முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Poomaram - விடை தேடும் கலை



வருடா வருடம், பள்ளிகளில், கல்லூரிகளில் ஏன் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்..!?

படிக்கத்தானே போகிறோம்..! அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம்..!? போனோமா.. படித்தோமா.. வந்தோமான்னு இல்லாம.. எதுக்கு இந்த வேண்டாத வேலை..!?

ஆட்டம், கொண்டாட்டம், கூத்து, கும்மாளம், அடிதடி, காதல், மண்ணாங்கட்டின்னு எதுக்கு இது..!?

உண்மையச் சொல்லுங்க.. இப்படி ஒரு சிந்தனை உங்களில் எத்தனை பேருக்கு இருக்கு. கலை நிகழ்ச்சின்னாவே.. அதுவும் குறிப்பா கல்லூரி கலை நிகழ்ச்சின்னாவே.. கொட்டம் அடிப்பதற்குத்தான் என்பது நம்மிடையே பதிந்து போன ஒன்று. கும்பல் கும்பலா, குருப் குருப்பா சேர்ந்து ஆட்டம் போடறதுக்கும், சண்டை போடறதுக்கும், பொண்ணுகளை கலாட்ட செய்யறதுக்கும்தான் அது பயன்படும் என்று நாம் திடமாக நம்புகிறோம் அல்லவா..!?

ஏன்.. கல்லூரி காலங்களில், ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி என்றவுடன் நமக்கே கூட அதுதான் தோன்றி இருக்கிறது.

ஜாலியாக இருக்கலாம், கொட்டம் அடிக்கலாம், பல கல்லூரிகளிலிருந்து வரும் பெண் பிள்ளைகளை சைட் அடிக்கலாம்.. ஆடலாம்.. பாடலாம்.. லாம்.. லாம்.. எல்லாமிருக்கும். மகிழ்ச்சியான தருணம் அது.

ஆயினும் கூடவே இதனால் எத்தனை பிரச்சனை வந்திருக்கிறது. எத்தனை அடிதடி நடந்திருக்கிறது. எத்தனை காயம் பட்டிருக்கிறது. எத்தனை பகை வந்திருக்கிறது. துயரமான வடுவாகவும் அது இருந்திருக்கிறது.

என்றாலும்…

ஏன் ஆண்டு தோறும்.. கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தப்படுகிறது..!?

அது ஏன் என்பதற்கான பதிலை.. அண்மையில் வெளியாக பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படம் 'பூமரம்’ சொல்லும்.

'1983' மற்றும் 'Action Hero Biju' திரைப்படங்களின் இயக்குநர் 'Abrid Shine'-இன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், உங்களை, உங்கள் கல்லூரி காலத்திற்கே அழைத்துச் செல்லும்.

குறிப்பாக உங்கள் கல்லூரி காலங்களில், நீங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவராகவோ அல்லது அதனோடு ஏதோ ஒருவிதத்தில்  தொடர்புடைவராகவோ இருந்தால்.. இப்படம் உங்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

படத்தின் துவக்க காட்சியிலிருந்து, இறுதி காட்சிவரை.. இப்படம் ஒரே ஒரு பதிலைத்தான் தேடுகிறது. இப்படத்தின் அடிநாதமும் அதுதான்.

'மனிதனுக்கு கலையின் தேவை என்ன..?'

இதை உணர்த்துவதற்கு, பல்லேறு வழிமுறைகளை இதன் இயக்குநர் கையாளுகிறார். ஓவியம், சிற்பம், நடனம், இசை, கவிதை, பாட்டு, மிமிக்கிரி, மோனோ ஆக்டிங், தத்துவம், மேற்கோள்கள் என கலையின் அத்தனை கூறுகளையும் பயன்படுத்தி, பலவிதங்களில் இத்திரைப்படம் நம்மோடு உறவாடுகிறது. கூடவே கலை எப்படி உருவாகிறது..? கலை மனிதனை என்ன செய்யும்..? என்பதற்கும் பதில் தேடுகிறது.

இத்திரைப்படம் ஒரு அனுபவம். இசை அனுபவம், காட்சிமொழி அனுபவம், தத்துவ அனுபவம். கலை அனுபவம்.

நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும், வசனமும் ஒன்றோடு ஒன்று இழைந்து தரும் பரவச அனுபவம் அது.

தவற விடாதீர்கள் நண்பர்களே..!

'Abrid Shine' ஒரு மகாகலைஞன். A True Artist


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,