முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படச்சுருள் வேலைசெய்யும் முறை

படச்சுருள் என்பதை, ஒரு பக்கத்தில் ஒளியைப் பதியச்செய்யக்கூடிய வேதிப்பொருள்கள் (photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட 'பிளாஸ்டிக் பட்டை' (செல்லுலாய்டு அல்லது பாலிஸ்டரால் ஆனது) என விளக்கலாம்.

ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்' (Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்' (Lab)  'ப்ராஸஸ்' (Process) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள வேதிப்பொருள் நீக்கப்படுகிறது.

படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு.

முதலில் இருப்பது பாதுகாப்பு அடுக்கு. புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப் போன்றது. கீறல் விழாமல் தடுப்பதற்கு.

அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது. 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்' (Negative) 'மஞ்சள்' (yellow) நிறமாக இது இருக்கும்.

அடுத்த அடுக்கு 'மஞ்சள்' (yellow) நிற 'ஃபில்டர்' (Filter)-ஆல் ஆனது. அதனால் இதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருக்கும் நீல வண்ணத்தைத் தடுக்க முடிகிறது. இந்த ஃபில்டர் 'புராஸஸிங்' (Processing) போது நீக்கப்படுகிறது.

அடுத்த அடுக்கு 'நீலம் மற்றும் பச்சை' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மை கொண்டது (Blue and Green Sensitive). முன்பே நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் பச்சை நிறத்தை மட்டும் பதிவு செய்கிறது. 'நெகட்டிவில்' (Negative) 'மெஜண்டா' (Magenta) வண்ணத்திலிருக்கும்.

அடுத்தது 'இண்டர் லேயர்' (Interlayer) என்னும் அடுக்கு. அதற்கு அடுத்திருக்கும் அடுக்கானது 'நீலம் மற்றும் சிவப்பு' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மைகொண்டது (Blue and Red Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் சிவப்பு வண்ண ஒளி மட்டும் இவ்வடுக்கில் பதிவு செய்யப்படுகிறது. 'நெகட்டிவில்' 'ஸியான்' (Cyan) வண்ணத்தைக் கொடுக்கும்.

உள்ளே செல்லும் ஒளியானது படச்சுருளின் அடிப்பாகத்தில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பதிவாக வாய்ப்புள்ளது. அதனால் பதியப்படும் காட்சியானது துல்லியமில்லாமலும், காட்சியைச் சுற்றித் தேவையற்ற 'ஒளித் தெளிப்பும்' (halation) உண்டாகும். அதைத் தடுக்க 'ஆன்ட்டி ஹலஷன் பேக்கிங்' (Anti halation Backing Layer) என்னும் அடுக்கு பயன்படுகிறது.

அதற்கு அடுத்ததாக படச்சுருளின் ஆதார அடுக்கு (Base).  ஒளியைப் பிரதிபலிக்காத தன்மைகொண்ட அடுக்கும் உண்டு. புராஸஸிங்கில் இது நீக்கப்படுகிறது.

ஒரு மெல்லிய படச்சுருளில் இத்தனை அடுக்குகளும் இருக்கின்றன. அறிவியியலின் / வேதியியலின் அற்புதங்களில் ஒன்று இது. இன்று நவீன அறியியலின் வளர்ச்சியில் படச்சுருள்களின் தேவை பின்னுக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டலின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் கேமராக்கள் படச்சுருள்களை பயன்படுத்தாத போதும் படச்சுருளின் ஆதாரத் தத்துவத்தை புரிந்து வைத்திருப்பது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் CCD, CMOS சென்சர்களை புரிந்துக் கொள்ள அது உதவும். டிஜிட்டல் சென்சர்களைப் பற்றியும் அவை எப்படி பிம்பங்களை பதிவு செய்கின்றன என்பதைப்பற்றியும் வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...