முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! | 05


 

இந்த இக்கட்டான நேரத்தில்

நாளை யார் இருப்போம்இருக்க மாட்டோம்..!? தெரியவில்லை


பூமி என்னமோ, பல நூற்றாண்டுகளாக உருண்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தாம், இடையில் 60, 70 வருடங்கள் வந்து விட்டுப்போகிறோம். கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்த, வாழும் இந்த பூமியில்நம்மை அறிந்தவர்கள், நாம் அறிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்


பொறுமையாக கணக்கெடுத்துப்பார்த்தால், 300, 400 பேர்கூட தாண்டமாட்டார்கள். பள்ளியில் 100 பேர், கல்லூரிகாலத்தில் 100 பேர், பணியில் 100, 120 பேர், உறவினர் 50,60 பேர்அவ்வளவுதானே..!? 


அதில் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் 50 பேர் இருக்குமா? இதில் மாதத்தில் ஒருமுறையேனும் பேசும் நபர்கள்? 10 அல்லது 20. 


நம்முடைய நல்லது, கெட்டதில் பங்கெடுப்பவர்கள் எனப்பார்த்தால், அதிகபட்சம் 50 பேர் தாண்டினாலே, நாம் அதிஷ்டசாலிகள் தான்


அவ்வளவுதாம்பா நாம் இந்த பூமியில் சம்பாதித்த உறவுகள். மீதமெல்லாம்நாம் வாழ்ந்த காலத்தில் உடன் பயணித்தவர்கள்


இதில் யாரிடமாவது பகைக்கொள்ள முடியுமா? வன்மம் கொண்டிருக்க வேண்டுமா? பொறாமைப்பட தோணுமாஉறவு, நட்பு, பணியில் முரண்பாடு வரலாம்எதிர்கருத்து இருக்கலாம், எதிரியாக இருக்க முடியுமா? அவசியமா? அது எத்தனை அபத்தம்…!?


எனில், நாம் அறிந்த, நம்மை அறிந்த நபர்களோடு நம்முடைய உறவு எப்படி இருக்க வேண்டும்..!? 


அன்பும், நட்பும் கூடவே நன்றியும் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லவா..!? 


நன்றி எதற்கு


நம்மோடு பிறந்ததற்கும், நம்மை உறவாக, நட்பாக ஏற்றுக்கொண்டதற்கும், நாம் வாழும் காலத்தில் வந்து இணைந்ததற்கும்


பல நூற்றாண்டுகளாக நீண்டு கிடக்கும் மனித வரலாற்றோடு பொருத்திப்பாருங்கள், நான் சொல்லுவது புரியும்


எத்தனை தனித்துவமான உறவு இது


நன்றி நண்பர்களேநன்றி உறவுகளே…! 


😍🙏


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால