முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (2)



திரைப்படக்கல்லூரி என்று ஒன்று உண்டு. அங்கே ஒளிப்பதிவுத்துறைக்கென்று படிப்பும் இருக்கிறது என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்காரன் அல்லவா!  இயற்பியல், கணினி என சிலவற்றை படிக்க விரும்பி, பின்பு தந்தையின் விருப்பத்தின் பேரில், பெங்களூரில் சட்டப் படிப்பில் சேர்த்துவிடப்பட்டேன். முதலில் அது வருத்தமாக இருந்தபோதும், பெங்களூர்என்பதனால் சமாதானம் ஆகிக்கொண்டேன்.  


பிறந்ததிலிருந்து கிராமத்திலேயே வளர்ந்த ஒருவனுக்கு பெங்களூர் போன்ற பெரும் நகரம் கொடுத்த பரவசத்தை எப்படிச்சொல்ல!?, குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இடைப்பட்ட தட்பவெப்ப நிலையில் இருக்கும் அந்த ஊர், மரங்களால் சூழப்பட்ட அதன் சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், பெரிய பெரிய திரையரங்குகள், பரந்துவிரிந்த பார்க்குகள் என்று நகரம் முழுவதும் சுவாரசியத்தை உள்ளடக்கி வைத்திருந்த அந்த ஊர், என்னுடைய கல்லூரி காலத்தை அர்த்தமுள்ளதாக்கியது


அங்கே வாரத்திற்கு நான்கு திரைப்படங்களைப் பார்த்துவிடுவேன். அப்போது பார்ந்த ஆங்கிலப்படங்கள்தான் என்னுடைய ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற ஆசைத்தீயில் மேலும் நெய்யை ஊற்றின


அதேநேரம்வாசித்தல்எனும் பழக்கமும் அதிகரித்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும்படிப்புஇருக்கிறது என்னும் உண்மையை கதைப்புத்தகங்கள் எனக்கு உணர்த்தியிருந்தன. ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, ஓஷோ, சுரா, கிரா, திஜா..என்றும் தேடித்தேடி வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கு தொடர்பு உண்டு என்பதை நம்பத்துவங்கிருந்தேன். சொல்லப்போனால், அதுதான் தூரம் குறைந்தகுறுக்கு வழிஎன்ற எண்ணமும் இருந்தது


ஒளிப்பதிவாளனாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடத்துவங்கினேன். சட்டப்படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாம் விரும்பும் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளுவது எப்படி..? அதற்கான தகுதிகள் என்னென்ன? அதை வளர்ந்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஒளிப்பதிவாளனாவதற்கு அடிப்படை, ஒரு புகைப்படக்காரனாக இருப்பது என்பதும், ஒளிப்பதிவுத்துறைக்கு அடிப்படை புகைப்படத்துறை என்பதையும் அறிந்துக்கொண்டேன். மேலும், திரைப்படங்களைப் பார்ப்பதும், சிறந்த ஒளிப்பதிவாளர்களை அடையாளம் காணுவதும், அவர்களின் நுட்பங்களை கவனிப்பதும் அவசியம் என்பதையும் புரிந்துக்கொண்டேன். பின்பு, புகைப்படக் கேமராக்களை பழுது பார்க்கும் கடை ஒன்றில் பகுதி நேர ஊழியனாக சேர்ந்து, பல புகைப்படக் கேமராக்களை பற்றி அறிந்துக்கொண்டதும், புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றதும், அதன் வழி பெற்ற அனுபவத்தில்ஆனந்த விகடன்இதழில்மாணவ பத்திரிக்கையாளனாகஇணைந்ததும், கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு ரயில் ஏறியதும் நான் கடந்து வந்த பாதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு