முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ஒளிப்பதிவாளரை எப்படி மதிப்பிடுவது?



ஒளிப்பதிவு குறித்து, இங்கே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. எது சிறந்த ஒளிப்பதிவு? அதனை எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடுவது


பொதுவாக நாம் ஒளிப்பதிவை இப்படிதான் மதிப்பிடுகிறோம் … 


பளிச்சின்னு, கலர்ஃபுல்லா இருந்தது’ 


யோசித்துப்பாருங்கள்எத்தனை தடவை இந்த வாக்கியத்தை கேட்டிருப்போம், படித்திருப்போம், சொல்லியிருப்போம்…!?


உண்மையில், ஒளிப்பதிவு என்பது, பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருப்பது தான் சிறந்ததா? வண்ணமும், அழகும்தான் அளவுகோலா


இல்லை


ஒளிப்பதிவு என்று இல்லைஎல்லா கலைக்கும் அழகுணர்ச்சி என்பது அவசியம். அழகியல் என்பது, கலையின் பாகம்தான். ஆனால்அழகுமட்டுமே கலையாகாது


எனில், எது சிறந்த ஒளிப்பதிவு? யார் சிறந்த ஒளிப்பதிவாளர்?


ஒளிப்பதிவு என்பது….


- ஒரு காட்சியை பார்வையாளனுக்கு சரியாக கடத்த வேண்டும்


- முறையான கேமரா கோணம், கேமரா நகர்வு, ஒளியமைப்பு இருத்தல் வேண்டும்


- தேவையான தகவல்களை(மட்டும்) பார்வையாளனுக்கு கடத்துதல்தேவையில்லாத கவனச்சிதறலை தவிர்த்தல் வேண்டும். Composition, Framing போன்றவற்றில் மேதமை வேண்டும்


- காட்சியின் நம்பத்தன்மையை அதிகரிக்கும்வகையில் ஒளியமைப்பு இருத்தல் வேண்டும். கதை நடக்கும் சூழலில், அந்நேரத்தில் ஒளி எப்படி இருக்குமோ அப்படி இருத்தல் அவசியம். கூடவே அவ்வொளிக்கான மூலத்தை (Source of Light) நிறுவுதல் அவசியம். அப்போதுதான் அக்காட்சி பார்வையாளனுக்குள் நம்பகத்தன்மையை கொடுக்கும்


- ஒளியை முறையாக பயன்படுத்துவது. 2D ஃப்ரேமில், 3D தன்மையை கொண்டுவரபல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. Half Light, Back Light, High Light, Shadow, Contrast என பலவற்றை முறையாக அணுகி ஒளி அமைக்க வேண்டும்


- வண்ணங்களை நுட்பமாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்


- கூடவேஅழகுணர்ச்சியும் வேண்டும்


அதாவதுஒளிப்பதிவு என்பதுதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கலை படைத்தல்ஆகும்.  


கலை என்பது என்ன? மனித மனங்களோடு உறவாடுவதுஉரையாடுவது


ஒளிப்பதிவும் அப்படித்தான். மனித மனங்களோடு உறவாட வேண்டும். காட்சியின் உணர்வை, உயிர்ப்போடும், நம்பகதன்மையோடும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். அழகும், பளிச்சென்ற வண்ணமும்ஐஸ்கிரிமுக்கு மேலே தூவப்படும்டாப்பின்ஸ்போலத்தான். கூடுதல் சுவை


அழகு மட்டும் மிகுந்தால்… ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்கதைதான்


பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருக்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனா சிறந்த ஒளிப்பதிவாக முடியாது


எனில், ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் யார்


தன் படைப்பில், ‘தான்துருத்திக்கொண்டு தெரியாதவரேசிறந்தவர்


அப்படி என்றால்


ஒரு ஒளிப்பதிவாளர், தான் கற்று வைத்த வித்தைகளை, தன்னுடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க கூடாது. ஒரே வகையான ஒளிப்பதிவை எல்லா கதைகளுக்கு பொறுத்தக்கூடாது


ஒரு படத்தை பார்த்தால் போதும், இது இன்னாருடைய ஒளிப்பதிவு என்று சொல்லிவிடக்கூடாது. அப்படி இருந்தால், அநேகமாக அது தவறான ஒளிப்பதிவாகக்கூட இருக்கலாம்


கதையும், கதை நகரும்விதமும் தான் ஒளிப்பதிவு பாணியை நிர்ணயிக்க வேண்டுமே தவிரஒளிப்பதிவாளரின்ஸ்டைல்அல்ல


ஒருதிரைப்படத்தை பார்க்கும் போது, முந்திரிக்கொட்டையாக துருத்திக்கொண்டிராத ஒளிப்பதிவாளரேகவனிக்கப்பட வேண்டியவர்


கதையை, அதன் உணர்வை, நீங்கள் எவ்வித பிராயத்தனமும் படாமல், உங்களுக்குள் அனுப்பி வைப்பவரே சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை உணர்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...