முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெகமே தந்திரம் : ஒரு சந்தேகம்


உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கிறது. அதில் 190 நாடுகளில், 17 மொழிகளில்ஜெகமே தந்திரம்வெளியாகியிருக்கிறது. அதாவது உலக மக்கள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கிறது. அல்லது கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் படம் இத்தனை தூரம் பயணிப்பது மகிழ்ச்சிதான்


என்றாலும், வேறொரு சந்தேகம் வருகிறதேஅப்படி உலகம் முழுவதும் கொண்டுபோவதற்கு அப்படத்தில் என்ன இருக்கிறது


- தனுஷ் எனும் பெரிய நடிகர், அவர் இன்று ஹாலிவுட் வரை சென்றிருப்பதனால் உண்டான மார்கெட்

- கார்த்திக் சுப்புராஜ் எனும் கமெர்சியல் பட இயக்குநர்

- உலகம் முழுவதும் ரசிக்க ஏதுவான ஒரு கேக்ஸ்டர் கதை.  

- திரையரங்கு முடக்கம், OTT இன் வளர்ச்சி


அவ்வளவுதானா? இப்படம் இத்தனை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதற்கு இவை மட்டுமே போதுமான காரணங்களாக இருக்க முடியுமா

இல்லை என்றுதான், எனக்கு தோன்றுகிறது. இக்கதையும், அதில் சொல்லப்பட்ட அரசியலும் காரணமாக இருந்திருக்க வேண்டும்

அதாவது, அப்படத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒருவகையில் அதுவிடுதலைப்புலிகளைகுறிவைக்கிறது. அவர்கள் மீது சேறு வாரி இறைத்திருக்கிறது. உலகம் முழுவதும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக, அவர்கள் மீதான தடையை நீக்ககோரியும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் போராடிகொண்டிருக்கும் இச்சூழலில், இப்படம் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை, அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்கிறார்கள்


நாட்டின் விடுதலைக்கான போராளிகள் என்பதை மறைத்து, தீவிரவாதிகள், போர்வெறியர்கள் என்று பேசி வருவதைப்போல, கேங்ஸ்டர்களாகவும், ஆயுதகடத்தல்காரர்களாகவும், குடியேறிய நாடுகளில் சட்டத்திற்குபுறம்பாகவும் நடந்துக்கொண்டார்கள் என இப்படம் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது இல்லையா


அகதிகள் மீதான கரிசனம் என்ற போர்வையில், இது ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் மீதான தாக்குதலாகவும் எடுத்துக்கொள்ள இடமிருக்கா இல்லையா


இப்படிப்பார்த்தால்இப்படம் ஏன் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டது என்பதற்கு காரணம் புரியத்துவங்குகிறது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்காக மட்டுமில்லாமல், அந்தந்த நாட்டு மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைவிட சிறந்த, பிறமொழிப்படங்கள் எல்லாம், இரண்டு மூன்று மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதே நெட்பிளிக்ஸில் இருக்கிறது என்கிறபோது, இப்படம் மட்டும் ஏன் இத்தனை மொழிகளில் வெளியிடப்படுகிறது

திட்டமிட்ட பரப்புரையா இது? அதில் கார்த்திக்கும், தனுஷும் தெரிந்தே உடன்பட்டார்களா? அல்லது தெரியாமலா


ஏன் கேட்கிறேன் என்றால்ஈழத்துக்கு ஆதரவாகவோ, புலிகளுக்கு ஆதரவாகவோ படமெடுத்தால், அது வெளிவருமா? அனுமதிப்பார்களா? மாட்டார்கள் தானேஎனில் எதிராக மட்டும் தொடர்ந்து படைப்புகள் வெளியாவது எப்படி என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?. 


1f914.png

1f914.png

1f914.png


கார்த்திக்கையும்ஜெகமே தந்திரத்தையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் போல…!


#JagameThandhiram

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...