முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CINEMATOGRAPHY LIGHTING WORKSHOP - CHENNAI (10/06/17)



சென்னையில் ஒருநாள் ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறை இனிதே நடந்து முடிந்தது.  வழக்கம்போல பல்துறை ஆர்வலர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், ஐ.டி துறையினர், பிஸினெஸ்மேன் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.  கேரளாவிலிருந்து மூன்று மாணவர்கள், பெங்களூரிலிருந்து இரண்டு மாணவர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், சென்னை என்று பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்திருந்தார்கள். நிறைவான அரங்கம்.

ஒளிப்பதிவின் அடிப்படை என்ன..? ஒளியமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை..? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அவற்றை எல்லாம் நடைமுறையில் சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் செய்முறை வகுப்பாக நடத்தினோம்.  அதற்காக, நாங்கள் திரைத்துறையில் பயன்படுத்தும், தொழில்முறை கருவிகளை, விளக்குகளை, அதன் துணைக்கருவிகள் அனைத்தையும் வரவழைத்திருந்தோம்.  

திரைத்துறையில் பயன்படுத்தும் கருவிகள், விளக்குகள் மற்றும் அதன் வகைகள், ஒளியமைப்பில் பயன்படும் துணைக்கருவிகள், அவற்றைப்பயன்படுத்து முறை, என எல்லாவற்றையும் செயல்முறை விளக்கமாக செய்துக்காட்டினோம்.  ‘Three Point Lighting’ செய்வது எப்படி..? அதை கதையின் தன்மைக்கேற்ப வெவ்வேறு Genre-க்கு பயன்படுத்துவது எப்படி என்பதையும் பார்த்தோம்.  பின்பு, Single Light Source ஒளியமைப்பை செய்வது எப்படி, அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை..? அதை நடைமுறையில் எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சொல்லிக்கொடுத்தோம்.

மேலும், Color Psychology பற்றியும், அதை திரைப்படங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதையும், வெளிப்புற படப்பிடிப்பில், சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வது எப்படி என்பதையும் பார்த்தோம்.

நிறைவாக, கலந்துக்கொண்டவர்களுக்கு, Image Workshop & Panasonic சார்பாக சான்றிதழ்களை வழங்கினோம். நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.

இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்த Panasonic (Lumix GH5) நிறுவனத்திற்கும், திரு.திலிப் மற்றும் திரு.முரளி அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்புற நடத்த உதவிய தமிழ் ஸ்டியோ அருண், படிமம் மாணவர்கள் மற்றும் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

- விஜய் ஆம்ஸ்ட்ராங் / ஞானம் சுப்பரமணியன்





















































































































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...