முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Lumix S1 & S1R Test Footages



ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது.?

ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது, அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன. அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும்

லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும். அதாவது, முறையான, தரமான, சோதனைச் சாலையில் ஓடும் போது, அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும், பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம். அதேப்போலத்தான் இங்கேயும்

கேமரா நிறுவனங்கள் சொல்லும், அத்தனை சிறப்பு அம்சமும், எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும்

பொதுவாக, கேமராவை சோதிக்கும்போது.. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது என் வழக்கம். அதாவது..

  • பல்வேறு ஒளிகளில்
  • ஒரு நாளில் பல்வேறு பொழுதுகளில்
  • வெயில், மழை
  • குறைந்த ஒளி
  • மிருகங்கள், பறவைகள்
  • செடி, கொடி, மரம், வயல், கடல்
  • நீர், சூரியன், நிலா

முறையான, சரியான, நேர்த்தியான முறையில்.. அழகு நிறைந்த இடங்களை படமெடுத்தால் எந்த கேமராவும் அழகாத்தான் பதிவு செய்யும். அதிலிருந்து அக்கேமராவின் தகுதியை புரிந்துக்கொள்ள முடியாது. அதனால் தான், நாம் வாழுமிடத்திற்கு அருகிலிருக்கும், இயல்பான சூழலை படம் பிடித்து பார்த்திருக்கிறேன்

ஒரு கேமராவின் தகுதி என நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

  • Dynamic Range 
  • Colors
  • Contrast 
  • Auto Focus
  • Image Stabilisation 
  • Slow Motion Capability 
  • Low Light Recording 
  • Noise Level
  • Time lapse Recording  

இதைத்தான் இவ்வீடியோவில், சோதித்துப்பார்த்திருக்கிறேன்

என் அனுபவத்தில் Lumix S1 / S1R/ S1H கேமராக்கள்.. மிக அற்புதமான தரத்தை தருகின்றன. நண்பர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால