முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்


தெளிவான திரைக்கதையோடும் தேர்ந்த இயக்கத்தோடும் வந்திருக்கிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களூடே பின்னப்பட்ட காட்சிகளுமாக படம் நம் மனதைக் கவர்கிறது. சரியான கதாபாத்திரத் தேர்வும் சிறந்த நடிப்பும் அவர்களை நம்மிடயே வாழ்பவர்களாக உணர வைக்கின்றன. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, CG என ஒட்டு மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.

பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது தீண்டாத வரை கவலையற்றுதான் கடந்து செல்கிறோம், அது பிடுங்கி எறிந்த உயிர்களையும் சிதைத்த வாழ்க்கையும் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று.

அது நமக்கானது அல்ல என்று கடந்து வந்த விபத்தை, இப்படம் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு விபத்தின் கோரமுகம், இப்படித்தான் இருக்கும் என்பதை நம் நெஞ்சில் அறைந்து சொல்கிறது.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள். இனி வரும் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் இப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.

வேகமாக ஓட்டும் ஓட்டுனரை, மெதுவாக ஓட்டுங்கள் என்று ஒரு பயணியேனும் சொல்லுவாரானால் அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இப்படத்தைப் பார்த்த எவரும் அதைச் செய்வர்.

இயக்குனர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

கருத்துகள்

  1. //பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//
    நல்ல படம்!

    இதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்!

    எல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந்தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல்! மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,