முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது… | 01


இப்போதைய சூழல், வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது

இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம்


காயமே இது பொய்யடாகாற்றடைத்த பையடா..!’ என்பது எத்தனை நிஜம்…!? 


நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ‘வெறும் காற்றுவெறும் மண்என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான்.


இதை உணரும் போது, மனம் வெறுமையில் நிற்கிறது.


எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில், கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு, உருட்டிஉருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது..!


என் வாழ்வில், என்னை பாதித்த, நடந்த, கடந்து, பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன். வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது, எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம்



கடவுள்


அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன். தாத்தா, பாட்டி, அம்மா, சித்திகள், மாமாக்கள் எல்லோரும் திருப்பதி போக திட்டமிட்டார்கள். அதில் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. விட்டுட்டு போனால், அழுவேன் இல்லையா?… அதனால் என்னுடைய பெரிய மாமா கலைவாணன் அவர்களோடு வயலுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் திருப்பதி சென்றுவிட்டார்கள். அங்கே வயல் கிணற்றில் ஆமை பார்த்துக்கொண்டு இவர்களை மறந்து விட்டேன். பின்பு வீடுவந்து, ஏமாற்றப்பட்டதை உணர்த்துமணி கணக்காக அழுது, சமாதானம் ஆனேன்


இச்சம்பவம், திருப்பதியை மட்டுமல்ல, கடவுள் குறித்தானமுதல் கவன ஈர்ப்பாகஎன் மனதில் பதிவாகி இருக்கிறது


சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இருந்தது. சொல்லிக்கொடுத்ததனால் வந்தது. டீச்சர் அடிக்க கூடாது, பரிட்சையில் பாசாகிடமும், வீட்டுப்பாடம் கேட்க கூடாதுஎன்பதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டி, கற்பூரம் ஏற்றி இருக்கிறேன். பின்பு, பாடத்தில்பகுத்தறிவு பகலவன்என்று பெரியாரைப்பற்றி படத்ததனாலையா அல்லது அறிவு வந்துவிட்டது என்ற ஈகோவினாலா தெரியவில்லை, கடவுள் மீதான சந்தேகங்கள் வலுப்பெற்று, நாத்திகனானேன். நடைமுறையில் கடைபிடிக்கப்பட்ட கடவுள் குறித்தான சம்பரதாயங்கள் மீதான ஒவ்வாமை அதனை செய்தது எனலாம்


கல்லூரிக் காலங்களில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சோ, ஜெயகாந்தன் படித்த போது, வாழ்வு குறித்தான பார்வை விரிவடைந்து(?) கடவுளின் இருப்பு (Existence of God) குறித்தான சந்தேகங்கள் மேலும் வலுபெற்றன


கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியே அநாவசியம் என்று திரிந்தவன்


இல்லைன்னு சொல்லலஇருந்தா நல்லாயிருக்கும்என்ற வசனத்திற்கு கைதட்டி (விசில் அடிக்க தெரியாது) ஆதரவு அளித்தவன் நான்


பிறகு வயது ஆக, ஆக… 


கவலைப்படாதே, கடந்துடலாம்நான் இருக்கேன், நாங்கள் இருக்கோம்என்ற ஆறுதல் வார்த்தைகள் சக மனிதனிடமிருந்து வந்தால் மட்டும் போதாது, என்ற சூழல்களை சந்தித்த போது, கடவுள் குறித்த என் பார்வையில் கொஞ்சம் மாற்றம் வந்தது


துணைக்கு யாரும் வரமுடியாத, பங்குபெற முடியாதஅகம், புறம் சார்ந்த சிக்கல்களில் நாம் சிக்கிக்கொள்ளும் கணங்களில், சிந்தனை சூராவளிக்குள் தனித்து நிற்கும்போது, யாருடைய கையாவது பற்றிக்கொள்ள முடியாதா? நான் இருக்கிறேன் என்று யாராவது கை நீட்டமாட்டார்களா? என்று மனம் தேடி அலையும் கணத்தில்கடவுள் குறித்தான என் புரிதல் மாற்றம் அடைந்தது


(நடந்ததும்கடந்ததும்தொடரும்)


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...