முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ஒளிப்பதிவாளரை எப்படி மதிப்பிடுவது?



ஒளிப்பதிவு குறித்து, இங்கே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. எது சிறந்த ஒளிப்பதிவு? அதனை எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடுவது


பொதுவாக நாம் ஒளிப்பதிவை இப்படிதான் மதிப்பிடுகிறோம் … 


பளிச்சின்னு, கலர்ஃபுல்லா இருந்தது’ 


யோசித்துப்பாருங்கள்எத்தனை தடவை இந்த வாக்கியத்தை கேட்டிருப்போம், படித்திருப்போம், சொல்லியிருப்போம்…!?


உண்மையில், ஒளிப்பதிவு என்பது, பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருப்பது தான் சிறந்ததா? வண்ணமும், அழகும்தான் அளவுகோலா


இல்லை


ஒளிப்பதிவு என்று இல்லைஎல்லா கலைக்கும் அழகுணர்ச்சி என்பது அவசியம். அழகியல் என்பது, கலையின் பாகம்தான். ஆனால்அழகுமட்டுமே கலையாகாது


எனில், எது சிறந்த ஒளிப்பதிவு? யார் சிறந்த ஒளிப்பதிவாளர்?


ஒளிப்பதிவு என்பது….


- ஒரு காட்சியை பார்வையாளனுக்கு சரியாக கடத்த வேண்டும்


- முறையான கேமரா கோணம், கேமரா நகர்வு, ஒளியமைப்பு இருத்தல் வேண்டும்


- தேவையான தகவல்களை(மட்டும்) பார்வையாளனுக்கு கடத்துதல்தேவையில்லாத கவனச்சிதறலை தவிர்த்தல் வேண்டும். Composition, Framing போன்றவற்றில் மேதமை வேண்டும்


- காட்சியின் நம்பத்தன்மையை அதிகரிக்கும்வகையில் ஒளியமைப்பு இருத்தல் வேண்டும். கதை நடக்கும் சூழலில், அந்நேரத்தில் ஒளி எப்படி இருக்குமோ அப்படி இருத்தல் அவசியம். கூடவே அவ்வொளிக்கான மூலத்தை (Source of Light) நிறுவுதல் அவசியம். அப்போதுதான் அக்காட்சி பார்வையாளனுக்குள் நம்பகத்தன்மையை கொடுக்கும்


- ஒளியை முறையாக பயன்படுத்துவது. 2D ஃப்ரேமில், 3D தன்மையை கொண்டுவரபல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. Half Light, Back Light, High Light, Shadow, Contrast என பலவற்றை முறையாக அணுகி ஒளி அமைக்க வேண்டும்


- வண்ணங்களை நுட்பமாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்


- கூடவேஅழகுணர்ச்சியும் வேண்டும்


அதாவதுஒளிப்பதிவு என்பதுதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கலை படைத்தல்ஆகும்.  


கலை என்பது என்ன? மனித மனங்களோடு உறவாடுவதுஉரையாடுவது


ஒளிப்பதிவும் அப்படித்தான். மனித மனங்களோடு உறவாட வேண்டும். காட்சியின் உணர்வை, உயிர்ப்போடும், நம்பகதன்மையோடும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். அழகும், பளிச்சென்ற வண்ணமும்ஐஸ்கிரிமுக்கு மேலே தூவப்படும்டாப்பின்ஸ்போலத்தான். கூடுதல் சுவை


அழகு மட்டும் மிகுந்தால்… ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்கதைதான்


பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருக்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனா சிறந்த ஒளிப்பதிவாக முடியாது


எனில், ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் யார்


தன் படைப்பில், ‘தான்துருத்திக்கொண்டு தெரியாதவரேசிறந்தவர்


அப்படி என்றால்


ஒரு ஒளிப்பதிவாளர், தான் கற்று வைத்த வித்தைகளை, தன்னுடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க கூடாது. ஒரே வகையான ஒளிப்பதிவை எல்லா கதைகளுக்கு பொறுத்தக்கூடாது


ஒரு படத்தை பார்த்தால் போதும், இது இன்னாருடைய ஒளிப்பதிவு என்று சொல்லிவிடக்கூடாது. அப்படி இருந்தால், அநேகமாக அது தவறான ஒளிப்பதிவாகக்கூட இருக்கலாம்


கதையும், கதை நகரும்விதமும் தான் ஒளிப்பதிவு பாணியை நிர்ணயிக்க வேண்டுமே தவிரஒளிப்பதிவாளரின்ஸ்டைல்அல்ல


ஒருதிரைப்படத்தை பார்க்கும் போது, முந்திரிக்கொட்டையாக துருத்திக்கொண்டிராத ஒளிப்பதிவாளரேகவனிக்கப்பட வேண்டியவர்


கதையை, அதன் உணர்வை, நீங்கள் எவ்வித பிராயத்தனமும் படாமல், உங்களுக்குள் அனுப்பி வைப்பவரே சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை உணர்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,