முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்ததும் கற்றதும்:


கிட்டத்தட்ட, வாழ்வின் பாதி நாட்களை / வருடங்களை கடந்து விட்டேன். கடந்து வந்த வாழ்வை திரும்பிப் பார்க்கையில், ஒன்று புலப்படுகிறது..

‘எதுவும் நிரந்தமில்லை’

வயதுக்கேற்ப சிந்தனைகள் மாறுகின்றன‌. சிந்தனைக்கேற்ப விரும்பங்கள் மாறுகின்றன‌. விருப்பங்களின் பொருட்டு செயல்கள் மாறுகின்றன‌. செயல்களைப்பொறுத்து சிந்தனைகள் மாறுகின்றன‌. 

நிகழ்ந்தன‌, நிகழ்வன‌, நிகழப்போவன‌ என சிந்தனை எப்போதும் கலவையாகவே இருக்கிறது. நிகழ்ந்தவற்றை  அடிப்படையாகக் கொண்டு, நிகழப்போவதை  மனம் திட்டமிடுகிறது, எதிர்ப்பார்க்கிறது. ஆனால், மனதுக்கு மட்டுமே மூன்று காலங்கள் இருக்கிறது, வாழ்விற்கில்லை. வாழ்வு நிகழ்காலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு நதியைப்போல வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஓடிக்கொண்டே’ இருக்கிறது. 

எத்தனை நிகழ்வுகள், எத்தனைக் கவலைகள், எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஏமாற்றம், எத்தனைக் கனவுகள்.. எல்லாமே கடந்து சென்று கொண்டேதான் இருக்கின்றன‌.

எதிர்ப்பார்ப்பு நம்மை எதிர்காலத்தில் வாழச்செய்கிறது. ஏமாற்றம் கடந்த‌ காலத்தில் வாழச் செய்கிறது. நிகழ்காலம் கடந்துகொண்டிருப்ப‌தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம் பெரும்பாலும். எதிர்காலத்தின் கனவும், கடந்த காலத்தின் நினைவும் மனதை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும் அதேநேரம், நிகழ்காலம் கரைந்து செல்கிறது கவனிப்பார‌ற்று.

எது சரி..? எது தவறு..? காலத்தே எல்லாம் மாற்றம் கொள்கிறது. என் அனுபவத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் சிந்தனை, விருப்பம், கொள்கை, முடிவு எல்லாம் மாற்றம் அடைகிறது. முற்றிலும் புதியதோர் நிலையை அடைகிறோம். சரி தவறுகள் தலைகீழ் மாற்றத்தை அடைகிறது. கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான பலனை, பாடத்தை வாழ்வு திரும்பித்தருகிறது. கண்ணுடையோர் அதை கண்ணுறுகிறார்கள். நல்லதோ கெட்டதோ.. முற்பகல் செய்யின் பின்பகல் விளையும் என்ற மூதோர் வார்த்தை உண்மை. 

கனவுகளை அடைய.. தகுதியே, மிக சுலபமான வழி. குறுக்கு வழிகள் பல இருப்பினும் அவை நிலைப்பதில்லை என்பதும் உண்மை. கனவுகளை அடைய.. தகுதியோடு சாமார்த்தியம் வேண்டும். சாமார்த்தியம் பல வகைப்படுகிறது. ஆயினும், அவை அத்தனையும், மனிதர்கள் கையாள்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 

எதை அடைந்தாலும், எதைச் சேர்த்தாலும், எதைக் கொண்டாலும், எதைக் கடந்தாலும்.. மனிதர்களுக்கு வாழ்வு குறித்தான ஒரு ஏமாற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்து வந்த பாதை எத்தனை உயர்வாக இருப்பினும், வெற்றிகள் பல வசமாகி இருப்பினும் ஏதோ ஒரு ஏமாற்றம், ஏதோ ஒரு ஏக்கம் மீதம் இருந்துக்கொண்டே இருக்கிறது அனைவருக்கும். 

நட்பு, காதல், பாசம் ஆகியவை எத்தனை தூரத்தை, எத்தனை ஏமாற்றத்தை, எத்தனை வருத்தத்தை, எத்தனை வலியைக் கடந்தும் அப்படியே இருக்கின்றன‌. ஒரு சொல், ஒரு நிகழ்வு, ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு பிறப்பு, ஒரு மரணம் அதை எளிதாக மீட்டெடுத்துவிடுகிறது. கடந்த கால நட்பு, கடந்த கால காதல், கடந்த கால பாசம் என்று எதுவுமில்லை.

காலம், நம்மை முன் நகர்த்தவே செய்கிறது. கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் நன்மையே செய்திருக்கின்றன‌. இயற்கை நம்மை மேம்படுத்தவே முயற்சிக்கிறது எப்போதும். வளர்ச்சி என்பது, உடல், பொருள், மனம் மூன்றின் கலவை. மனம் என்பதை ஆன்மா என்று புரிந்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட எல்லோரும் பொருள் ஈட்டுவதைப்பற்றி அறிந்திருக்கிறோம். பலர் உடலைப்பற்றியும் அதை பராமரிப்பதைப்பற்றியும் கவனம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிக சொற்பமானவர்கள் மட்டுமே மனதைப் பற்றியதான விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வின் எல்லா கண‌ங்களும், எல்லா செயல்களும், எல்லா நிகழ்வுகளும் இம்மூன்றையும் பாதிக்கின்றன‌. காலத்தே பொருளும், உடலும் மாற்றம் கொள்கிற அதே அளவில் மனம் மாற்றம் அடைவதில்லை. மனம் எப்போதும் பின் தங்கியே இருக்க விரும்புகிறது. நிகழ்ந்தவற்றையே பற்றிக்கிடக்க விரும்புகிறது. கனவு காணும் மனம், அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பதில்லை பெரும்பாலும். மனதிற்கு, தெரியா எதிர்காலத்தை விட தெரிந்த கடந்த காலம் வசதியாக இருக்கிறது. அதன் பொருட்டே.. எப்போதும், அது மகிழ்ச்சியோ, துயரமோ கடந்தகாலத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறது. பல சரடுகளாய் பின்னிப்பிணைந்து கிடக்கும் மனதை ஒற்றைச் சரடாய் மாற்றுவதே சுக வாழ்விற்கான ரகசியம். சாதனை, வெற்றி, அமைதி, மகிழ்ச்சி இவை அனைத்தும் ஒற்றை சரடு மனதின் மகத்துவம். 

கடவுள் இருப்பு, உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால், கடவுளின் இருப்பு அவசியமாகிறது. இருந்தால் நல்லது.

முகம், அகத்தின் கண்ணாடி என்பதை மறுப்பதற்கில்லை. எத்தனை அரிதாரம் பூசினாலும் அது பல்லிளிக்கவே செய்கிறது. முகம் காட்டிக்கொடுக்காத மனிதனை நான் சந்தித்ததே இல்லை.

பணம், அவசியமானது. 

மரணம், எத்தனை நிஜம்! சுகமா என்று தெரியவில்லை.


வாழ்வென்பது ஒரு பயணம்.. சுற்றுலாப்பயணம். அவ்வளவுதான்.

கருத்துகள்

  1. Unmai..... evvalavu nitharsanamana vaarthaigal.... sutrula payanathil sernthu payinippom.....

    பதிலளிநீக்கு
  2. I am just 23.. And I feel ur thoughts right now. But I am not confirmed so I confused. From this ur experience I confirmed thoughts and I agreed with u... Life is like a river forever

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு, நிகழ்காலத்தில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ, அதுவே எதிர்காலத்திர்த்திக்கான பலன். கடந்த காலத்தை சுவையானதாக மாற்ற, நிகழ் காலத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும். என்பதை இந்த கட்டுரை அற்புதமாக எடுத்துரைத்துள்ளது. காலத்திற்கு ஏற்ப, தேவைகள் எதுவாயினும் அதற்கான உழைப்பு, உண்மையாக இருக்க வேண்டும் என்பதை உணரச்செய்கிறது... நன்றி சார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு