முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

iPhoneography: ஐஃபோனோகிராபி

‘ஐஃபோனோகிராபி’ என்பது  ‘Apple iPhone’-ஐப் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படக்கலையைக் குறிப்பது. இம்முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்ற புகைப்படக்கலையிலிருந்து சற்றே வேறுபடுகிறது. காரணம்.. இவை முழுக்க ‘iOS device’களை மட்டுமே பயன்படுத்தி எடுப்பதாகும். ‘iOS device’ என்பது Apple நிறுவனத்தின் ‘mobile operating system’(மொபைல் இயக்க முறைமை)-ஐக் குறிக்கிறது. எப்படி ‘ Google's Android’, ‘ Microsoft's Windows Phone’ இருக்கிறதோ, அதுபோல இதுவும் ஒரு இயக்க மென்பொருள்.

2007-ஆம் ஆண்டு ஆப்பிள் தன்னுடைய ‘iPhone 2G’ தொலைபேசியை அறிமுகப்படுத்தியதிலிருந்து இந்த ‘ஐஃபோனோகிராபி’ என்னும் கலை துவக்கம் பெற்றது. ஆரம்பத்தில் ‘2 megapixel’ தரத்திலிருந்த இப்படங்களின் தரம், இன்று ‘8-megapixel’தரத்தை எட்டியிருக்கிறது. ஐஃபோனை பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள், அதிலேயே திருத்தமும் (Corrections) செய்யப்படுகிறது.

புகைப்படக்கலை என்பது கேமராவைப் பயன்படுத்திப் படமெடுப்பது மட்டுமல்ல. அவற்றைத் தக்க வகையில் திருத்தம் செய்து, வண்ணங்களை நிர்ணயித்து, சரியான வடிவத்தில் வெளியிடுவதுமாகும். இந்தத் திருத்தங்கள் முன்பெல்லாம் 'Optical Correction'-ஆக இருந்தது. பின்பு கணினி வந்த போது அவை, டிஜிட்டல் மயமானது. ஆக.. ஒரு புகைப்படமென்பது படம் பிடிக்கப்படுவது மட்டுமின்றி, தக்கவகையில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்படுவதுதான் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அவ்வகையில் தற்போது ‘ஐஃபோனோகிராபி’-இல் இவை அனைத்தும் ஐஃபோனைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. மேலும்.. ஆப்பிள் நிறுவனத்தின் ipod, ipad போன்ற கருவிகளுயும் பயன்படுத்தப்படுகின்றன.

ஐஃபோனோகிராபி என்பது வேகமாக பரவி வரும் ஒரு கலையும் கூட. உலகின் பெரும் புகைப்படக்கலைஞர்கள் கூட இவ்வகைப் புகைப்படங்களை ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். ‘The New York Times’ பத்திரிக்கை 2011-ஆகஸ்டில் ‘Instagram’-இல் பதியப்பட்ட  இவ்வகைப்படங்களை வெளியிட்டது. புகைப்படக்கலைஞர் ‘Damon Winter’ ஆப்கானிஸ்தானின் போரில் எடுத்த ஐஃபோன் புகைப்படங்களுக்காக விருதைப்பெற்றார்.

அண்மையில் நானும் கூட ஐஃபோன் வாங்கினேன். அப்புறமென்ன ‘ஐஃபோனோகிராபி’-ஐத் துவங்கிவிட்டேன். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.















கருத்துகள்

  1. பரவாயில்லை....!@

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஐஃபோனியோகிராபி பற்றி இன்று தான் தெரியும்,படங்கள் அருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. ennoda d70s Camera use seithu edukkum photos vida 1000 madangu arumayaana photographs. vaazhthukkal

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,