முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (3)


சென்னையில், நான் எதிர்கொண்ட கேள்விக்கான பதில், மேல் கூறிய என் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது என்பதை நீங்களும் நானும் புரிந்துக்கொள்ளலாம்தான். ஆயினும், அக்கேள்வி இன்னும்  ஆழமானது என்பதாக உணர்கிறேன். அதற்கான பதிலை அக்கேள்வியை எதிர்கொண்ட பிறகே தேடத்துவங்கினேன். அத்தேடல் என் பால்ய காலம் வரை நீண்டு சென்றது என்பதுதான் ஆச்சரியம்.


நான் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்..? எனக்கு ஏன் ஒளிப்பதிவு பிடித்தது..?” இதுதான் ஆதாரக்கேள்வி.


ஏன் என்றால் எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும். சரி.. திரைப்படங்கள் பிடிக்குமென்றால் இயக்குநராகவோ, நடிகனாகவோ, பாடலாசிரியராகவோ, இசையமைப்பாளனாகவோ, கதை வசனகர்த்தாகவோ அல்லவா முயன்று இருக்கவேண்டும்..! அதை எல்லாம் விடுத்து, ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..!? இதற்கான பதில், என் பால்யத்திலிருந்து என்னைத் தொடர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன்


சிறுவயதில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள், அதன் உந்துதலில் வரைதல் என்ற பெயரில் கிறுக்கிய கோடுகள், குடும்ப விழாக்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம், புகைப்படம் எடுக்கப்படுவதை விட, எடுப்பதில் காட்டிய ஆர்வம் என அதன் வேர்கள் எங்கோ பரவி விரிந்து கிடப்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது


படம் பார்த்து கதை சொல்லும் அச்சிறுவயது ஆர்வமும், பரவசமும் தான் பிற்காலத்தில் காட்சிகளின் மீதும் பிம்பங்களின் மீது ஆர்வத்தை தூண்டியன என்பதை யோசித்துப் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், இசையின் மீதிருந்த ஆர்வம், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், பயணங்கள் மீதிருந்த ஆர்வம் என பல காரணிகள் இருக்கின்றன, நான் ஏன் ஒளிப்பதிவுத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கு.


பின்பு, அக்கேள்வியை எதிர்கொண்ட போதெல்லாம் என் பதில் இப்படியாக இருந்தது..


ஏன் என்றால்.. எனக்கு காமிக்ஸ் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு ஓவியம் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புகைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு இசை பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு பயணங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு அழகு பிடிக்கும்


ஏன் என்றால்.. எனக்கு கனவு பிடிக்கும்


உண்மையில், ஓர் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கு ரசனையே அடிப்படை


ரசிக்கும் தன்மையே உங்களை ஒரு படைப்பாளியாக மாற்றும்


சக உயிர்களின் மீதான அன்பும், கருணையுமே உங்களை மனிதனாக மாற்றும்


அன்பும், கருணையும் உங்கள் ஆத்மாவோடு தொடர்புடையவை, ரசனையும், அழகுணர்ச்சியும் உங்கள் மனதோடு தொடர்புடையவை, அறவுணர்ச்சியும், சுய ஒழுக்கமும் உங்கள் நேர்மையோடு தொடர்புடையவை…!


அழகும் கற்பனைனையும் இணையும் போது படைப்பு பிறக்கிறது. அதோடு மனிதமும், அறமும் இணையும் போது கலைப் பிறக்கிறது


(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

Red One 'EPIC' - ஒரு அறிமுகம்

"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்" “Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand --------------------------------------------------------------------------------------------------------------- திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பம் வளர்ந்துவரும் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என அனைத்தையும்தான் குறிக்கிறது. ஒரு திரைப்படத் தயாரிப்பின் மொத்த வேலைகளையும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் செய்துவிட முடியும் என்பது இன்றைய நிதர்சனம். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதைச் செயல்படுத்தாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு