முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படச்சுருள் வேலைசெய்யும் முறை

படச்சுருள் என்பதை, ஒரு பக்கத்தில் ஒளியைப் பதியச்செய்யக்கூடிய வேதிப்பொருள்கள் (photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட 'பிளாஸ்டிக் பட்டை' (செல்லுலாய்டு அல்லது பாலிஸ்டரால் ஆனது) என விளக்கலாம்.

ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்' (Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்' (Lab)  'ப்ராஸஸ்' (Process) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள வேதிப்பொருள் நீக்கப்படுகிறது.

படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு.

முதலில் இருப்பது பாதுகாப்பு அடுக்கு. புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப் போன்றது. கீறல் விழாமல் தடுப்பதற்கு.

அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது. 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்' (Negative) 'மஞ்சள்' (yellow) நிறமாக இது இருக்கும்.

அடுத்த அடுக்கு 'மஞ்சள்' (yellow) நிற 'ஃபில்டர்' (Filter)-ஆல் ஆனது. அதனால் இதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருக்கும் நீல வண்ணத்தைத் தடுக்க முடிகிறது. இந்த ஃபில்டர் 'புராஸஸிங்' (Processing) போது நீக்கப்படுகிறது.

அடுத்த அடுக்கு 'நீலம் மற்றும் பச்சை' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மை கொண்டது (Blue and Green Sensitive). முன்பே நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் பச்சை நிறத்தை மட்டும் பதிவு செய்கிறது. 'நெகட்டிவில்' (Negative) 'மெஜண்டா' (Magenta) வண்ணத்திலிருக்கும்.

அடுத்தது 'இண்டர் லேயர்' (Interlayer) என்னும் அடுக்கு. அதற்கு அடுத்திருக்கும் அடுக்கானது 'நீலம் மற்றும் சிவப்பு' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மைகொண்டது (Blue and Red Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் சிவப்பு வண்ண ஒளி மட்டும் இவ்வடுக்கில் பதிவு செய்யப்படுகிறது. 'நெகட்டிவில்' 'ஸியான்' (Cyan) வண்ணத்தைக் கொடுக்கும்.

உள்ளே செல்லும் ஒளியானது படச்சுருளின் அடிப்பாகத்தில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பதிவாக வாய்ப்புள்ளது. அதனால் பதியப்படும் காட்சியானது துல்லியமில்லாமலும், காட்சியைச் சுற்றித் தேவையற்ற 'ஒளித் தெளிப்பும்' (halation) உண்டாகும். அதைத் தடுக்க 'ஆன்ட்டி ஹலஷன் பேக்கிங்' (Anti halation Backing Layer) என்னும் அடுக்கு பயன்படுகிறது.

அதற்கு அடுத்ததாக படச்சுருளின் ஆதார அடுக்கு (Base).  ஒளியைப் பிரதிபலிக்காத தன்மைகொண்ட அடுக்கும் உண்டு. புராஸஸிங்கில் இது நீக்கப்படுகிறது.

ஒரு மெல்லிய படச்சுருளில் இத்தனை அடுக்குகளும் இருக்கின்றன. அறிவியியலின் / வேதியியலின் அற்புதங்களில் ஒன்று இது. இன்று நவீன அறியியலின் வளர்ச்சியில் படச்சுருள்களின் தேவை பின்னுக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டலின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் கேமராக்கள் படச்சுருள்களை பயன்படுத்தாத போதும் படச்சுருளின் ஆதாரத் தத்துவத்தை புரிந்து வைத்திருப்பது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் CCD, CMOS சென்சர்களை புரிந்துக் கொள்ள அது உதவும். டிஜிட்டல் சென்சர்களைப் பற்றியும் அவை எப்படி பிம்பங்களை பதிவு செய்கின்றன என்பதைப்பற்றியும் வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,