முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

iPhoneography: ஐஃபோனோகிராபி

‘ஐஃபோனோகிராபி’ என்பது  ‘Apple iPhone’-ஐப் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படக்கலையைக் குறிப்பது. இம்முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்ற புகைப்படக்கலையிலிருந்து சற்றே வேறுபடுகிறது. காரணம்.. இவை முழுக்க ‘iOS device’களை மட்டுமே பயன்படுத்தி எடுப்பதாகும். ‘iOS device’ என்பது Apple நிறுவனத்தின் ‘mobile operating system’(மொபைல் இயக்க முறைமை)-ஐக் குறிக்கிறது. எப்படி ‘ Google's Android’, ‘ Microsoft's Windows Phone’ இருக்கிறதோ, அதுபோல இதுவும் ஒரு இயக்க மென்பொருள்.

2007-ஆம் ஆண்டு ஆப்பிள் தன்னுடைய ‘iPhone 2G’ தொலைபேசியை அறிமுகப்படுத்தியதிலிருந்து இந்த ‘ஐஃபோனோகிராபி’ என்னும் கலை துவக்கம் பெற்றது. ஆரம்பத்தில் ‘2 megapixel’ தரத்திலிருந்த இப்படங்களின் தரம், இன்று ‘8-megapixel’தரத்தை எட்டியிருக்கிறது. ஐஃபோனை பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள், அதிலேயே திருத்தமும் (Corrections) செய்யப்படுகிறது.

புகைப்படக்கலை என்பது கேமராவைப் பயன்படுத்திப் படமெடுப்பது மட்டுமல்ல. அவற்றைத் தக்க வகையில் திருத்தம் செய்து, வண்ணங்களை நிர்ணயித்து, சரியான வடிவத்தில் வெளியிடுவதுமாகும். இந்தத் திருத்தங்கள் முன்பெல்லாம் 'Optical Correction'-ஆக இருந்தது. பின்பு கணினி வந்த போது அவை, டிஜிட்டல் மயமானது. ஆக.. ஒரு புகைப்படமென்பது படம் பிடிக்கப்படுவது மட்டுமின்றி, தக்கவகையில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்படுவதுதான் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அவ்வகையில் தற்போது ‘ஐஃபோனோகிராபி’-இல் இவை அனைத்தும் ஐஃபோனைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. மேலும்.. ஆப்பிள் நிறுவனத்தின் ipod, ipad போன்ற கருவிகளுயும் பயன்படுத்தப்படுகின்றன.

ஐஃபோனோகிராபி என்பது வேகமாக பரவி வரும் ஒரு கலையும் கூட. உலகின் பெரும் புகைப்படக்கலைஞர்கள் கூட இவ்வகைப் புகைப்படங்களை ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். ‘The New York Times’ பத்திரிக்கை 2011-ஆகஸ்டில் ‘Instagram’-இல் பதியப்பட்ட  இவ்வகைப்படங்களை வெளியிட்டது. புகைப்படக்கலைஞர் ‘Damon Winter’ ஆப்கானிஸ்தானின் போரில் எடுத்த ஐஃபோன் புகைப்படங்களுக்காக விருதைப்பெற்றார்.

அண்மையில் நானும் கூட ஐஃபோன் வாங்கினேன். அப்புறமென்ன ‘ஐஃபோனோகிராபி’-ஐத் துவங்கிவிட்டேன். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.















கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால