முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு

தகவல்: இப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது. கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை - 78 தொடர்புக்கு:   https://www.facebook.com/discovery.palace?fref=ts ------------------------------------------------- தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பிக்சல் - முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்...

'Gravity' திரைப்படம் ஒரு பார்வை:

'Gravity' படத்தை எத்தனை முறை பார்த்தாலும், படத்தின் முடிவில் அது ஏற்படுத்தும் பரவச மனநிலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவரவே முடிவதில்லை. அத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதுவெழுப்பும் மனக் கிளர்ச்சியை வார்த்தைகளால் இங்கே விவரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இசையை அனுபவிக்கும் போது ஏற்படுமே.. அதுபோன்றொரு மன ஓட்டத்தை இப்படம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. சிந்தனைத் தொடர்ச்சி ஒன்று ஏற்பட்டு வளர்ந்துகொண்டே போகிறது. வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா. பூமியிலிருந்து 372 மைல் தூரத்தில் தனித்து விடப்படும் கதாப்பாத்திரங்களோடு நாமும் கைவிடப்பட்டதான ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. அண்ட வெளியில் பரவிக்கிடக்கும் ஆழ்ந்த அமைதியே மனமெங்கும் எதிரொலிக்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதை திரையரங்கில் விரவிக்கிடக்கும் அமைதி உணர்த்துகிறது. மற்ற திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறானதொரு தளத்தில் இயங்குவதை படம் துவங்கிய சிறிது ந...

திரைத்துறையில் முகமறியா மனிதர்கள்:

பொதுவாக,  ஒரு திரைப்படத்தில் நான் பணி புரியும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடைவேன். இந்தக் கணமே நிஜம் என்பதைப்போல முழு ஈடுபாட்டுடன் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். இத்தனை நாள் காத்திருந்ததும், போராடியதும் இதற்குத்தானே என்பதாய் என் மனநிலை இருக்கும். வாழ்க்கையின் அதி உன்னத கணத்தில் வாழ்வதாய் மகிழ்வேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும், முதல் நாள் படப்பிடிப்பைப் போன்றே மிகுந்த உற்சாகத்தோடு அணுகுவேன். அப்படியே ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆயினும், ஒரு சில நாட்கள் பதட்டம் நிறைந்ததாக இருந்துவிடுகின்றன. அத்தகைய நாட்களில் என் மனம் பெரும் போராட்டத்திற்க்கு ஆளாகும்.. உதவியாளராக இருந்த காலங்களில் அத்தகைய நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்பதிவாளராக உயர்ந்த பிறகு அப்படியான நாட்கள் மிக அரிதானவையே!ஆனால், தற்போது பணிபுரிந்துக்கொண்டிருக்கும் படமான ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்தின் அண்மைக்காலப் படப்பிடிப்பில் அத்தகைய நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது... ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பல தொழில்நுட்பாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்...

Working Stills..

நான் வேலைப்பார்த்த படங்களிலிருந்து சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். உடன் அப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமராக்களின் பெயர்களையும் கொடுத்துள்ளேன். ஒரு தகவலுக்காக.. ‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red Epic Digital Camera) ‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red EPic Digital Camera with Optima Zoom) ‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red EPic Digital Camera with Optima Zoom) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘மாத்தியோசி’ படத்திலிருந்து (Arri 435 Extreme Film Camera) ‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera) ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Red MX Digital Camera) ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Canon C300 Digital Camera) ‘அழகு குட்டிச் செல...

தங்க மீன்கள் - பாசவலைக்குள்..

வாத்தியாரின் பிள்ளை மக்கு என்பதாய், படிப்பில் நாட்டமில்லாது வளர்ந்த தகப்பனுக்கும், அவனைப் போலவே படிப்பில் விருப்பமில்லா மகளுக்குமிடையே நிகழும் பாசக் கதையிது. நம் கல்வி முறை, பிள்ளைகளின் குழந்தைப் பிராயத்தை எப்படி நாசமாக்குகின்றன என்பதை பேசும் கதை(?!) என்பதாக, அல்லது சராசரி I.Q-விற்கும் குறைவான அறிவு கொண்ட தகப்பன், மகளுக்குமிடையேயான கதை என்பதாக எடுத்துக் கொள்ளவும் சாத்தியம் கொண்ட கதை. தகப்பன் மகள் இருவருமே பிரதான கதாப்பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்குத் தகுந்த துணைப்பாத்திரங்கள். தாத்தா, அப்பத்தா, அம்மா, அத்தை, தந்தையின் நண்பன், தோழி, வாத்திச்சி, பள்ளி மேலாளர் என நேர்த்தியான பாத்திரப்படைப்புகள். அன்பை, பாசத்தை நெகழ்வாய் பேசும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ராம் கொடுத்திருக்கிறார். கையாலாகாதவனாக மதிப்பிடப்படும் ஒரு தகப்பனின் பாசப்போராட்டத்தை, அவனது இயலாமையை, அப்படியான தகப்பன்களின் சார்பாக ஒரு கதையை இயக்குனர் ராம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மையோர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டலாம். பலருக்கு அப்படி இல்லாமலும் போகலாம். அவர்கள் இ...

‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக, கதாநாயகியைத் தேர்வு செய்யும் வேலையிலிருந்தோம். கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களை தருவித்துத் தரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் (co-ordinators)பலர் இங்கே உண்டு. அதிலொருவர் எங்கள் அலுவலகம் வந்திருந்தார். எங்கள் கதாப்பாத்திரத்தின் தேவையைச் சொல்லி, அதற்கு ஏற்ற நாயகியை தருவித்துத் தரச்சொன்னோம். அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?! “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா..?” எங்களுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..?” என்று கேட்டேன். அதற்கு அவர்.. “ரெட் ஃபிலுமுன்னா ஆர்டிஸ்டு நடிக்க மாட்டாங்க சார்.. ஃபிலிமில் சூட் செய்தாத்தான் நடிக்க வருவாங்க..” என்றார். எனக்கு அதிலிருக்கும் தர்க்கம் புரியவேயில்லை. “அட, இது என்னப்பா புது கதையா இருக்கே..!” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவை...

ஆசீர்வதிக்கப்பட்ட கணம்

எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.