முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Family Man 2:



முதல் பாகத்திலிருந்து பார்த்தேன்

தீவிரவாதத்தைத் தடுக்கும் அதிகாரியும், அவர்தம் வாழ்வும். இந்த டெம்ப்லெட், உலக சினிமா வரலாற்றில் அரதபழசானது, என்றாலும் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிறப்பான எழுத்து, ஆக்கம். இரசிக்கலாம்


இரண்டாம் பாகத்தின் பரபரப்பான சண்டைக்காட்சிகள், இரண்டு சீசனிலும் கதாப்பாத்திரங்களின் பரஸ்பர அன்பு, நட்பு, உறவுகளை காட்சிப்படுத்தியவிதம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல்வேறு நுட்பங்களை பாராட்டலாம்


முதல் சீசனில், இஸ்லாமிய தீவரவாதம். பாகிஸ்தானும், காஷ்மீரியர்களும் பலி ஆடுகள். இரண்டாம் பாகத்தில் விடுதலைப்புலிகளும், தமிழர்களும்

ஆட்டம் சுவாரசியமாக இருப்பதற்காக, தகுடுத்தத்தம் செய்யக்கூடாது. வெகுசன சினிமா, பொழுதுபோக்கு என்றாலும் பொய்ப்பேசக்கூடாது, அவதூறு செய்யக்கூடாது.


வெகுசன புத்தி என்பது, மீடியாக்களால் கட்டமைக்கப்படுவது. உண்மையோ பொய்யோ, அரசும் மீடியாவும் விரும்பும் திசையிலேயே பொதுபுத்தி சிந்திக்க வைக்கப்படுகிறது. எனில், கலையின் பணி என்ன? அதற்கு தூபம் போடுவதா? அரைத்த மாவை மேலும் அரைத்து வைப்பதா


பத்திரிக்கையில் வந்த செய்திகளின் அடிப்படையில்என்று கார்டு போடுகிறார்கள். என்றாலும், பல்வேறு பொய் செய்திகள் தொடர் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது. வெகுசன ஊடகங்கள் கடைபிடிக்கும் அதே போக்கை, படைப்பாளிகளும் கடைபிடிக்க கூடாது


நிகழ்ந்ததை வெவ்வேறு பார்வையில் இருந்து புரிந்துகொள்வது என்பது வேறு, நிகழாத ஒன்றை நிகழ்ந்தவற்றோடு இணைத்து பரப்பி விடுவது வேறு. இத்தொடர் அதை பல இடங்களில் செய்கிறது. பார்வையாளனால் எது நடந்தது, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாது. எல்லாவற்றையும் நம்புவான், காரணம் அவன் அறிந்த, செய்திகளில் அடிப்பட்ட, நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவுறுத்தும்படியான காட்சிகளுக்கிடையே அவை பொதிந்துக்கிடக்கின்றன


சினிமாட்டிக் எக்ஸ்பிரியன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்திவிடும் போக்கு நம்மிடைய நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தொடரிலும் அது தொடர்கிறது. அப்படி செய்யலாமா, செய்யக்கூடாதா என்பது நீண்ட விவாதத்திற்கு உட்பட்டது

குறிப்பாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படமெடுக்கும் படைப்பாளிகளுக்கென்று ஒரு அறம் இருக்க வேண்டும். அது


எவ்வகையிலும் உண்மையை திசைதிருப்பி விடக்கூடாது’ 


என்பதுதான்


Family Man படைப்பாளிகளுக்கு அந்த அறம் இல்லவே இல்லை

மற்றபடி, உண்மை ஒருபோதும் மறைந்து விடுவதில்லை. அதன் மீது எவ்வளவு புழுதி படிந்தாலும் என்பது நாம் அறிந்ததுதான்


#familymanseason2 #familyman2 #familyman2_against_tamils #family_man_against_truth

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...