முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்


தெளிவான திரைக்கதையோடும் தேர்ந்த இயக்கத்தோடும் வந்திருக்கிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களூடே பின்னப்பட்ட காட்சிகளுமாக படம் நம் மனதைக் கவர்கிறது. சரியான கதாபாத்திரத் தேர்வும் சிறந்த நடிப்பும் அவர்களை நம்மிடயே வாழ்பவர்களாக உணர வைக்கின்றன. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, CG என ஒட்டு மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.

பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது தீண்டாத வரை கவலையற்றுதான் கடந்து செல்கிறோம், அது பிடுங்கி எறிந்த உயிர்களையும் சிதைத்த வாழ்க்கையும் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று.

அது நமக்கானது அல்ல என்று கடந்து வந்த விபத்தை, இப்படம் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு விபத்தின் கோரமுகம், இப்படித்தான் இருக்கும் என்பதை நம் நெஞ்சில் அறைந்து சொல்கிறது.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள். இனி வரும் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் இப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.

வேகமாக ஓட்டும் ஓட்டுனரை, மெதுவாக ஓட்டுங்கள் என்று ஒரு பயணியேனும் சொல்லுவாரானால் அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இப்படத்தைப் பார்த்த எவரும் அதைச் செய்வர்.

இயக்குனர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

கருத்துகள்

  1. //பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//
    நல்ல படம்!

    இதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்!

    எல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந்தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல்! மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...