முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது… | 01


இப்போதைய சூழல், வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது

இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம்


காயமே இது பொய்யடாகாற்றடைத்த பையடா..!’ என்பது எத்தனை நிஜம்…!? 


நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ‘வெறும் காற்றுவெறும் மண்என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான்.


இதை உணரும் போது, மனம் வெறுமையில் நிற்கிறது.


எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில், கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு, உருட்டிஉருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது..!


என் வாழ்வில், என்னை பாதித்த, நடந்த, கடந்து, பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன். வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது, எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம்



கடவுள்


அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன். தாத்தா, பாட்டி, அம்மா, சித்திகள், மாமாக்கள் எல்லோரும் திருப்பதி போக திட்டமிட்டார்கள். அதில் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. விட்டுட்டு போனால், அழுவேன் இல்லையா?… அதனால் என்னுடைய பெரிய மாமா கலைவாணன் அவர்களோடு வயலுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் திருப்பதி சென்றுவிட்டார்கள். அங்கே வயல் கிணற்றில் ஆமை பார்த்துக்கொண்டு இவர்களை மறந்து விட்டேன். பின்பு வீடுவந்து, ஏமாற்றப்பட்டதை உணர்த்துமணி கணக்காக அழுது, சமாதானம் ஆனேன்


இச்சம்பவம், திருப்பதியை மட்டுமல்ல, கடவுள் குறித்தானமுதல் கவன ஈர்ப்பாகஎன் மனதில் பதிவாகி இருக்கிறது


சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இருந்தது. சொல்லிக்கொடுத்ததனால் வந்தது. டீச்சர் அடிக்க கூடாது, பரிட்சையில் பாசாகிடமும், வீட்டுப்பாடம் கேட்க கூடாதுஎன்பதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டி, கற்பூரம் ஏற்றி இருக்கிறேன். பின்பு, பாடத்தில்பகுத்தறிவு பகலவன்என்று பெரியாரைப்பற்றி படத்ததனாலையா அல்லது அறிவு வந்துவிட்டது என்ற ஈகோவினாலா தெரியவில்லை, கடவுள் மீதான சந்தேகங்கள் வலுப்பெற்று, நாத்திகனானேன். நடைமுறையில் கடைபிடிக்கப்பட்ட கடவுள் குறித்தான சம்பரதாயங்கள் மீதான ஒவ்வாமை அதனை செய்தது எனலாம்


கல்லூரிக் காலங்களில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சோ, ஜெயகாந்தன் படித்த போது, வாழ்வு குறித்தான பார்வை விரிவடைந்து(?) கடவுளின் இருப்பு (Existence of God) குறித்தான சந்தேகங்கள் மேலும் வலுபெற்றன


கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியே அநாவசியம் என்று திரிந்தவன்


இல்லைன்னு சொல்லலஇருந்தா நல்லாயிருக்கும்என்ற வசனத்திற்கு கைதட்டி (விசில் அடிக்க தெரியாது) ஆதரவு அளித்தவன் நான்


பிறகு வயது ஆக, ஆக… 


கவலைப்படாதே, கடந்துடலாம்நான் இருக்கேன், நாங்கள் இருக்கோம்என்ற ஆறுதல் வார்த்தைகள் சக மனிதனிடமிருந்து வந்தால் மட்டும் போதாது, என்ற சூழல்களை சந்தித்த போது, கடவுள் குறித்த என் பார்வையில் கொஞ்சம் மாற்றம் வந்தது


துணைக்கு யாரும் வரமுடியாத, பங்குபெற முடியாதஅகம், புறம் சார்ந்த சிக்கல்களில் நாம் சிக்கிக்கொள்ளும் கணங்களில், சிந்தனை சூராவளிக்குள் தனித்து நிற்கும்போது, யாருடைய கையாவது பற்றிக்கொள்ள முடியாதா? நான் இருக்கிறேன் என்று யாராவது கை நீட்டமாட்டார்களா? என்று மனம் தேடி அலையும் கணத்தில்கடவுள் குறித்தான என் புரிதல் மாற்றம் அடைந்தது


(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால