முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வறண்ட பிரதேசத்தில்..


'மாத்தியோசி'


வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள். 

சுட்டெரிக்கும் வெய்யிலையும் புழுதியையும் வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். 

படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Image'கொண்டுவர முயன்றோம். பெரும்பாலானக் காட்சிகள் பகலில் நடக்கின்றன.

இரண்டாம் பகுதியில், சென்னையை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றோம். சென்னையின் பல காட்சிகள் இரவில் நடக்கின்றன. இங்கு ஒளியமைப்பு என்பது தெருவிளக்கு, குளிர்காய ஏற்றப்பட்ட நெருப்பு, சன்னல் வழியாக கசியும் ஒளிகள் என அந்தந்த சூழ்நிலையைப் பொருத்து அதன் இயல்பிலேயே பயன்படுத்தினோம். ஒளியமைப்பின் ஆதார தொழில்நுட்பங்களைப் பின்புலமாக மட்டுமே கொண்டோம். ஒளிமயமான, பரபரப்பான சென்னையை இந்தப்படம் காட்டவில்லை. புறநகரப் பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது. அதனால் பளப்பளப்பான சென்னை இந்தப்படத்தில் இருக்காது. 

மொத்ததில் இந்த படம் 'ஃபேண்டஸி' வகைப்படம் அல்ல. எதார்த்த சூழ்நிலைகளில் நிகழும் வன்முறைகளையும், அதன் விளைவுகளையும் காட்ட முயன்ற ஒரு 'அடிதடி' படம். அதை மனதில் கொண்டே இந்தப்படத்தின் ஒளிப்பதிவைச் செய்தேன். 

கிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதினால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம்.

முதல் பகுதியில் 'சூரிய உதயம்' மற்றும் 'சூரிய அஸ்தமனம்' ஆகியவை கால மாற்றத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டன. சென்னையில் 'பிறை நிலா' முதல் 'முழு நிலா' வரை அதற்காக பயன்படுத்தப்பட்டன. படம் சுட்டெரிக்கும் வெய்யிலில் துவங்கி மழையில் முடிகிறது. 

இங்கே உங்களுக்குக் காணக்கிடைக்கும் புகைப்படங்கள், மாத்தியோசி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டவை. 

படத்தை பார்க்காமல் தவறவிட்ட நண்பர்களுக்காக...














கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன