முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 05


 

இந்த இக்கட்டான நேரத்தில்

நாளை யார் இருப்போம்இருக்க மாட்டோம்..!? தெரியவில்லை


பூமி என்னமோ, பல நூற்றாண்டுகளாக உருண்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தாம், இடையில் 60, 70 வருடங்கள் வந்து விட்டுப்போகிறோம். கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்த, வாழும் இந்த பூமியில்நம்மை அறிந்தவர்கள், நாம் அறிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்


பொறுமையாக கணக்கெடுத்துப்பார்த்தால், 300, 400 பேர்கூட தாண்டமாட்டார்கள். பள்ளியில் 100 பேர், கல்லூரிகாலத்தில் 100 பேர், பணியில் 100, 120 பேர், உறவினர் 50,60 பேர்அவ்வளவுதானே..!? 


அதில் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் 50 பேர் இருக்குமா? இதில் மாதத்தில் ஒருமுறையேனும் பேசும் நபர்கள்? 10 அல்லது 20. 


நம்முடைய நல்லது, கெட்டதில் பங்கெடுப்பவர்கள் எனப்பார்த்தால், அதிகபட்சம் 50 பேர் தாண்டினாலே, நாம் அதிஷ்டசாலிகள் தான்


அவ்வளவுதாம்பா நாம் இந்த பூமியில் சம்பாதித்த உறவுகள். மீதமெல்லாம்நாம் வாழ்ந்த காலத்தில் உடன் பயணித்தவர்கள்


இதில் யாரிடமாவது பகைக்கொள்ள முடியுமா? வன்மம் கொண்டிருக்க வேண்டுமா? பொறாமைப்பட தோணுமாஉறவு, நட்பு, பணியில் முரண்பாடு வரலாம்எதிர்கருத்து இருக்கலாம், எதிரியாக இருக்க முடியுமா? அவசியமா? அது எத்தனை அபத்தம்…!?


எனில், நாம் அறிந்த, நம்மை அறிந்த நபர்களோடு நம்முடைய உறவு எப்படி இருக்க வேண்டும்..!? 


அன்பும், நட்பும் கூடவே நன்றியும் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லவா..!? 


நன்றி எதற்கு


நம்மோடு பிறந்ததற்கும், நம்மை உறவாக, நட்பாக ஏற்றுக்கொண்டதற்கும், நாம் வாழும் காலத்தில் வந்து இணைந்ததற்கும்


பல நூற்றாண்டுகளாக நீண்டு கிடக்கும் மனித வரலாற்றோடு பொருத்திப்பாருங்கள், நான் சொல்லுவது புரியும்


எத்தனை தனித்துவமான உறவு இது


நன்றி நண்பர்களேநன்றி உறவுகளே…! 


😍🙏


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...