முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்


தெளிவான திரைக்கதையோடும் தேர்ந்த இயக்கத்தோடும் வந்திருக்கிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களூடே பின்னப்பட்ட காட்சிகளுமாக படம் நம் மனதைக் கவர்கிறது. சரியான கதாபாத்திரத் தேர்வும் சிறந்த நடிப்பும் அவர்களை நம்மிடயே வாழ்பவர்களாக உணர வைக்கின்றன. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, CG என ஒட்டு மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.

பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது தீண்டாத வரை கவலையற்றுதான் கடந்து செல்கிறோம், அது பிடுங்கி எறிந்த உயிர்களையும் சிதைத்த வாழ்க்கையும் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று.

அது நமக்கானது அல்ல என்று கடந்து வந்த விபத்தை, இப்படம் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு விபத்தின் கோரமுகம், இப்படித்தான் இருக்கும் என்பதை நம் நெஞ்சில் அறைந்து சொல்கிறது.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள். இனி வரும் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் இப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.

வேகமாக ஓட்டும் ஓட்டுனரை, மெதுவாக ஓட்டுங்கள் என்று ஒரு பயணியேனும் சொல்லுவாரானால் அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இப்படத்தைப் பார்த்த எவரும் அதைச் செய்வர்.

இயக்குனர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

கருத்துகள்

  1. //பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//
    நல்ல படம்!

    இதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்!

    எல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந்தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல்! மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால