முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தந்தையர் தினம்:


மிகச்சுதந்திரமான மனிதர். தான் விரும்பியதை செய்துப்பார்த்தவர், கடந்து வந்தவர். ஊர்ப்பெரிய மனிதரின் பிள்ளை, திராவிடக்கழகமும், திமுகவும் வளர்ந்த காலங்களில் அதன் உறுப்பினர். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த தேர்தலில், திமுக சார்பில் தேர்தலில் நின்றவர். எம்ஜிஆர் ஆள் அனுப்பிய போதும், கலைஞரின் நட்பால், அணிமாறாமல் திமுகவில் நின்று குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோற்றுப்போனவர். எம்ஜிஆர் அலையில் எல்லாம் அடித்து போனது வரலாறு. பல அமைச்சரவையில் இடம்பிடித்த  ..சண்முகம் (..) அப்பாவின் நெருங்கிய நண்பர். பிற்காலங்களில் அவர் எங்கள் தொகுதில் நின்றார். அவருக்கு தேர்தல் வேலை செய்ய வேண்டிய நெருக்கடி, நட்பு அப்படி. அதன் பொருட்டு திமுக, கலைஞர் தொடர்பை, அரசியலையும் விட்டவர்

என் பெற்றோரின் திருமணம்சுயமரியாதை திருமணம். 8 அமைச்சர்கள், 14 எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்ட பெரும் விழா அது. எங்கள் ஊருக்கு மின்சாரம் அப்போதுதான் வந்தது. அதனால், அரசியலில் அவருக்கு இரண்டும் பக்கமும் நட்பும், தொடர்பும் இருந்தது. ஊர்த்தலைவராக இருந்தார். இதெல்லாம் அவருடைய நாற்பது வயதுக்குள்ளாக என்பது இப்போது புரியும் போது, நாமெல்லாம் தூசு என்று உணர்கிறேன்


எங்களுக்குஎல்லாம் செய்துகொடுத்தார். வீட்டில் எப்போதும் சுதந்திரம் உண்டு. பெற்றோர்களுக்கே உரிய கண்டிப்பை விட, நட்பு பாராட்டும் தோழனாகவே அவர் இருந்தார். அவரிடம் எல்லாவற்றையும் பேச முடிந்தது. எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டார், பகிர்ந்துக்கொண்டோம். அவருடைய காதல் கதையைக்கூட என்னிடம் சொல்லி இருக்கிறார், அம்மா எதிரில்தான். (அதை இங்கே சொல்ல முடியாது. அவல நகைச்சுவை அது


பிறருக்கு உதவும் குணமிருந்தது. வாழ்வை சுற்றித்திரிந்து அனுபவித்திடும் போக்கு இருந்தது. உணவுப்பிரியர். சொத்து சேர்க்கும் விரும்பமில்லை. எங்களிடம் அவர் இப்படி சொல்லுவார்


எவ்வளவு வேண்டுமானாலும் படிச்சுக்கோஎன்ன செலவானாலும் பார்த்துக்கலாம். ஆனா அது உன் படிப்பால் இருக்க வேண்டும். பணம் கொடுத்து படிப்பும், வேலையும் வாங்கித்தர மாட்டேன். அதேப்போல பரம்பரை சொத்தை எதிர்பார்க்காதே


அதற்கு நான்: “அதெப்படி? எங்க தாத்தா கொடுத்தாரில்லஅதுபோல நீங்களும் கொடுக்கனும்தானே..?”


அவரு விவரம் பத்தாம கொடுத்துட்டாரு, நான் கொடுக்க மாட்டேன்…” என்பார். இதெல்லாம் நகைச்சுவையாகத்தான்


2005-இல் மறைந்துவிட்டார். ஆனாலும் இன்றுவரை, அவரை இழந்ததாக உணரவில்லை. அதிகம் ஊர் சுற்றுவார். வீட்டிலேயே இருக்கும் மனிதர் அல்ல அவர். இப்போதும் எங்களுக்கு அவர் எங்கோ வெளியூர் போய் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. கூடவே தனித்து நிற்கவும், செயல்படவும் எங்களை பழக்கி இருக்கிறார். அம்மாவையும் அப்படிதான்


யோசித்துப்பார்த்தால்நான் தனியாக சுற்றியதை விட, அவரோடு சுற்றியதுதான் அதிகமோ என்று தோன்றுகிறது. சிறுவயதில் எல்லா விடுமுறைக்கும் சுற்றுலா அழைத்துச்செல்வார். வகை வகையாக உணவு வாங்கித்தருவார். அரசியல் பேசுவார். சினிமா பிடிக்காது


எங்கள் வீட்டில் நான் அம்மா பிள்ளை. அண்ணன் அப்பா பிள்ளை. சாயல்கூட அப்படிதான் இருப்போம்.  


