முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘Nayattu’

 


‘Nayattu’ (மலையாளம்) - வேட்டை என்று அர்த்தம் 

ஆம், படம் அப்படித்தான் இருக்கிறது


மெதுவாக, கதாப்பாத்திரங்களையும், சூழலையும் அறிமுகப்படுத்திக்கொண்டு துவங்கும் கதை, சட்டென்று ஒரு சிக்கலுக்குள் நுழைகிறது. அதன் பின் நிகழும் துரத்தல் கிளைமாக்ஸில்தான் சென்று முடிகிறது


பொதுவாக கதை சொல்லுவதில் இரண்டும் வகை இருக்கிறது

- சாதாரன மனிதர்கள், அசாதரன சூழலில், பிரச்சனையில் மாட்டிக்கொள்வது. கதாப்பாத்திரங்களை வடிவமைத்துவிட்டு, அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை விவரிப்பது. (ரோஜா, பொல்லாதவன்)

- அசாதாரன சம்பவம் அல்லது சூழலே பிரதானம், அதை விவரிப்பதற்கான கதாப்பாத்திரங்களை படைப்பது. (அறம், கைதி )


இப்படம், சாதாரன மனிதர்கள், அசாதாரன சூழலில், சிக்கலில் மாட்டிக்கொள்வது பற்றியக்கதை

அச்சிக்கலை அதிகரிப்பது, அரசியலும் அதிகாரமும். இப்படம் பேசும் அரசியல், விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தலித்துகளையும், கிருத்துவர்களையும், தமிழர்களையும் சிறுமைப்படுத்துகிறது என்று


என்பார்வையில்….

சாதிகள் அரசியல்வயமாக்கப்பட்ட சூழலில், அதிகாரம் அதனை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறது, எதிர்கொள்கிறது என்பதையும், அரசியல் தொடர்புகள் கொண்ட சாதியவாதிகள், அதிகாரத்தை எப்படியெல்லாம் வலைக்கிறார்கள் என்பதையும் தான் இப்படம் பேசுகிறது என நினைக்கிறேன். சார்பு நிலை எடுக்காமல் பார்த்தால் அது புரியும்


ஒரு திரைப்படமா இப்படம் நிகழ்ந்திருக்கும் அட்டகாசங்கள் நிறைவானது. இயல்பான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்பு, பரபரப்பான திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என இப்படம் முழுமைப்பெறுகிறது

தவறவிடக்கூடாத திரைப்படம். Netflix இல் இருக்கிறது


#Nayattu #Nayattumovie #vijayarmstrong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...