முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Family Man 2:



முதல் பாகத்திலிருந்து பார்த்தேன்

தீவிரவாதத்தைத் தடுக்கும் அதிகாரியும், அவர்தம் வாழ்வும். இந்த டெம்ப்லெட், உலக சினிமா வரலாற்றில் அரதபழசானது, என்றாலும் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிறப்பான எழுத்து, ஆக்கம். இரசிக்கலாம்


இரண்டாம் பாகத்தின் பரபரப்பான சண்டைக்காட்சிகள், இரண்டு சீசனிலும் கதாப்பாத்திரங்களின் பரஸ்பர அன்பு, நட்பு, உறவுகளை காட்சிப்படுத்தியவிதம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல்வேறு நுட்பங்களை பாராட்டலாம்


முதல் சீசனில், இஸ்லாமிய தீவரவாதம். பாகிஸ்தானும், காஷ்மீரியர்களும் பலி ஆடுகள். இரண்டாம் பாகத்தில் விடுதலைப்புலிகளும், தமிழர்களும்

ஆட்டம் சுவாரசியமாக இருப்பதற்காக, தகுடுத்தத்தம் செய்யக்கூடாது. வெகுசன சினிமா, பொழுதுபோக்கு என்றாலும் பொய்ப்பேசக்கூடாது, அவதூறு செய்யக்கூடாது.


வெகுசன புத்தி என்பது, மீடியாக்களால் கட்டமைக்கப்படுவது. உண்மையோ பொய்யோ, அரசும் மீடியாவும் விரும்பும் திசையிலேயே பொதுபுத்தி சிந்திக்க வைக்கப்படுகிறது. எனில், கலையின் பணி என்ன? அதற்கு தூபம் போடுவதா? அரைத்த மாவை மேலும் அரைத்து வைப்பதா


பத்திரிக்கையில் வந்த செய்திகளின் அடிப்படையில்என்று கார்டு போடுகிறார்கள். என்றாலும், பல்வேறு பொய் செய்திகள் தொடர் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது. வெகுசன ஊடகங்கள் கடைபிடிக்கும் அதே போக்கை, படைப்பாளிகளும் கடைபிடிக்க கூடாது


நிகழ்ந்ததை வெவ்வேறு பார்வையில் இருந்து புரிந்துகொள்வது என்பது வேறு, நிகழாத ஒன்றை நிகழ்ந்தவற்றோடு இணைத்து பரப்பி விடுவது வேறு. இத்தொடர் அதை பல இடங்களில் செய்கிறது. பார்வையாளனால் எது நடந்தது, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாது. எல்லாவற்றையும் நம்புவான், காரணம் அவன் அறிந்த, செய்திகளில் அடிப்பட்ட, நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவுறுத்தும்படியான காட்சிகளுக்கிடையே அவை பொதிந்துக்கிடக்கின்றன


சினிமாட்டிக் எக்ஸ்பிரியன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்திவிடும் போக்கு நம்மிடைய நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தொடரிலும் அது தொடர்கிறது. அப்படி செய்யலாமா, செய்யக்கூடாதா என்பது நீண்ட விவாதத்திற்கு உட்பட்டது

குறிப்பாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படமெடுக்கும் படைப்பாளிகளுக்கென்று ஒரு அறம் இருக்க வேண்டும். அது


எவ்வகையிலும் உண்மையை திசைதிருப்பி விடக்கூடாது’ 


என்பதுதான்


Family Man படைப்பாளிகளுக்கு அந்த அறம் இல்லவே இல்லை

மற்றபடி, உண்மை ஒருபோதும் மறைந்து விடுவதில்லை. அதன் மீது எவ்வளவு புழுதி படிந்தாலும் என்பது நாம் அறிந்ததுதான்


#familymanseason2 #familyman2 #familyman2_against_tamils #family_man_against_truth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால