முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ஒளிப்பதிவாளரை எப்படி மதிப்பிடுவது?



ஒளிப்பதிவு குறித்து, இங்கே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. எது சிறந்த ஒளிப்பதிவு? அதனை எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடுவது


பொதுவாக நாம் ஒளிப்பதிவை இப்படிதான் மதிப்பிடுகிறோம் … 


பளிச்சின்னு, கலர்ஃபுல்லா இருந்தது’ 


யோசித்துப்பாருங்கள்எத்தனை தடவை இந்த வாக்கியத்தை கேட்டிருப்போம், படித்திருப்போம், சொல்லியிருப்போம்…!?


உண்மையில், ஒளிப்பதிவு என்பது, பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருப்பது தான் சிறந்ததா? வண்ணமும், அழகும்தான் அளவுகோலா


இல்லை


ஒளிப்பதிவு என்று இல்லைஎல்லா கலைக்கும் அழகுணர்ச்சி என்பது அவசியம். அழகியல் என்பது, கலையின் பாகம்தான். ஆனால்அழகுமட்டுமே கலையாகாது


எனில், எது சிறந்த ஒளிப்பதிவு? யார் சிறந்த ஒளிப்பதிவாளர்?


ஒளிப்பதிவு என்பது….


- ஒரு காட்சியை பார்வையாளனுக்கு சரியாக கடத்த வேண்டும்


- முறையான கேமரா கோணம், கேமரா நகர்வு, ஒளியமைப்பு இருத்தல் வேண்டும்


- தேவையான தகவல்களை(மட்டும்) பார்வையாளனுக்கு கடத்துதல்தேவையில்லாத கவனச்சிதறலை தவிர்த்தல் வேண்டும். Composition, Framing போன்றவற்றில் மேதமை வேண்டும்


- காட்சியின் நம்பத்தன்மையை அதிகரிக்கும்வகையில் ஒளியமைப்பு இருத்தல் வேண்டும். கதை நடக்கும் சூழலில், அந்நேரத்தில் ஒளி எப்படி இருக்குமோ அப்படி இருத்தல் அவசியம். கூடவே அவ்வொளிக்கான மூலத்தை (Source of Light) நிறுவுதல் அவசியம். அப்போதுதான் அக்காட்சி பார்வையாளனுக்குள் நம்பகத்தன்மையை கொடுக்கும்


- ஒளியை முறையாக பயன்படுத்துவது. 2D ஃப்ரேமில், 3D தன்மையை கொண்டுவரபல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. Half Light, Back Light, High Light, Shadow, Contrast என பலவற்றை முறையாக அணுகி ஒளி அமைக்க வேண்டும்


- வண்ணங்களை நுட்பமாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்


- கூடவேஅழகுணர்ச்சியும் வேண்டும்


அதாவதுஒளிப்பதிவு என்பதுதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கலை படைத்தல்ஆகும்.  


கலை என்பது என்ன? மனித மனங்களோடு உறவாடுவதுஉரையாடுவது


ஒளிப்பதிவும் அப்படித்தான். மனித மனங்களோடு உறவாட வேண்டும். காட்சியின் உணர்வை, உயிர்ப்போடும், நம்பகதன்மையோடும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். அழகும், பளிச்சென்ற வண்ணமும்ஐஸ்கிரிமுக்கு மேலே தூவப்படும்டாப்பின்ஸ்போலத்தான். கூடுதல் சுவை


அழகு மட்டும் மிகுந்தால்… ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்கதைதான்


பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருக்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனா சிறந்த ஒளிப்பதிவாக முடியாது


எனில், ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் யார்


தன் படைப்பில், ‘தான்துருத்திக்கொண்டு தெரியாதவரேசிறந்தவர்


அப்படி என்றால்


ஒரு ஒளிப்பதிவாளர், தான் கற்று வைத்த வித்தைகளை, தன்னுடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க கூடாது. ஒரே வகையான ஒளிப்பதிவை எல்லா கதைகளுக்கு பொறுத்தக்கூடாது


ஒரு படத்தை பார்த்தால் போதும், இது இன்னாருடைய ஒளிப்பதிவு என்று சொல்லிவிடக்கூடாது. அப்படி இருந்தால், அநேகமாக அது தவறான ஒளிப்பதிவாகக்கூட இருக்கலாம்


கதையும், கதை நகரும்விதமும் தான் ஒளிப்பதிவு பாணியை நிர்ணயிக்க வேண்டுமே தவிரஒளிப்பதிவாளரின்ஸ்டைல்அல்ல


ஒருதிரைப்படத்தை பார்க்கும் போது, முந்திரிக்கொட்டையாக துருத்திக்கொண்டிராத ஒளிப்பதிவாளரேகவனிக்கப்பட வேண்டியவர்


கதையை, அதன் உணர்வை, நீங்கள் எவ்வித பிராயத்தனமும் படாமல், உங்களுக்குள் அனுப்பி வைப்பவரே சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை உணர்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால