முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம் கனிகிறது..


டிஜிட்டல் சினிமா (Digital Cinema) தொடர்ந்து முன்னோக்கி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்டே வருகிறது.

அண்மையில் (16/09/2012) கேனான் நிறுவனம் (Canon) சென்னையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தது. அதன் நோக்கம் தன்னுடைய புதிய சினிமாக் கேமராக்களையும் அதற்கான லென்ஸுகளையும் தமிழ் படைப்பாளிகளிடையே அறிமுகப்படுத்துவது.




திடீர் அதிருஷ்டம் (தமிழில் என்ன?  நல்லூழ்..!) அடித்ததனால் எதிர்பாராமல் திரைத்துறையில் நுழைந்த கேனான், தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. செய்தியாளர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கூடுதல் பயனாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கேனான் புகைப்படக் கேமராக்களில் தரமான HD விடியோக்கள் எடுக்கும் வசதியை கொண்டுவந்தது. இதன் மூலம் புகைப்படக்காரர்களே செய்தி சேகரிப்பின் போது தேவைப்பட்டால் விடியோவும் எடுத்துக்கொள்ளலாம் என்று கருதப்பட்ட அவ்வசதி கேனான் நிறுவனத்திற்கு புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. 'Canon EOS 5D Mark-II' கேமராவில் கொண்டு வந்த அவ்வசதி (Full HD Video capture at 1920 x 1080) திரைப்படத்துறைக்கும் போதுமானதாக இருந்ததும், சிறிய கேமராவாக இருப்பதனால் அதன் சாத்தியத்தைப் பயன்படுத்த திரைத்துறை முயன்றதும்தான் இடையே நடந்த திருப்புமுனை. அது கேனான் நிறுவனத்திற்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது.

திரைத்துறை தன் கேமராக்களைப் பயன்படுத்தத் தயாராகயிருப்பதைக் கண்டு கொண்ட கேனான் தொடர்ந்து தன்னுடைய கேமராக்களை மேம்படுத்தி சினிமா கேமராக்கள் (Canon Cinema EOS cameras) என புதிய மாடல்களைக் கொண்டுவரத்துவங்கியது. ஒருபுறம் 'EOS 7D, EOS 5D Mark-III' என அறிமுகப்படுத்தியது. மறுபுறம் புகைப்படத்திற்கென வடிவமைக்கப்பட்ட கேமராவிலிருந்த குறைகளைக் களைந்து  View finder,Video Out போன்றவற்றை மேம்படுத்தி ‘EOS C100’,‘EOS C300’ என இரண்டு கேமராக்களை சினிமாவிற்கெனவே அறிமுகப்படுத்தியது. அண்மைக் கால வரவாக 'EOS C-500' மற்றும் 'EOS-1D C'ஆகிய கேமராக்களை 4K தரம் கொண்ட கேமராக்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் புதிய தளத்திற்கு கேனான் நகர முயற்சிக்கிறது.
Red Scarlet X
இதுவரை ‘RedOne’ கேமராவிற்கு மாற்றாக கேனான் பார்க்கப்பட்டது. ரெட்டின் இடத்தைதான் கேனான் தக்க வைத்துக்கொள்ள முயன்றது. அதற்கு போட்டியாக ரெட் தன்னுடைய புதிய மற்றும் சிறிய மாடலான 'RED SCARLET-X'-ஐ களத்தில் இறக்கியதையும். மறுபுறம்  'RED EPIC' என்ற கூடுதல் வசதிகள் (5K,120fps) கொண்ட கேமராவை ரெட் அறிமுகப்படுத்தியதையும் நாம் அறிவோம். (அண்மையில் வெளியான பில்லா-2 'RED EPIC'கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்டது)

Red Epic

இந்நிலையில் தான் கேனான் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிருக்கிறது. 4K -வை கொண்டு வந்திருப்பதன் மூலம் தன் இடத்தில் வலுவாகக் காலூன்ற முயல்கிறது. மேலும் தன்னையும் இத்துறையில்(சினிமா) ஒரு ஜாம்பவானாக மாற்றிக் கொள்ள முயல்கிறது. டிஜிட்டல் சினிமாவைப் பொருத்த வரை SONY, PANASONIC போன்ற நிறுவனங்கள் தான் முன்னோடியாக இருந்திருக்கின்றன. இத்துறையில் காலூன்ற நீண்ட காலமாக இந்நிறுவனங்கள் முயன்று வந்திருக்கின்றன. சோனி தன்னுடைய ‘CineAlta’ வரிசை கேமராக்களையும் பேனாசோனிக் ‘VariCam’ வரிசைக் கேமராக்களை தொடந்து முன்னிறுத்தியும், மேம்படுத்தியும் வந்திருக்கின்றன, வருகின்றன. இடையே கேனான் புகுந்து ’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’ என்று சொல்லத் துவங்கிருக்கிறது.

கேனான் தன்னுடைய 'EOS C-500' மற்றும் 'EOS-1D C' கேமராக்களுக்கு அதிக விலை வைத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அதாவது, திரைத்துறையைச் சார்ந்தும் தன்னை ஒரு ‘Professional’-ஆக மாற்றிக் கொள்ள முயல்வதாகப் படுகிறது. புகைப்படத்துறையில் கேனான் எப்போதும் ‘Professional’தான்.  வீடியோ கேமராத் தயாரிப்பிலும் (டிவி, ஆவணப்படம் எடுக்க உதவும் கேமராக்கள்) கேனான் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பினும் திரைத்துறையில் அதற்கென்று எந்த இடமும் இல்லாமல் தான் இருந்தது. அவ்விடத்தைத்தான் இப்போது கைப்பற்ற கேனான் முயல்கிறது என்பதை உணரமுடிகிறது.




சிறிய, விலை குறைந்த கேமராக்களின் மூலம் ரெட் கேமராக்களுக்கு மாற்றாகயிருந்த கேனான் தன்னுடைய விலை அதிக கேமராக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் பிம்பத்தை மாற்ற முயல்கிறது என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. எத்துறையானாலும் விலை அதிகரிக்க அதிகரிக்கத்தானே அதன் மதிப்பு கூடும்?! அதைத்தான் கேனான் செய்கிறது. அட.. அப்படி விலை கூடினால் அது தன் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வராதா? என்ற கேள்வி எழலாம். அப்படி ஆக வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் விலை குறைந்த கேமராக்களும் ('EOS 7D,EOS 5D Mark-II, EOS 5D Mark-III') ஏற்கனவே கேனான் வைத்திருக்கிறது அல்லவா.. அதிக விலை கொடுக்கத் தயாரில்லாத வாடிக்கையாளர்களை அக்கேமராக்கள் சரிகட்டி விடும். ஆகவே கேனான் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோம் என்று தயங்க வேண்டியதில்லை என நினைத்திருக்கலாம்.  இதன் மூலம் இந்தியா, தைவான், கொரியா போன்ற ‘குறைந்த முதலீடுகளுக்கு’ முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் கேனான் தன் வேர்களை ஆழமாக பரப்பிவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது.


அங்கே.. ரெட் ஒன் நிறுவனம் தன்னுடைய ‘RED EPIC’ கேமராவிற்கு  ‘Upgrade’ அறிவித்திருக்கிறது. 'DRAGON SENSOR' மேம்படுத்தல் மூலம் 6K Resolution,15+ Stops Native Dynamic Range, 120 fps @ Full 5K என அடுத்த தளத்திற்கு நகர்ந்திருக்கிறது.


கண்னை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டு விட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே.  தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது.

ஆயினும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர.. வளர, அது கொடுக்கும் வசதிகள் படைப்பாக்கத்திலிருக்கும் சுமைகளைக் குறைத்து இலகுவாக்கும். அதேநேரம் அது கொடுக்கும் சவுகரியத்தில் படைப்பின் தரம் குறைந்து போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. குறைந்த முதலீடு என்பதை அனுகூலமாக்கி தரமற்ற பல படைப்புகளும் உருவாகிட வாய்ப்புகள் உண்டு. அத்தகைய நிலை எப்போதும் முதலீட்டார்களையும் ரசிகர்களையும் தவறான முடிவுக்கும் நிலைப்பாட்டுக்கும் கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆகையால் காலமும், தொழில்நுட்பமும் வழங்கும் வாய்ப்புகளைப் படைப்பாளிகள் சரியான விதத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமான படைப்புகளை உருவாக்கிட வேண்டும். ஆரோக்கியமான படைப்புகள் உருவாக்க தகுதியான படைப்பாளிகள் வேண்டும். தகுதியான படைப்பாளி என்பவன் தகுந்த அறிவும் அனுபவமும் கொண்டு, அதன் வழி பெற்ற படைப்பாளுமை கொண்டவனாகிருப்பான். அத்தகைய படைப்பாளிகளாலேயே நேர்த்தியான படைப்புகளை உருவாக்கிட இயலும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

கருத்துகள்

  1. பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.எனக்கும் ரொம்ப நாளா கெனொன் கேமரா வாங்க ஆசை.இந்த பதிவு தெளிவாக்கி இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. பல புதிய விவரங்களை அறியத் தந்த இடுகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஹலோ பாஸ், உங்கள் தளத்தை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது வேண்டுகோள் ஒன்று. நீங்கள், விலை குறைந்த கேமராக்கள்(குறும்படம் & திரைப்படம் எடுப்பதற்கு போதுமான கேமராக்கள்) தொடர்பாக ஒரு பதிவு எழுதவேண்டும். அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராஜா சார். முந்திய கட்டுரைகளில் அவற்றை எழுதிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,