுப்பதாகும். சற்று முன்னதாக "super 16" என்றொரு ஃபிலிம் தொழில்நுட்பத்தில் எடுப்பதும் ஒரு வழியாக இருந்தது. இந்தக்கட்டுரையில் super 16mm (s16)க்கும், நாம் வழக்கமாக பயன்படுத்தும் 35mmக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துக்கொள்வோம்.

கடக்கமுடியாத வலிகளுண்டு

அவர் இறந்துபோனபோது வயது 55 இருக்கும். என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் "நா.இராமகிருஷ்ணன்", ஊர் "கீக்களூர்" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது. அவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி.  எதிர்பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச் செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகை வந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதித்திருக்கவில்லை.

கடவுளானாள்

1930 -களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று அது. அவருக்கு அப்போது வயது முப்பது இருக்கும். அவருடைய மனைவிக்கு இருபத்தைந்து. ஐந்து பெண்கள், ஒரு ஆணென மொத்தம் ஆறு பிள்ளைகள்.  கடைசிப் பெண் கைக்குழந்தை. ஊரில் கௌரமான, வசதியான குடும்பம் அவர்களுடையது. கணவனும் மனைவியும் அன்பானவர்கள்.  இருவரிடையில் என்னதான் அன்பு இருந்தாலும், மனைவி என்பவள் கணவனுக்கு அடிமைப்பட்டவள், கணவன் சொல்லே வேதம், அவன் சொல்லை மீறுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்கிற மனோபாவம் நிறைந்த காலம். அவருடைய மனைவியும் அப்படித்தான் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அதிகாலையில், கோவிலுக்கு சென்றிருந்தவள் வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டில் இவர் கோபமாகக் காத்திருக்கிறார். கோபத்திற்கு காரணம் பசியோ, பிள்ளைகள் தனித்துவிடப்பட்டதோ அல்லது வேறு எந்த காரணமோ.. தெரியவில்லை. வீட்டிற்கு வந்த மனைவிடம் கோபத்தோடு கேட்கிறார் “கணவன் முக்கியமா கடவுள் முக்கியமா?”, மனைவி சொன்னாள் “நீங்கள்தான்”. “அதுசரி, இன்று செய்த தவறுக்கு தண்டனையாக வாசலில் நில்” என்றார்.  கணவனைப் பற்றித் தெரியும். கோபம் வந்தால் இப்படித்தான் அவர் தண்டிப்பது வழக்கம், பிள்ளைகளைக்கூட இப்படித்த