முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெகமே தந்திரம் : ஒரு சந்தேகம்


உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கிறது. அதில் 190 நாடுகளில், 17 மொழிகளில்ஜெகமே தந்திரம்வெளியாகியிருக்கிறது. அதாவது உலக மக்கள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கிறது. அல்லது கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் படம் இத்தனை தூரம் பயணிப்பது மகிழ்ச்சிதான்


என்றாலும், வேறொரு சந்தேகம் வருகிறதேஅப்படி உலகம் முழுவதும் கொண்டுபோவதற்கு அப்படத்தில் என்ன இருக்கிறது


- தனுஷ் எனும் பெரிய நடிகர், அவர் இன்று ஹாலிவுட் வரை சென்றிருப்பதனால் உண்டான மார்கெட்

- கார்த்திக் சுப்புராஜ் எனும் கமெர்சியல் பட இயக்குநர்

- உலகம் முழுவதும் ரசிக்க ஏதுவான ஒரு கேக்ஸ்டர் கதை.  

- திரையரங்கு முடக்கம், OTT இன் வளர்ச்சி


அவ்வளவுதானா? இப்படம் இத்தனை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதற்கு இவை மட்டுமே போதுமான காரணங்களாக இருக்க முடியுமா

இல்லை என்றுதான், எனக்கு தோன்றுகிறது. இக்கதையும், அதில் சொல்லப்பட்ட அரசியலும் காரணமாக இருந்திருக்க வேண்டும்

அதாவது, அப்படத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒருவகையில் அதுவிடுதலைப்புலிகளைகுறிவைக்கிறது. அவர்கள் மீது சேறு வாரி இறைத்திருக்கிறது. உலகம் முழுவதும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக, அவர்கள் மீதான தடையை நீக்ககோரியும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் போராடிகொண்டிருக்கும் இச்சூழலில், இப்படம் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை, அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்கிறார்கள்


நாட்டின் விடுதலைக்கான போராளிகள் என்பதை மறைத்து, தீவிரவாதிகள், போர்வெறியர்கள் என்று பேசி வருவதைப்போல, கேங்ஸ்டர்களாகவும், ஆயுதகடத்தல்காரர்களாகவும், குடியேறிய நாடுகளில் சட்டத்திற்குபுறம்பாகவும் நடந்துக்கொண்டார்கள் என இப்படம் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது இல்லையா


அகதிகள் மீதான கரிசனம் என்ற போர்வையில், இது ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் மீதான தாக்குதலாகவும் எடுத்துக்கொள்ள இடமிருக்கா இல்லையா


இப்படிப்பார்த்தால்இப்படம் ஏன் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டது என்பதற்கு காரணம் புரியத்துவங்குகிறது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்காக மட்டுமில்லாமல், அந்தந்த நாட்டு மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைவிட சிறந்த, பிறமொழிப்படங்கள் எல்லாம், இரண்டு மூன்று மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதே நெட்பிளிக்ஸில் இருக்கிறது என்கிறபோது, இப்படம் மட்டும் ஏன் இத்தனை மொழிகளில் வெளியிடப்படுகிறது

திட்டமிட்ட பரப்புரையா இது? அதில் கார்த்திக்கும், தனுஷும் தெரிந்தே உடன்பட்டார்களா? அல்லது தெரியாமலா


ஏன் கேட்கிறேன் என்றால்ஈழத்துக்கு ஆதரவாகவோ, புலிகளுக்கு ஆதரவாகவோ படமெடுத்தால், அது வெளிவருமா? அனுமதிப்பார்களா? மாட்டார்கள் தானேஎனில் எதிராக மட்டும் தொடர்ந்து படைப்புகள் வெளியாவது எப்படி என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?. 


1f914.png

1f914.png

1f914.png


கார்த்திக்கையும்ஜெகமே தந்திரத்தையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் போல…!


#JagameThandhiram

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால