முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய ஒரு புத்தகம்

ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய தகவல்கள் அடங்கி புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். 'அசையும் படம்' என்னும் இந்தப் புத்தகம் ஒளிப்பதிவின் அடிப்படை, சினிமா தோன்றிய வரலாறு மற்றும் ஆதார தொழில்நுட்பம் ஆகியவற்றை விவரிக்கிறது.

எளிமையாக, தெளிவாக எல்லாருக்கும் புரியும்படியான, நிறைய தகவல்கள் கொண்ட புத்தகம் இது. சொல்லப்போனால் ஒளிப்பதிவில் ஆர்வம் இருக்கும் அனைவரின் கையிலும் இருக்கவேண்டிய ஒரு கையேடு இது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா 6-1-11 அன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. விழாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, இயக்குனர்கள் திரு.ஜனநாதன், பாண்டிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




இந்தப் புத்தகத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ள இயக்குனர்களின் வார்த்தைகளை கவனித்தால் போதும்.

"நான் பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் போராடி சிரமப்பட்டு கற்றுக்கொண்டதை இந்தப் புத்தகம் மொத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த புத்தகம் முன்பே வெளிவந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். இந்தப் புத்தகத்தை வெளியே நின்று விற்றுக்கொடுக்க வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்"- இயக்குனர். ஜனநாதன்.

"இந்த புத்தகம் ஒளிப்பதிவுத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களுக்கும், விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" - இயக்குனர்.பாண்டிராஜ்

"இந்தப் புத்தகத்தைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு ஏக்கம் வருகிறது, இது நான் செய்திருக்க வேண்டிய செயல் அல்லவா. செய்யத் தவறி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது" - ஒளிப்பதிவாளர், இயக்குனர். பாலுமகேந்திரா


புத்தகம் கிடைக்கும் இடம்:
கீற்று பதிப்பகம்
23, அரங்கநாத நகர்
சிதம்பரம் - 608 001
செல்: 97896 92295
விலை ரூ. 150

சென்னை புத்தகக் கண்காட்சியில்:
விஜயா பதிப்பகம்
கடை எண்:134-135

ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
செல்:9025775455
மின்னஞ்சல்: cjrframes@gmail.com

கருத்துகள்

  1. பகிர்வுக்கு நன்றி சார். மிக அவசியமான ஒரு நூல். திரு.ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லையே ஏன்?

    பதிலளிநீக்கு
  2. வாங்கிட வேண்டியதுதான்.. நன்றி சார் அறிமுகத்துக்கு...

    பதிலளிநீக்கு
  3. நன்றி..செ.சரவணக்குமார்..ஜாக்கி சேகர்..

    //செ.சரவணக்குமார் said...இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லையே ஏன்?//- கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் சரவணக்குமார். மேலும் ஊரில் இல்லை. பயணம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழர்களிடம் காணப்படாத அரிய குணம் உங்களிடம் வெளிப்பட்டிருக்கிறது .. சக படைப்பாளியை பாராட்டும் குணம் நம்மிடம் அருகி வருகிறது மிக அற்புதமான புத்தகத்தை வெளிவந்தவுடன் அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால