முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

AZHAGU KUTTI CHELLAM (OFFICIAL MUSIC VIDEO)


எங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தில் வரும் இப்பாடலைக் கேட்ட கணத்திலேயே எனக்குப் பிடித்துப்போய் விட்டது. படத்தின் உயிர்ப்பை அப்படியே கொண்டு வந்திருக்கிற பாடல் இது. பாடலின் வரிகளை பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்கள் எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாட, கேபா தன் கிடார் மீட்டலின் வழியே உயிரூட்ட, ஒரு அற்புத அனுபத்திற்குள் நம்மை ஆழ்த்தியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர் சுகவனம்.

எங்கள் குழுவில், அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய இப்பாடலை, படத்தின் முன்னோட்டமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பினோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளோடு இப்பாடலை தற்போது வெளியிட முடியாத நிலையில், இதற்கென்றே ஒரு காட்சி வடிவத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இப்பாடலின் உயிர்நாடிகளாக, வரிகளோடு இணைந்து குரலும் கிடாரும் இருப்பதை உணரமுடியும். ஆகவே அக்கலைஞர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறோம். கடல், மரியான் போன்ற படங்களில் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் கிடார் மீட்டிய கேபாவுக்கும், ’நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் நம்மைக் கவர்ந்த சக்தி ஸ்ரீ கோபாலனுக்கும் முன்னுரையோ அறிமுகமோ தேவையில்லை.

குழந்தைகள், கடவுளின் பிரதிகள் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு அருளப்படும் வரம். ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைகள் கொண்டு வரும் வசந்தத்தை, மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது. பலரின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதே குழந்தைகள்தான். குழந்தைகளே நம்மை மீட்க வந்த மீட்பர்கள். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் அதைத்தான் சொல்லுகின்றன... எங்கள் திரைப்படத்தின் மைய கருத்தும் அதுதான்!

அமைதியான சூழலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அடிமை கொள்ளும் இப்பாடல்!

   

    

கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் சார்.... மிகச் சிறப்பாக இருக்கிறது... படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....

    பதிலளிநீக்கு
  2. very Soothing music & voice .

    Black & white stills also too good ...

    Congrats to team AKC...

    பதிலளிநீக்கு
  3. Dear Sir,
    Arumayana Thalattu...
    Melody Camara Moving...
    Nice Lighting...
    I realise your perfomance sir..
    I realy miss sir...
    I Wish you All Success to sir..
    -thamizh sathya

    பதிலளிநீக்கு
  4. கேபா வின் கிடார் இசையோடு சக்திஸ்ரீ யின் குரல் தேனாக ஒலிக்கிறது முத்துக்குமாரின் அருமையான வரிகளை உங்கள் கேமரா நிச்சயம் கவித்துவத்துடன் பதிவு செய்திருக்கும் வாழ்த்துக்கள் விஜய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால