முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Poomaram - விடை தேடும் கலை



வருடா வருடம், பள்ளிகளில், கல்லூரிகளில் ஏன் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்..!?

படிக்கத்தானே போகிறோம்..! அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம்..!? போனோமா.. படித்தோமா.. வந்தோமான்னு இல்லாம.. எதுக்கு இந்த வேண்டாத வேலை..!?

ஆட்டம், கொண்டாட்டம், கூத்து, கும்மாளம், அடிதடி, காதல், மண்ணாங்கட்டின்னு எதுக்கு இது..!?

உண்மையச் சொல்லுங்க.. இப்படி ஒரு சிந்தனை உங்களில் எத்தனை பேருக்கு இருக்கு. கலை நிகழ்ச்சின்னாவே.. அதுவும் குறிப்பா கல்லூரி கலை நிகழ்ச்சின்னாவே.. கொட்டம் அடிப்பதற்குத்தான் என்பது நம்மிடையே பதிந்து போன ஒன்று. கும்பல் கும்பலா, குருப் குருப்பா சேர்ந்து ஆட்டம் போடறதுக்கும், சண்டை போடறதுக்கும், பொண்ணுகளை கலாட்ட செய்யறதுக்கும்தான் அது பயன்படும் என்று நாம் திடமாக நம்புகிறோம் அல்லவா..!?

ஏன்.. கல்லூரி காலங்களில், ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி என்றவுடன் நமக்கே கூட அதுதான் தோன்றி இருக்கிறது.

ஜாலியாக இருக்கலாம், கொட்டம் அடிக்கலாம், பல கல்லூரிகளிலிருந்து வரும் பெண் பிள்ளைகளை சைட் அடிக்கலாம்.. ஆடலாம்.. பாடலாம்.. லாம்.. லாம்.. எல்லாமிருக்கும். மகிழ்ச்சியான தருணம் அது.

ஆயினும் கூடவே இதனால் எத்தனை பிரச்சனை வந்திருக்கிறது. எத்தனை அடிதடி நடந்திருக்கிறது. எத்தனை காயம் பட்டிருக்கிறது. எத்தனை பகை வந்திருக்கிறது. துயரமான வடுவாகவும் அது இருந்திருக்கிறது.

என்றாலும்…

ஏன் ஆண்டு தோறும்.. கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தப்படுகிறது..!?

அது ஏன் என்பதற்கான பதிலை.. அண்மையில் வெளியாக பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படம் 'பூமரம்’ சொல்லும்.

'1983' மற்றும் 'Action Hero Biju' திரைப்படங்களின் இயக்குநர் 'Abrid Shine'-இன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், உங்களை, உங்கள் கல்லூரி காலத்திற்கே அழைத்துச் செல்லும்.

குறிப்பாக உங்கள் கல்லூரி காலங்களில், நீங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவராகவோ அல்லது அதனோடு ஏதோ ஒருவிதத்தில்  தொடர்புடைவராகவோ இருந்தால்.. இப்படம் உங்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

படத்தின் துவக்க காட்சியிலிருந்து, இறுதி காட்சிவரை.. இப்படம் ஒரே ஒரு பதிலைத்தான் தேடுகிறது. இப்படத்தின் அடிநாதமும் அதுதான்.

'மனிதனுக்கு கலையின் தேவை என்ன..?'

இதை உணர்த்துவதற்கு, பல்லேறு வழிமுறைகளை இதன் இயக்குநர் கையாளுகிறார். ஓவியம், சிற்பம், நடனம், இசை, கவிதை, பாட்டு, மிமிக்கிரி, மோனோ ஆக்டிங், தத்துவம், மேற்கோள்கள் என கலையின் அத்தனை கூறுகளையும் பயன்படுத்தி, பலவிதங்களில் இத்திரைப்படம் நம்மோடு உறவாடுகிறது. கூடவே கலை எப்படி உருவாகிறது..? கலை மனிதனை என்ன செய்யும்..? என்பதற்கும் பதில் தேடுகிறது.

இத்திரைப்படம் ஒரு அனுபவம். இசை அனுபவம், காட்சிமொழி அனுபவம், தத்துவ அனுபவம். கலை அனுபவம்.

நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும், வசனமும் ஒன்றோடு ஒன்று இழைந்து தரும் பரவச அனுபவம் அது.

தவற விடாதீர்கள் நண்பர்களே..!

'Abrid Shine' ஒரு மகாகலைஞன். A True Artist


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால