முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘Nayattu’

 


‘Nayattu’ (மலையாளம்) - வேட்டை என்று அர்த்தம் 

ஆம், படம் அப்படித்தான் இருக்கிறது


மெதுவாக, கதாப்பாத்திரங்களையும், சூழலையும் அறிமுகப்படுத்திக்கொண்டு துவங்கும் கதை, சட்டென்று ஒரு சிக்கலுக்குள் நுழைகிறது. அதன் பின் நிகழும் துரத்தல் கிளைமாக்ஸில்தான் சென்று முடிகிறது


பொதுவாக கதை சொல்லுவதில் இரண்டும் வகை இருக்கிறது

- சாதாரன மனிதர்கள், அசாதரன சூழலில், பிரச்சனையில் மாட்டிக்கொள்வது. கதாப்பாத்திரங்களை வடிவமைத்துவிட்டு, அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை விவரிப்பது. (ரோஜா, பொல்லாதவன்)

- அசாதாரன சம்பவம் அல்லது சூழலே பிரதானம், அதை விவரிப்பதற்கான கதாப்பாத்திரங்களை படைப்பது. (அறம், கைதி )


இப்படம், சாதாரன மனிதர்கள், அசாதாரன சூழலில், சிக்கலில் மாட்டிக்கொள்வது பற்றியக்கதை

அச்சிக்கலை அதிகரிப்பது, அரசியலும் அதிகாரமும். இப்படம் பேசும் அரசியல், விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தலித்துகளையும், கிருத்துவர்களையும், தமிழர்களையும் சிறுமைப்படுத்துகிறது என்று


என்பார்வையில்….

சாதிகள் அரசியல்வயமாக்கப்பட்ட சூழலில், அதிகாரம் அதனை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறது, எதிர்கொள்கிறது என்பதையும், அரசியல் தொடர்புகள் கொண்ட சாதியவாதிகள், அதிகாரத்தை எப்படியெல்லாம் வலைக்கிறார்கள் என்பதையும் தான் இப்படம் பேசுகிறது என நினைக்கிறேன். சார்பு நிலை எடுக்காமல் பார்த்தால் அது புரியும்


ஒரு திரைப்படமா இப்படம் நிகழ்ந்திருக்கும் அட்டகாசங்கள் நிறைவானது. இயல்பான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்பு, பரபரப்பான திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என இப்படம் முழுமைப்பெறுகிறது

தவறவிடக்கூடாத திரைப்படம். Netflix இல் இருக்கிறது


#Nayattu #Nayattumovie #vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால