முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Dark Knight Rises: நம்பிக்கைக்குரிய நாயகன்.!



கிருஸ்டோபர் நோலன் எப்போதும் நம்மை ஏமாற்றியதில்லை. இம்முறையும் அப்படியே.  ‘The Dark Knight Rises’ மூலம், தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கிறார். சத்யத்தில் காலை 9.30 மணிக்காட்சியில் படம் பார்த்தேன். இப்போது இந்தக் கணம் வரை படத்திலிருந்து வெளிவரமுடியவில்லை.

நோலன், பல செய்திகளை இப்படத்தில் வைத்திருக்கிறார். முதல் பாகமான ‘Batman Begins'-இல் துவங்கிய இப்பயணம், இதில் சரியான ஒரு முடிவை அடைகிறது. முதல் பாகத்தில் அறிமுகமான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவங்களும், குறிக்கோளும், வழிமுறையும்,  லட்சியமும் இப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

தீயவர்களின் கூடாரமாகியிருந்த தன் நகரைச் சுத்தப்படுத்த பல நிலைகளை பேட்மேன் கடந்து வரவேண்டியதிருந்தது. முந்தைய இரண்டு பாகங்கள் அதைத்தான் விவரித்தன. தான் உருவாக்கிய அமைதி, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதனால், தானே கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தப்பி ஓடும் பேட்மேனை, இரண்டாம் பாகமான ‘The Dark Knight’-இன் இறுதியில் பார்க்க முடியும். அதன் பிறகு பேட்மேனின் தேவையற்று, தீயவர்களின் குறுக்கீடு இல்லாமல் அமைதியாக கோத்தம் நகரம் வாழ்ந்து வருகிறது. பேட்மேன் கொலைகாரனாக தப்பி ஓடி எட்டு வருடங்கள் கடந்து போன நிலையில் ‘Bane’ வடிவில் ஒரு புதிய, பெரும் ஆபத்து கோத்தம் நகருக்கு வருகிறது. அது தலைமறைவாகிப்போன பேட்மேனை வெளிக் கொண்டுவருகிறது.  சீரழிந்து கிடந்த ‘கோத்தம்’ நகரை மீட்டெடுக்க பேட்மேன் செய்த அத்தனை செயல்களும் தியாகங்களும் பயனற்றுப்போவதே, இப்படத்தில் பேட்மேன் சந்திக்கும் சவால்.

தன் மக்களுக்காக போராட விரும்பும் எந்த  நாயகனும் தலைவனும், தன் கடமை முடிந்துவிட்டதாக எந்நிலையிலும் விலகி விட முடியாது என்பதும்.. செய்த, செய்கிற எந்த தியாகமும் முடிவல்ல என்பதும் இப்படம் சொல்லும் செய்தி. உலகின் அத்தனை தலைவர்களுக்கும் இது பொருந்தும். அத்தனை சிறந்த புரட்சியாளர்களின் வாழ்விலும் இது நிகழ்ந்திருக்கிறது. அத்தகைய உயர்ந்த நிலையை காமிக்ஸ் கதாப்பாத்திரமான ‘Super Hero’ ஒருவனோடு சம்பந்தப்படுத்தி, அக்கதாப்பாத்திரத்தின் மேன்மையை உயர்த்தி விடுகிறார் நோலன். ஆழ்ந்த பல கேள்விகளும், சிந்தாந்தகளும் பதில்களும் கொண்ட இம்மூன்று பாக பேட்மேன் தொடர்.. முழுமையான, நிறைவான ஒரு முடிவை அடைந்திருக்கிறது. படத்தின் முடிவில் முந்தைய இரண்டு பாகங்களும் மனதில் ஓட.. மீக நீண்ட பெரியதோர் சூழலிலிருந்து வெளிவருவதை உணர முடிந்தது.

இப்படத்தில் இரண்டு சங்கடங்களை நான் காண்கிறேன். ஒன்று, வில்லனான ‘Bane’ பற்றிய தகவல்கள் குறைவாக இருப்பது. அவன் யார், அவன் ஏன் இப்படி இருக்கிறான், ஏன் முகமூடி போட்டுக்கொண்டிருக்கிறான் போன்ற கேள்விகளுக்குச் சரியான போதுமான தகவல்கள் படத்தில் இல்லை. அதனால் அவனைப்பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொண்டு படத்தைப் பார்ப்பது நலம். இரண்டாவது, பேட்மேன் காமிக்ஸை படித்தவர்களுக்கு இப்படத்தில் சொல்லப்படும் பல செய்திகள் காட்சிகள் முன்பே தெரிந்திருப்பதனால் அவர்களைத் திருப்தி படுத்தவும் படம் தவறுகிறது. ஆனாலும் சிறப்பான ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணியிசையும், தேர்ந்த இயக்கமும் நம்மைப் புதியதோர் சூழலுக்கு கொண்டு செல்வதை மறுக்கமுடியாது.

