முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெகமே தந்திரம் : ஒரு சந்தேகம்


உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கிறது. அதில் 190 நாடுகளில், 17 மொழிகளில்ஜெகமே தந்திரம்வெளியாகியிருக்கிறது. அதாவது உலக மக்கள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கிறது. அல்லது கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் படம் இத்தனை தூரம் பயணிப்பது மகிழ்ச்சிதான்


என்றாலும், வேறொரு சந்தேகம் வருகிறதேஅப்படி உலகம் முழுவதும் கொண்டுபோவதற்கு அப்படத்தில் என்ன இருக்கிறது


- தனுஷ் எனும் பெரிய நடிகர், அவர் இன்று ஹாலிவுட் வரை சென்றிருப்பதனால் உண்டான மார்கெட்

- கார்த்திக் சுப்புராஜ் எனும் கமெர்சியல் பட இயக்குநர்

- உலகம் முழுவதும் ரசிக்க ஏதுவான ஒரு கேக்ஸ்டர் கதை.  

- திரையரங்கு முடக்கம், OTT இன் வளர்ச்சி


அவ்வளவுதானா? இப்படம் இத்தனை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதற்கு இவை மட்டுமே போதுமான காரணங்களாக இருக்க முடியுமா

இல்லை என்றுதான், எனக்கு தோன்றுகிறது. இக்கதையும், அதில் சொல்லப்பட்ட அரசியலும் காரணமாக இருந்திருக்க வேண்டும்

அதாவது, அப்படத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒருவகையில் அதுவிடுதலைப்புலிகளைகுறிவைக்கிறது. அவர்கள் மீது சேறு வாரி இறைத்திருக்கிறது. உலகம் முழுவதும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக, அவர்கள் மீதான தடையை நீக்ககோரியும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் போராடிகொண்டிருக்கும் இச்சூழலில், இப்படம் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை, அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்கிறார்கள்


நாட்டின் விடுதலைக்கான போராளிகள் என்பதை மறைத்து, தீவிரவாதிகள், போர்வெறியர்கள் என்று பேசி வருவதைப்போல, கேங்ஸ்டர்களாகவும், ஆயுதகடத்தல்காரர்களாகவும், குடியேறிய நாடுகளில் சட்டத்திற்குபுறம்பாகவும் நடந்துக்கொண்டார்கள் என இப்படம் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது இல்லையா


அகதிகள் மீதான கரிசனம் என்ற போர்வையில், இது ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் மீதான தாக்குதலாகவும் எடுத்துக்கொள்ள இடமிருக்கா இல்லையா


இப்படிப்பார்த்தால்இப்படம் ஏன் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டது என்பதற்கு காரணம் புரியத்துவங்குகிறது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்காக மட்டுமில்லாமல், அந்தந்த நாட்டு மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைவிட சிறந்த, பிறமொழிப்படங்கள் எல்லாம், இரண்டு மூன்று மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதே நெட்பிளிக்ஸில் இருக்கிறது என்கிறபோது, இப்படம் மட்டும் ஏன் இத்தனை மொழிகளில் வெளியிடப்படுகிறது

திட்டமிட்ட பரப்புரையா இது? அதில் கார்த்திக்கும், தனுஷும் தெரிந்தே உடன்பட்டார்களா? அல்லது தெரியாமலா


ஏன் கேட்கிறேன் என்றால்ஈழத்துக்கு ஆதரவாகவோ, புலிகளுக்கு ஆதரவாகவோ படமெடுத்தால், அது வெளிவருமா? அனுமதிப்பார்களா? மாட்டார்கள் தானேஎனில் எதிராக மட்டும் தொடர்ந்து படைப்புகள் வெளியாவது எப்படி என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?. 


1f914.png

1f914.png

1f914.png


கார்த்திக்கையும்ஜெகமே தந்திரத்தையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் போல…!


#JagameThandhiram

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,