முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘முகம் மாறும் தமிழ் திரைப்படங்கள்’

‘முகம் மாறும் தமிழ்த் திரைப்படங்கள்’ என்பதே தற்போது பேச்சாகயிருக்கிறது. சிற்றிதழ்களிலிருந்து பெரும் வணிக இதழ்கள் வரை தமிழ் சினிமாவின் அண்மைக்கால மாறுதல்களைப் பற்றி பேசுகின்றன. கதை, களன், உள்ளடக்கம், அழகியல், படைப்பாளுமை எல்லாம் மாற்றம் கண்டிருக்கின்றன என்றும், அவை எதிர்காலம் நோக்கிய நற்பார்வையை ஏற்படுத்துகின்றன என்றும் மகிழ்ந்து செய்தி வெளியிடுகின்றன. உண்மைதான், அண்மைக்காலமாய் தமிழ் சினிமா கவனிக்கத்தக்க மாறுதல்களை நோக்கி நடைபோடுகிறது. நல்ல, சிறந்த, நேர்த்தியான சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. ‘வழக்கு எண் 18/9’, ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனத் தொடரும் அதன் பட்டியல், தமிழ்த் திரையின் ஆரோக்கியமான முகத்தை வெளிக்காட்டுகின்றன. அதே நேரம் ‘ஏழாம் அறிவு’, ‘பில்லா-2’, ‘சகுனி’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’ போன்ற பெரிய படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. எளிய உள்ளடக்கமும், பொருட்செலவைக் குறைத்தும் எடுக்கப்பட்ட சிறிய, புதிய முகங்களால் உருவாக்கப்பட்டப் படங்கள் நிறைவான வசூலைக் கொடுப்பதும் அதிகப் பொருட்செலவில் பெரிய நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்ட மெகா பட

மதுபான கடையின் ஊடாக ஒரு பாதை

‘மதுபான கடை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் அவர்களை வேறொரு பட வேலையாக சந்தித்தபோது, அவர், தான் அப்போது செய்துகொண்டிருந்த படம் இது என சொல்லியதன் மூலம், ‘மதுபான கடை’ படத்தை அறிந்துக்கொண்டேன். அப்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன். மதுபான கடை என்னும் தலைப்பு குடியை ஆராதிக்கும் படம் என்பதாய் எனக்குப்பட்டது. குடியின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை (இதுவரை.. நாளை என்னாகுமோ..? யாருக்குத் தெரியும்.. ). அதனால் அதை தொடாமலேயே இருக்கிறேன். பரிசோதனையாகக் கூட முயற்சித்துப் பார்க்காமலிருக்கிறேன், பல நண்பர்களின் பரிகாசகங்களுக்கிடையேயும். அதனால் குடியைப் பற்றிய படம் என்பதனால், அதன் மேல் எவ்வித நாட்டமும் ஏற்படவில்லை. அப்படம் வெளியாகியபோதும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமற்று இருந்தேன். படம் வெளியாகி, நல்ல படம், பார்க்கவேண்டிய படம் என்ற செய்தி நண்பர்களின் மூலமாய் வந்தடைந்த போது, கால தாமதமாகி விட்டிருந்தது. அருகில் எந்த தியேட்டரிலும் அப்படம் ஓடவில்லை. அதற்குள்ளாகத் தூக்கி விட்டிருந்தார்க்ள். அட.. எங்கேதான் பார்ப்பது என்று

காமிக்ஸ் விதை

மிக நீண்ட கால காமிக்ஸ் ரசிகன் நான். பள்ளிப் பருவத்தில் துவங்கிய காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. ஒரு நேர்த்தியானப் படத்தை, ஒரு சிறந்த நாவலை எப்படி அணுகுகிறேனோ அதேவிதத்தில் தான் ஒரு காமிக்ஸையும் அணுகுகிறேன் என்பதை அறிந்த என் நண்பர்கள் எப்போதும் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறார்கள்.  “அட என்ன சின்னப்புள்ளையாட்டும் இன்னும் காமிக்ஸ் படிக்கிறீர்கள்..?!” என்று கேட்ட பல நண்பர்கள் எனக்குண்டு. என்ன செய்வது, நண்பர்கள் பலவிதம். .  :) இருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான ஒரு மதிய நேரம், ‘ஜேம்ஸ்பாண்டு 007’-ஐ நாயகனாகக் கொண்ட ‘அழகியைத் தேடி’ என்னும் ராணிக் காமிக்ஸ் ஒன்று என் கையில் வரமாக வந்து சேர்ந்தது. அவ்வரத்தை தந்தவர், என் பெரிய மாமா ‘கலைவாணன்’ அவர்கள். தன் அக்காவையும் அக்கா மகன்களையும் பார்க்க வந்தவர், எங்களுக்கு அன்பளிப்பாக இக்காமிக்ஸை கொண்டுவந்திருந்தார். அன்று படித்த அந்தக்கதை இன்றும் நினைவிலிருக்கிறது. தமிழை எழுத்து கூட்டியே படிக்கத் தெரிந்த போதும், விடாமல் வாசித்தோம். நண்பர்கள் கூடி வாசித்தோம். யோசிக்க.. அந்தப் புத்தகமே என் வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளமாகிய

UHDTV..!?

இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ‘UHDTV’ என்றொரு பதத்தை பார்த்தேன். அட ‘HDTV’ தெரியும், அதென்ன  UHDTV..!? என்ற ஆர்வம் மேலிட அதைப்பற்றி படிக்கத் தேட , ஆர்வம் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். Ultra-high-definition television என்பதன் சுருக்கம் ‘UHDTV’. 4K(2160p) மற்றும் 8K(4320p) ‘Pixels’ தரம் கொண்டது என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள டிஜிட்டல் பற்றிய சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும். பெரும்பான்மையோருக்கு அவை தெரிந்திருக்கும். அல்லது இத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருபர்கள்  ‘ அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம் ’ என்னும் கட்டுரையைக் கடந்து வந்திருப்பதன் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இல்லையெனில் தயவுசெய்து சிரமம் பார்க்காமல் ஒரு தடவை அக்கட்டுரையை படித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்போதுதான் மேலே சொல்லப்போகும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். சுருக்கமாக HDTV என்பது.. 1080p - 1920×1080p (approximately 2.1 megapixels per frame) 1080i - 1920×1080i (approximately 2.1 megapixels per frame) 1440×1080i (appro

காலம் கனிகிறது..

டிஜிட்டல் சினிமா (Digital Cinema) தொடர்ந்து முன்னோக்கி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்டே வருகிறது. அண்மையில் (16/09/2012) கேனான் நிறுவனம் (Canon) சென்னையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தது. அதன் நோக்கம் தன்னுடைய புதிய சினிமாக் கேமராக்களையும் அதற்கான லென்ஸுகளையும் தமிழ் படைப்பாளிகளிடையே அறிமுகப்படுத்துவது. திடீர் அதிருஷ்டம் (தமிழில் என்ன?  நல்லூழ்..!) அடித்ததனால் எதிர்பாராமல் திரைத்துறையில் நுழைந்த கேனான், தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. செய்தியாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கூடுதல் பயனாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கேனான் புகைப்படக் கேமராக்களில் தரமான HD விடியோக்கள் எடுக்கும் வசதியை கொண்டுவந்தது. இதன் மூலம் புகைப்படக்காரர்களே செய்தி சேகரிப்பின் போது தேவைப்பட்டால் விடியோவும் எடுத்துக்கொள்ளலாம் என்று கருதப்பட்ட அவ்வசதி கேனான் நிறுவனத்திற்கு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. 'Canon EOS 5D Mark-II' கேமராவில் கொண்டு வந்த அவ்வசதி (Full HD Video capture at 1920 x 10

அட்டகத்தி

மிக இயல்பாய் ஒரு திரைப்படம். காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசன உச்சரிப்பு என அத்தனையும் மிக இயல்பாய் இருக்கிறது. பதின்பருவத்தில் எல்லா இளைஞனும் இளைஞியும் கடந்து வரும் வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும், அவர்களின் வாழ் சூழ்நிலையைப் பொருத்து, அவர்களுக்கான பதின்ம வயது காதல் அல்லது பாலுணர்ச்சி கடந்து செல்கிறது. இப்படத்தில், சென்னையின் விளிம்பில் பரவி இருக்கும் சிறு கிராமங்களில் ஒன்றைக் களமாகவும், அதன் இளம் பருவத்தினரை பாத்திரங்களாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். படிப்பு, வேலை பொருட்டு தினமும் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பதின்பருவத்தினர், அநேகமாக எல்லோரும் சந்தித்த காதல் நாட்கள் திரையில் விரிகின்றன. பேருந்துக் காதல் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கிறது. இதை தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படியான காதல் காட்சிகளும், விடலைத்தனங்களும் கொண்ட சம்பவங்களால் படத்தை நிறைத்திருக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திரையரங்கு கொண்டாட்டத்தில் திளைக்க

யுத்த மலர்கள்

சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்த இப்போர் வரலாற்றில் மறக்க முடியாத போர்களில் ஒன்று. இரண்டாம் உலகப்போரில் இது நடந்தபோதும், இதற்கெனத் தனியாக சுவடுகள் உண்டு. உலக மானுடத்தின் மீது இப்போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் மறையாதவை. ஜூலை 7, 1937 முதல் செப்டம்பர் 2 ,1945 வரை நடந்த இப்போரை ‘இரண்டாம் சீன ஜப்பானியப் போர்’ (Second Sino-Japanese War) என அழைக்கிறார்கள்.  1937-இல் துவங்கிய இப்போர் 1941 வரை சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே மட்டும்தான் நடந்துகொண்டிருந்தது. டிசம்பர்  7, 1941-ஆம் ஆண்டு ஜப்பான், வட அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருந்த  ‘பேர்ல் ஹார்பர்’ (Pearl Harbor)-ஐத் தாக்கியதும் அதற்கு பதிலடி கொடுக்கறேன் பேர்வழி என வட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்கியதும் நாம் அறிந்ததுதான். அதன்பிறகு ஜப்பானுக்கு பெரும் எதிரிகள் வந்து சேர்ந்தார்கள். சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே முதல் போர் மூண்டது ஆகஸ்டு 1,1894 – ஏப்ரல் 17,1895 காலகட்டத்தில். ‘முதலாம் சீன ஜப்பானியப் போர்’ என அழைக்கப்படும் இப்போர், கொரியாவை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கொரியா நீண்ட க

புதிய இணையத்தளம்

நண்பர்களே .. புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்..! :)

The Dark Knight Rises: நம்பிக்கைக்குரிய நாயகன்.!

கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே.  ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும்,  லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவையற்று,

‘மோனோ ரூடோ’ - தைவானின் சின்னம்

1930, அக்டோபர் 27. தைவானின் வாஷா (Wushe) பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பானிய காலனி கிராமத்தின் ஒரு பள்ளிக்கூடம். பள்ளி விளையாட்டு போட்டிகளுக்கான முன் தயாரிப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஜப்பானிய அதிகாரிகளும் குழுமி இருக்கிறார்கள். ஆங்காங்கே காவலாளிகள் நிற்கிறார்கள். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக ஜப்பானியக் கொடி ஏற்றப்படுகிறது. தேசியகீதம் ஒலிக்கத் துவங்குகிறது. கூடி இருந்தோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் துவங்குகின்றனர். அப்போது, திடீரென்று ஒருவன் கத்தியோடு பாய்ந்து வந்து காவல் காத்த ஒரு காவலாளியின் தலையைக் கொய்கிறான். அதைத் தொடர்ந்து நாலாபுறமிருந்தும் பெரும்கூட்டம் ஒன்று ஆரவாரமான சத்தங்களோடு கூட்டத்தின் மீது பாய்கிறது. கூட்டத்தினுள் புகுந்த அக்கும்பல், ஜப்பானியர்களை தேடித்தேடி வெட்டிச் சாய்க்கிறது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், ஆசிரியர்கள், காவலாளிகள் என பலரும் வெட்டி கொல்லப்படுகின்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்தப் பெரும் படுகொலை நிகழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. 136 ஜப்பானிய ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். 215 ஜப்பானியர்கள் காயப்படுத்தப்பட்டார்கள