இப்படம், மற்ற இரண்டு படங்களின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டிய படம். முந்தைய அவ்விரு படங்களையும் பார்க்காமல் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு பல இடங்கள் புரியாமல் போகும். அதனால் நண்பர்களே மற்ற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இப்படத்திற்கு போகவும்.

அல்லது கருந்தேள் எழுதிருக்கும் இப்பதிவுகளைப் படித்து விட்டு, படம் பார்க்கச் செல்லவும்..









கருத்துகள்

  1. இந்த படம் பார்க்கனும்னு ஏற்கனவே தோனுச்சு.. ஆனா உங்க பதிவ படிச்சதும் இப்பவே பாக்கனும்னு தோனுது...


    நன்றி நட்பே...

    பதிலளிநீக்கு
  2. கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டின் அதி புத்திசாலியான இயக்குனர். பிரபலமான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்,ஜேம்ஸ் கேமரூன், ரிட்லி ஸ்காட் போன்றவர்களை விட மிக திறமையானவர். நீங்கள் நன்றாக விமர்சனம் செய்துளீர்கள். ஒரு சில பதிவாளர்கள் நோலன் என்றால் யார் என்றே தெரியாமல் எதையோ எதிர்பார்த்து இந்த படத்துக்கு சென்று,தாங்கள் விரும்பியது இல்லாத ஆத்திரத்தில் கண்ணா பின்ன என்று செல்வராகவன் பட ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களை போன்று இயக்குனர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சிலரே இந்த படத்தை பற்றி உண்மையாக சொல்ல முடியும். கடைசியாக நோலனின் the prestige படம் பார்த்துவிட்டு அதை பற்றி சில கருத்துக்கள் வெளியிடுங்கள். Very clever film making.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சித்ரவேல், காரிகன்.

    காரிகன்//- உண்மைதான் கிறிஸ்டோபர் நோலன் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர். தன் படங்களை எப்போதும் உளவியல் ரிதியாக அனுகுபவர். என் விருப்பத்திற்கு உரியவர். அவருடைய எல்லாப் படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்களைப்பார்க்கும் போது, நாம் புதியதோர் சூழலில் தள்ளப்படுவதை உணர முடியும். ’The Prestige' அத்தகைய படங்களில் ஒன்றுதான்.. :)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது சார் ... நன்றி !

    பதிலளிநீக்கு
  5. முதலிரண்டு பாகங்களை பார்த்ததாலும் கருந்தேளின் பதிவுகளை படித்ததாலுமே இந்த மூன்றாம் பாகம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. ஒளிப்பதிவாளரே வணக்கம்.

    இன்று 'சுழல்' என்றொரு திரைப்படம் பார்த்தேன். இடைவேளை வரை ஒன்றும் தோன்றவில்லை. படமும் நன்றாக இல்லை. இடைவேளைக்குப்பிறகு ரயிலில் பயணம் செய்து, கப்பலில் மரண விளையாட்டு ஆட ஆரம்பித்ததும் தான் ' இது ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி' என்றும்,, அந்த ஒரிஜினல் படத்தைப்பற்றிய உங்களின் ஒரு கட்டுரையை படித்ததாகவும் நினைவு வந்தது.ஆனாலும் ஒரு சந்தேகம். அது நீங்கள் எழுதிய கட்டுரை தானா? ஆம் எனில் அது எந்தப்பக்கம் எனக்குறிப்பிட்டுச்சொல்ல முடியுமா? நான் தேடிப்பார்த்துச்சலித்து விட்டேன்.

    பேராசிரியர்
    பி.ஜி.கதிரவன், மதுரை.

    பதிலளிநீக்கு
  7. professor PGK: வணக்கம் சார்..

    நீங்கள் சொல்லுவது போன்ற காட்சிகள் கொண்ட படத்தைப்பற்றி நான் எழுதியதாக நினைவில்லை. அநேகமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். மன்னிக்கவும். ஆனால் அது என்ன படமாக இருக்கும் என்று யோசித்து முடிந்தால் சொல்லுகிறேன்.. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,