முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது… | 01


இப்போதைய சூழல், வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது

இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம்


காயமே இது பொய்யடாகாற்றடைத்த பையடா..!’ என்பது எத்தனை நிஜம்…!? 


நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ‘வெறும் காற்றுவெறும் மண்என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான்.


இதை உணரும் போது, மனம் வெறுமையில் நிற்கிறது.


எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில், கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு, உருட்டிஉருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது..!


என் வாழ்வில், என்னை பாதித்த, நடந்த, கடந்து, பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன். வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது, எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம்



கடவுள்


அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன். தாத்தா, பாட்டி, அம்மா, சித்திகள், மாமாக்கள் எல்லோரும் திருப்பதி போக திட்டமிட்டார்கள். அதில் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. விட்டுட்டு போனால், அழுவேன் இல்லையா?… அதனால் என்னுடைய பெரிய மாமா கலைவாணன் அவர்களோடு வயலுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் திருப்பதி சென்றுவிட்டார்கள். அங்கே வயல் கிணற்றில் ஆமை பார்த்துக்கொண்டு இவர்களை மறந்து விட்டேன். பின்பு வீடுவந்து, ஏமாற்றப்பட்டதை உணர்த்துமணி கணக்காக அழுது, சமாதானம் ஆனேன்


இச்சம்பவம், திருப்பதியை மட்டுமல்ல, கடவுள் குறித்தானமுதல் கவன ஈர்ப்பாகஎன் மனதில் பதிவாகி இருக்கிறது


சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இருந்தது. சொல்லிக்கொடுத்ததனால் வந்தது. டீச்சர் அடிக்க கூடாது, பரிட்சையில் பாசாகிடமும், வீட்டுப்பாடம் கேட்க கூடாதுஎன்பதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டி, கற்பூரம் ஏற்றி இருக்கிறேன். பின்பு, பாடத்தில்பகுத்தறிவு பகலவன்என்று பெரியாரைப்பற்றி படத்ததனாலையா அல்லது அறிவு வந்துவிட்டது என்ற ஈகோவினாலா தெரியவில்லை, கடவுள் மீதான சந்தேகங்கள் வலுப்பெற்று, நாத்திகனானேன். நடைமுறையில் கடைபிடிக்கப்பட்ட கடவுள் குறித்தான சம்பரதாயங்கள் மீதான ஒவ்வாமை அதனை செய்தது எனலாம்


கல்லூரிக் காலங்களில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சோ, ஜெயகாந்தன் படித்த போது, வாழ்வு குறித்தான பார்வை விரிவடைந்து(?) கடவுளின் இருப்பு (Existence of God) குறித்தான சந்தேகங்கள் மேலும் வலுபெற்றன


கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியே அநாவசியம் என்று திரிந்தவன்


இல்லைன்னு சொல்லலஇருந்தா நல்லாயிருக்கும்என்ற வசனத்திற்கு கைதட்டி (விசில் அடிக்க தெரியாது) ஆதரவு அளித்தவன் நான்


பிறகு வயது ஆக, ஆக… 


கவலைப்படாதே, கடந்துடலாம்நான் இருக்கேன், நாங்கள் இருக்கோம்என்ற ஆறுதல் வார்த்தைகள் சக மனிதனிடமிருந்து வந்தால் மட்டும் போதாது, என்ற சூழல்களை சந்தித்த போது, கடவுள் குறித்த என் பார்வையில் கொஞ்சம் மாற்றம் வந்தது


துணைக்கு யாரும் வரமுடியாத, பங்குபெற முடியாதஅகம், புறம் சார்ந்த சிக்கல்களில் நாம் சிக்கிக்கொள்ளும் கணங்களில், சிந்தனை சூராவளிக்குள் தனித்து நிற்கும்போது, யாருடைய கையாவது பற்றிக்கொள்ள முடியாதா? நான் இருக்கிறேன் என்று யாராவது கை நீட்டமாட்டார்களா? என்று மனம் தேடி அலையும் கணத்தில்கடவுள் குறித்தான என் புரிதல் மாற்றம் அடைந்தது


(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,