முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடையாளம் அற்றவர்களாகி விடுவோம்..!

இப்படம் எடுப்பதனால் உலகம் மாறிவிடுமென்று நான் எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கே. அப்படத்தை நான் எடுத்ததற்கு காரணம் அக்கதை சொல்லப்படவேண்டும் என்பதனால்தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுசெய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்   ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலை செய்ததைப்பற்றி விவரிக்கும் படம். 1972-இல் ஜெர்மானிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் 'கறுப்பு செப்டம்பர் (BSO)' என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனிய போராளிக்குழு, பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். பதினோ

இது பகலும் அல்ல இரவும் அல்ல....

நாம் வாழும் உலகம் அழகானது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.  இயற்கை, தன்னை உருவாக்கிக்கொண்ட போது தன்னை ஒரு அழகு தேவதையாகத்தான் படைத்துக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் அதைப்பற்றிய எந்த அபிப்பிராயமும் இல்லாமல் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம்.  ’எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்..’ என்பது போல, எத்தனைக்கோடி அழகு வைத்தாய் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி இருக்கும் அழகை நாம் பார்க்கத் துவங்கினால் அதன் எல்லை விரிந்துகொண்டே போகிறது. அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தின் அழகைப் பார்க்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இந்த பதிவுகள். முந்தைய பதிவான 'மாலை வெயில் சிதறிக்கிடந்தது' அப்படி ஒரு முயற்சியே..  

Panoramic- படங்கள் எப்படி எடுப்பது?

பெனோரமிக் படங்கள் என்பது நம்மைச் சுற்றி இருக்கும் வெளியை முழுமையாகக் காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொறுத்துப் பரப்பளவு மாறுபடும்.

மாலை வெயில் சிதறிக்கிடந்தது

சும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்டும் படாமலும் இருப்பதில் ஒரு தனி அழகு உண்டு. அதை புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். ஒளிப்பதிவில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது 'Back Light'-இல் படம் பிடிப்பது. அதுவும் குறிப்பாக, இலைகளை 'Back Light'-இல் படம் எடுத்தால் அற்புதமாக இருக்கும்.  அதன் சில மாதிரிகள் இங்கே. இந்தப்புகைப்படங்கள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தில் எடுத்தது. வெளியே எங்கேயும் செல்லவில்லை. 'Photoshop'-இல் கொஞ்சம் சீரமைக்கப்பட்டன, அவ்வளவே! 

"What's my name, Uncle Tom ... What's my name?"

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என்  கறுப்பு மக்களுக்காக.  நான் நிறைய செய்ய முடியும்.  கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார்.  ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.  இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”. இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான்.  அந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான்.  ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லை, அவனது இன எழுச்சியாகவும் இருந்தது. அது, அவன் ம

வெட்கப்பட வேண்டியவர்கள்

  சமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலை செய்து வருவதைக் கண்டித்து நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்.  நமக்கு அந்தப் படுகொலைகளைப்பற்றி தெரிந்ததெல்லாம் கொஞ்சம்தான். மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும், சமீபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாகவும் மட்டும்தான் அறிந்து வைத்திருக்கிறோம்.