அப்பா எங்களை யாரிடமாவது அறிமுகப்படுத்துபோது, தமாசாக இப்படி சொல்லுவார்


பெரியவன் எதை சொன்னாலும்.. சரிப்பா, சரிப்பா என்று தலையை ஆட்டுவான். ஆனா செய்ய மாட்டான், சின்னவன் சொல்லும்போதேமுடியாது என்பான். அவன் அம்மா சொல்லனும்” 


ஆம். அது அப்படிதான் அமையும். மரியாதை இல்லாததனால் இல்லை. ஏதே ஒரு இணக்கமின்மை எனக்கு அவரோடு இருந்தது. அவர் ஒரு ஊர் சுற்றி என்பது போல ஒரு பார்வை, குறை இருந்தது எனக்கு


என் படிப்பிற்கான செலவுகளை செய்தார். ஆனால், நான் சினிமா படிப்பு படிக்க போகிறேன் என்ற போது, அதனை மறுத்து, சட்டம் படிக்க நிர்பந்தித்தார். என்னை அரசியல்வாதியாக்க விரும்பினார் என்று நினைக்கிறேன். பிறகு நான் புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டு, கேமரா கேட்ட போது மறுத்தார். நான் இன்னும் முன்பே சினிமாவிற்கு வந்திருப்பேன், அது காலதாமதம் ஆனதற்கு அவரே காரணம் என்ற கோபம் எனக்கு இருந்தது. தேவையில்லாமல் 5 வருடம் சட்டப்படிப்பில் வீணாகிவிட்டது என்ற எண்ணம்


ஆனாஇப்போது யோசித்தால், எல்லாம் சரிதான் என்று தோன்றுகிறது. அவர் நல்லதைதான் நினைத்திருந்தார். ரசனையும், விருப்பமும் வேறாக அமைந்துவிட்டது. அவ்வளவே


என் நாற்பது வயதுக்கு பிறகுபிறப்பு இறப்பு, லட்சியம், வெற்றி தோல்வி குறித்து என் பார்வை மாறிவிட்டது. பறந்து திரிந்து அடங்கி விடுவதே வாழ்க்கை என தோன்றுகிறது. இயற்கை தாய்மடியை சுற்றிப் பார்த்துவிட்டு போய்விடுவோம் என்று விரும்புகிறேன். யோசிக்க அதைதான், அவரும் செய்தார்.


நகைச்சுவை உணர்ச்சி, நீதியுணர்வு, பகைமை, பொறாமை பாராட்டாமல் இருப்பது, தேவையறிந்து உதவியது, முடிந்ததை தயங்காமல் கொடுத்தது. ஊர் சுற்றித்திரிவது, சொத்து சேமிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தது, கொஞ்சம் ஊதாரிஇதுவே அவரைப்பற்றிய நினைவு குறிப்புகள் எனக்கு


அதுதான் அவர் விட்டுப்போனசெய்தியும் கூடஎன இப்போது உணர்கிறேன்


25 வருடம் கழித்து ஊர் வந்தால், ஊர் அடையாளம் கண்டுக்கொள்கிறது. ‘அப்பா சாயல்என்கிறது. ஆம்.. அப்பா போல தொப்பை வந்துவிட்டது 😬😜


இப்போதெல்லாம் அம்மா என்ன பார்த்து அடிக்கடி சொல்லுவது


நீ அப்படியே உங்க அப்பா மாதிரி ஆயிட்டு வரடா


பாராட்டுகிறார்களாகுறைபட்டுக்கொள்கிறார்களா என்று தெரியவில்லையே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால