முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படச்சுருள் வேலைசெய்யும் முறை

படச்சுருள் என்பதை, ஒரு பக்கத்தில் ஒளியைப் பதியச்செய்யக்கூடிய வேதிப்பொருள்கள் (photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட 'பிளாஸ்டிக் பட்டை' (செல்லுலாய்டு அல்லது பாலிஸ்டரால் ஆனது) என விளக்கலாம்.

ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்' (Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்' (Lab)  'ப்ராஸஸ்' (Process) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள வேதிப்பொருள் நீக்கப்படுகிறது.

படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு.

முதலில் இருப்பது பாதுகாப்பு அடுக்கு. புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப் போன்றது. கீறல் விழாமல் தடுப்பதற்கு.

அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது. 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்' (Negative) 'மஞ்சள்' (yellow) நிறமாக இது இருக்கும்.

அடுத்த அடுக்கு 'மஞ்சள்' (yellow) நிற 'ஃபில்டர்' (Filter)-ஆல் ஆனது. அதனால் இதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருக்கும் நீல வண்ணத்தைத் தடுக்க முடிகிறது. இந்த ஃபில்டர் 'புராஸஸிங்' (Processing) போது நீக்கப்படுகிறது.

அடுத்த அடுக்கு 'நீலம் மற்றும் பச்சை' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மை கொண்டது (Blue and Green Sensitive). முன்பே நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் பச்சை நிறத்தை மட்டும் பதிவு செய்கிறது. 'நெகட்டிவில்' (Negative) 'மெஜண்டா' (Magenta) வண்ணத்திலிருக்கும்.

அடுத்தது 'இண்டர் லேயர்' (Interlayer) என்னும் அடுக்கு. அதற்கு அடுத்திருக்கும் அடுக்கானது 'நீலம் மற்றும் சிவப்பு' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மைகொண்டது (Blue and Red Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் சிவப்பு வண்ண ஒளி மட்டும் இவ்வடுக்கில் பதிவு செய்யப்படுகிறது. 'நெகட்டிவில்' 'ஸியான்' (Cyan) வண்ணத்தைக் கொடுக்கும்.

உள்ளே செல்லும் ஒளியானது படச்சுருளின் அடிப்பாகத்தில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பதிவாக வாய்ப்புள்ளது. அதனால் பதியப்படும் காட்சியானது துல்லியமில்லாமலும், காட்சியைச் சுற்றித் தேவையற்ற 'ஒளித் தெளிப்பும்' (halation) உண்டாகும். அதைத் தடுக்க 'ஆன்ட்டி ஹலஷன் பேக்கிங்' (Anti halation Backing Layer) என்னும் அடுக்கு பயன்படுகிறது.

அதற்கு அடுத்ததாக படச்சுருளின் ஆதார அடுக்கு (Base).  ஒளியைப் பிரதிபலிக்காத தன்மைகொண்ட அடுக்கும் உண்டு. புராஸஸிங்கில் இது நீக்கப்படுகிறது.

ஒரு மெல்லிய படச்சுருளில் இத்தனை அடுக்குகளும் இருக்கின்றன. அறிவியியலின் / வேதியியலின் அற்புதங்களில் ஒன்று இது. இன்று நவீன அறியியலின் வளர்ச்சியில் படச்சுருள்களின் தேவை பின்னுக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டலின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் கேமராக்கள் படச்சுருள்களை பயன்படுத்தாத போதும் படச்சுருளின் ஆதாரத் தத்துவத்தை புரிந்து வைத்திருப்பது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் CCD, CMOS சென்சர்களை புரிந்துக் கொள்ள அது உதவும். டிஜிட்டல் சென்சர்களைப் பற்றியும் அவை எப்படி பிம்பங்களை பதிவு செய்கின்றன என்பதைப்பற்றியும் வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால