முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (2)



திரைப்படக்கல்லூரி என்று ஒன்று உண்டு. அங்கே ஒளிப்பதிவுத்துறைக்கென்று படிப்பும் இருக்கிறது என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்காரன் அல்லவா!  இயற்பியல், கணினி என சிலவற்றை படிக்க விரும்பி, பின்பு தந்தையின் விருப்பத்தின் பேரில், பெங்களூரில் சட்டப் படிப்பில் சேர்த்துவிடப்பட்டேன். முதலில் அது வருத்தமாக இருந்தபோதும், பெங்களூர்என்பதனால் சமாதானம் ஆகிக்கொண்டேன்.  


பிறந்ததிலிருந்து கிராமத்திலேயே வளர்ந்த ஒருவனுக்கு பெங்களூர் போன்ற பெரும் நகரம் கொடுத்த பரவசத்தை எப்படிச்சொல்ல!?, குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இடைப்பட்ட தட்பவெப்ப நிலையில் இருக்கும் அந்த ஊர், மரங்களால் சூழப்பட்ட அதன் சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், பெரிய பெரிய திரையரங்குகள், பரந்துவிரிந்த பார்க்குகள் என்று நகரம் முழுவதும் சுவாரசியத்தை உள்ளடக்கி வைத்திருந்த அந்த ஊர், என்னுடைய கல்லூரி காலத்தை அர்த்தமுள்ளதாக்கியது


அங்கே வாரத்திற்கு நான்கு திரைப்படங்களைப் பார்த்துவிடுவேன். அப்போது பார்ந்த ஆங்கிலப்படங்கள்தான் என்னுடைய ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற ஆசைத்தீயில் மேலும் நெய்யை ஊற்றின


அதேநேரம்வாசித்தல்எனும் பழக்கமும் அதிகரித்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும்படிப்புஇருக்கிறது என்னும் உண்மையை கதைப்புத்தகங்கள் எனக்கு உணர்த்தியிருந்தன. ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, ஓஷோ, சுரா, கிரா, திஜா..என்றும் தேடித்தேடி வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கு தொடர்பு உண்டு என்பதை நம்பத்துவங்கிருந்தேன். சொல்லப்போனால், அதுதான் தூரம் குறைந்தகுறுக்கு வழிஎன்ற எண்ணமும் இருந்தது


ஒளிப்பதிவாளனாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடத்துவங்கினேன். சட்டப்படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாம் விரும்பும் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளுவது எப்படி..? அதற்கான தகுதிகள் என்னென்ன? அதை வளர்ந்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஒளிப்பதிவாளனாவதற்கு அடிப்படை, ஒரு புகைப்படக்காரனாக இருப்பது என்பதும், ஒளிப்பதிவுத்துறைக்கு அடிப்படை புகைப்படத்துறை என்பதையும் அறிந்துக்கொண்டேன். மேலும், திரைப்படங்களைப் பார்ப்பதும், சிறந்த ஒளிப்பதிவாளர்களை அடையாளம் காணுவதும், அவர்களின் நுட்பங்களை கவனிப்பதும் அவசியம் என்பதையும் புரிந்துக்கொண்டேன். பின்பு, புகைப்படக் கேமராக்களை பழுது பார்க்கும் கடை ஒன்றில் பகுதி நேர ஊழியனாக சேர்ந்து, பல புகைப்படக் கேமராக்களை பற்றி அறிந்துக்கொண்டதும், புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றதும், அதன் வழி பெற்ற அனுபவத்தில்ஆனந்த விகடன்இதழில்மாணவ பத்திரிக்கையாளனாகஇணைந்ததும், கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு ரயில் ஏறியதும் நான் கடந்து வந்த பாதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...