முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Panoramic- படங்கள் எப்படி எடுப்பது?




பெனோரமிக் படங்கள் என்பது நம்மைச் சுற்றி இருக்கும் வெளியை முழுமையாகக் காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொறுத்துப் பரப்பளவு மாறுபடும்.





நம்மை சுற்றியிருக்கும் 360 டிகிரி பரப்பளவையும் படமாக்க வேண்டுமானால்,    மூன்று, நான்கு புகைப்படங்களாவது எடுக்கவேண்டும். ஒரு புகைப்படத்திற்கும் அடுத்த புகைப்படத்திற்கும் நீள்வாக்கில் தொடர்ச்சி இருக்கும் படியாக. அதாவது முதலில் ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு பின்பு கொஞ்சம் திரும்பி நின்று முந்திய புகைப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்த புகைப்படத்தை 'compose' செய்ய வேண்டும். இப்படி முழுமையாக 360 டிகிரி பரப்பளவையும் 'cover' செய்யும் வரை படங்கள் எடுக்கவேண்டும். இப்போது நம்மிடையே நம்மை சுற்றி இருக்கும் 360 டிகிரி பரப்பளவும் படங்களாக இருக்கிறது, ஆனால் தனித்தனி படங்களாக. இந்தப்படங்களை ஒன்றினைத்து ஒரே படமாக தருவதிற்கும் மென்பொருள்கள் உள்ளன.




அதே போல் நாம் ஒரு இடத்தில் நின்று கொண்டு சுற்றிப் படமெடுப்பது என்பதும், நகராமல் ஆடாமல் எடுக்கவேண்டும் என்பதும் மிகுந்த பிரயத்தனப்படவேண்டிய ஒன்று. அதுவும் புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பது மிகவும் கஷ்டம். இந்த பிரச்சனையைச் சமாளிக்க 'Tripod' இருக்கிறது. இந்த 'Tripod'-இல் கேமராவைப் பொருத்தி விட்டு படம் எடுக்கும் போது சரியாக 360 டிகிரில் ஆடாமல் படமெடுக்கமுடியும். மேலும் அந்த 'Tirpod' கொண்டு 'Horizontally' மட்டுமில்லாமல் 'Vertically' -யும் 360 டிகிரி படமெடுக்கமுடியும். அதற்கு 'Nodal Ninja Tripod' உதவுகிறது. 




இப்படி எடுத்தப்படங்களை ஒரே படமாக மாற்றி தருவதிற்கு Quicktime VR’s, Hugin - Panorama photo stitcher போன்ற மென்பொருள்கள் பயன்படுகின்றன. இதில் நாம் கொடுக்கும் படங்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேலும் கீழுமாக பார்ப்பதிற்கு வசதியாக சுட்டிகள் கொடுக்கப்படுகிறது. அல்லது மிக நீண்ட ஒரே படமாக எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. 






சில Advanced Photo System (APS) கேமராக்களில் இப்படி பெனோரமிக் படங்கள் எடுப்பதிற்கு வசதிகள் உண்டு. அதாவது அந்த 'Mode'-ஐப் பயன்படுத்தும்போது முந்திய படத்தின் இறுதிபகுதி தெரியும், அதைப்பயன்படுத்தி அடுத்த படத்தினை 'compose' செய்துக்கொள்ளலாம். இப்படி மூன்று படங்களோ அல்லது நான்கு படங்களோ எடுக்கவேண்டும். பின்பு அந்த கேமராவே அந்தப்படங்களை ஒன்றினைத்து ஒரேப் படமாக தந்துவிடும். அந்தப்படங்கள் நீள்வாக்கில் நீண்டு 'Wide Format'-இல் இருக்கும்.




இந்த வசதி சில மொபைல் ஃபோனில் இருக்கும் கேமராக்களிலும் உண்டு. என்னுடைய 'Sony Ericsson W810'-இல் இந்த வசதி உண்டு. அதைப்பயன்படுத்தி நான் எடுத்த சில படங்கள் இங்கே.











கருத்துகள்

  1. Vijay sir,
    panoramic pics eppothume vasikarikkum,room suvatril otti vaippen.pan view patri elithaga vilakkinirkal.

    Mobile pics arumai neengal sollavilai enral therinthe irukkathu. Etho aps camera pics pola irukku.

    Pan view shot ku wide angle lense thevai illaiya?

    பதிலளிநீக்கு
  2. Vijay sir,
    panoramic pics eppothume vasikarikkum,room suvatril otti vaippen.pan view patri elithaga vilakkinirkal.

    Mobile pics arumai neengal sollavilai enral therinthe irukkathu. Etho aps camera pics pola irukku.

    Pan view shot ku wide angle lense thevai illaiya?

    பதிலளிநீக்கு
  3. மிக நல்ல பதிவு. எனக்கும் இதில் அதிக ஆர்வமுன்டு. இது சம்பந்தமான என்னுடைய பதிவு

    http://sathizblog.blogspot.com/search/label/360%20Degree

    பதிலளிநீக்கு
  4. W810'-இமேஜ் க்லாரிட்டி இல்லையே!
    கோடாகின் லேட்டஸ்ட் கேமராவில் இந்த வசதி உள்ளது,ஆனால் மூன்று தான் அதிக பட்சம்[நார்மல் ரேட்],சோனியில் அன்லிமிட்டட்,விலை அதிகம்,ஆனால் இமேஜ் க்ளாரிட்டி அருமை

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொழில்நுட்ப பதிவு..

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பர்களே..

    கீதப்ப்ரியன்://W810'-இமேஜ் க்லாரிட்டி இல்லையே!//
    நீங்கள் சொல்லுவது சரிதான். இப்போது நல்ல கிலாரிட்டி தரும் மொபல்கள் வந்துவிட்டன. நான் படம் எடுத்தது விடியற்காலையில் 5 - 5.30 am இருக்கும். குறைந்த ஒளி, அதுவும் ஒரு காரணம். படம் தெளிவில்லாமல் இருப்பதற்கு.

    வவ்வால்://Pan view shot ku wide angle lense thevai illaiya?//
    தேவைதான். wide angle lens உபயோகித்தால் அதிக அளவு பரப்பளவை ஒரு புகைப்படத்தில் cover செய்யமுடியும்..

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,