முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு



தகவல்:

இப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது.

கிடைக்குமிடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்.
கே.கே.நகர். சென்னை - 78
தொடர்புக்கு: https://www.facebook.com/discovery.palace?fref=ts

-------------------------------------------------
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பிக்சல் - முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்


இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது.

இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.

மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.

பிக்சல்
முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்

ஆசிரியர் : சி.ஜெ.ராஜ்குமார்
பக்கங்கள் : 176
பதிப்பு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
விலை : 230/-




 டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு

நாள் : 04-01-2014, சனிக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி
இடம்: பிரசாத் லேப் தியேட்டர்.
           அருணாச்சலம் சாலை, சாலிகிராமம். சென்னை - 93.


தலைமை : திரு.பாலு மகேந்திரா – இயக்குநர்
முன்னிலை: திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் – இயக்குநர்
நூல் அறிமுகம்: திரு.எஸ்.சிவராமன் –மேலாளர், பிரசாத் லேப்.
   
        நூல் வெளியிடுபவர்

திரு.எம்.ராஜா – இயக்குநர்

       பெற்றுக்கொள்பவர்கள்:

திரு.எஸ்.டி..விஜய் மில்ட்டன்  - இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு.ஆர்.வேல்ராஜ் – இயக்குநர்/ஒளிப்பதிவாளர்

        வாழ்த்துரை:

திரு.என்.கே.விஸ்வநாதன். தலைவர், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA
திரு.வெற்றிமாறன். இயக்குநர்
திரு.ஜி.சிவா செயலாளர் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA
திரு.எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்குநர்
திரு.இளநகை அவர்கள் . மேலாளர் டிஸ்கவரி புக் பேலஸ்
திரு.கமலக்கண்ணன் – இயக்குநர் (மதுபானக்கடை)
திரு.நவீன் – இயக்குநர் (மூடர்கூடம்)
திரு.நட்டிகுமார் –இயக்குநர்

        ஏற்புரை.

திரு.சி.ஜெ.ராஜ்குமார். நூலாசிரியர்/ஒளிப்பதிவாளர்

      நன்றியுரை.
திரு.என்.ஏ.சீனிவாசன்  மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு: திரு. ஈரோடு மகேஷ்  அவர்கள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு.வேடியப்பன். மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால